திருவள்ளுவர் ஆண்டு :
கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு
திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.
(உதாரணமாக 2013 ம் ஆண்டுடன் 31 ஐ கூட்ட வருவது
திருவள்ளுவர் ஆண்டு. அதாவது கிறிஸ்துவ ஆண்டு 2013 எனில் திருவள்ளுவர் ஆண்டு 2044 ஆகும். )
வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.
• அன்புடைமை
• அடக்கமுடைமை
• ஒழுக்கமுடைமை
• பொறையுடைமை
• அருளுடைமை
• அறிவுடைமை
• ஊக்கமுடைமை
• ஆள்வினையுடைமை
• பண்புடைமை
• நாணுடைமை
சிறப்பு குறள்கள்
• ஒரே எழுத்தில் முடியும் குறள்:
'"தொடிற்கடின் அல்லது காமநோய் போல
விடிற்கடின் ஆற்றுமோ தீ"
• 1.5.7 என்ற பகா எண்களை குறிப்பிடும் குறள்:
"ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறல்.
• பால், தேன், நீர் என்ற மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ள குறள் :
பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறல்.
• துணை எழுத்தே இல்லாத குறள் :
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)
• ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ள குறள்:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
• ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
தினம் தினம் திருக்குறள் 01
Super sir
பதிலளிநீக்குLast point no available answer sir, please consider that.
பதிலளிநீக்குminnal vega kanitham