Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Gr I, II, IIA (unit 8), IV important questions slip test

9ஆம் வகுப்பு  தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை


1. இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை -
... விடை : 4



2. இந்தியா நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்
... விடை : ச. அகத்தியலிங்கம்



3. திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
... விடை : குமரிலபட்டர்


4. தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடம் என்னும் சொல் பிறந்தது என்று கூறியவர்
... விடை : ஹீராஸ் பாதிரியார்



5. எந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியமொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலமொழி என்று அறிஞர்கள் கருதினார்?
... விடை : 18ஆம் நூற்றாண்டு



6. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்டவர் ... விடை : வில்லியம் ஜோன்ஸ்



7. முதன்முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
... விடை : பிரான்சிஸ் எல்லிஸ்



8. ஹோக்கன் என்பவர் குறிப்பிடும் ‘தமிழியன்’ என்ற மொழிக்குடும்பத்தில் இடம்பெற்றுள்ள மொழிகள் யாவை?
... விடை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி



9. கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வெளிவந்த ஆண்டு
... விடை : 1856



10. திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள்
... விடை : 3



11. எது பொருந்தாது? அ) தோடா ஆ) கோண்டா இ) கொரகா ஈ) இருளா
... விடை : ஆ (விளக்கம் : மற்றவை தென் திராவிடம்)



12. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் குறிப்பிடுக.
... விடை : எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா



13. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி...” எனக் கூறியவர்
... விடை : கால்டுவெல்



14. ‘ஃகன்’ என்ற அடிச்சொல் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : குரூக்



15. ‘மூணு’ என்ற எண்ணுப் பெயர் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : மலையாளம்



16. ‘ராமசரிதம்’ என்ற இலக்கண நூல் எந்தத் திராவிட மொழினுடையது?
... விடை : மலையாளம்



17. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
... விடை : மொரிசியஸ், இலங்கை



18. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” இது யாருடைய கூற்று?
... விடை : ஈரோடு தமிழன்பன்



19. ‘இனிமையும் நிமையும் தமிழெனல் ஆகும்’ எனும் வரிகள் இடம்பெற்ற நூல்
... விடை : பிங்கல நிகண்டு (பிங்கலர்)



20. முக்குணங்களில் அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்
... விடை : சத்துவம்



21. ‘சந்து இலக்கியம்’ என அழைக்கப்படும் சிற்றிலக்கியம்
... விடை : தூது



22. “நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க” எனப் பாடியவர்
... விடை : கவியோகி சுத்தானந்த பாரதியார்



23. 1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர்
... விடை : சார் ஆர்தர் காட்டன்



24. ‘கடலாடுதல்’ என்பது எப்போது நடைபெறும் நிகழ்வு
... விடை : திருமணம்



25. தமிழர் மரபில் “நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” எனக் கூறியவர்
... விடை : பேராசிரியர் தொ. பரமசிவன்



26. ‘மாதவி காவியம்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : தமிழ் ஒளி



27. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனும் புறநானூற்று பாடல் வரியினைப் பாடியவர்
... விடை : குடபுலவியனார்



28. ‘ஒவ்வொரு கல்லாய்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : கந்தர்வன் (இயற்பெயர் – நாகலிங்கம்)



29. ‘கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : மா. அமரேசன்



30. ‘எருது கட்டி’ என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் குறிப்பிடும் பள்ளு
... விடை : கண்ணுடையம்மன் பள்ளு



31. ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
... விடை : மணிமேகலை



32. ‘நன்னூற்புலவன்’ என்று அழைக்கப்படுபவர்
... விடை : இளங்கோவடிகள்



33. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
... விடை : திருவாசகம்



34. ‘தமிழர் சால்பு’ என்ற நூலின் ஆசிரியர்
... விடை : சு. வித்யானந்தன்



35. பிற வழிகளில் வரும் செல்வங்களைவிட, ‘தலைச் சிறந்த செல்வம்’ என வள்ளுவர் குறிப்பிடுவது
... விடை : கேள்விச் செல்வம்.



36. “........................................................ ஆவியினும் வாழினும் என்.” எனும் குறள் வழியே வள்ளுவர் உணர்த்தும் கருத்து
... விடை : கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர் இறந்தால் என்ன! இருந்தால் என்ன!



37. “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் ......................................................” விடுபட்ட சீரினை நிரப்புக.
... விடை : தீரா இடும்பை தரும்



38. திருக்குறளில் இடம்பெற்ற மரங்களின் எண்ணிக்கை
... விடை : 2 (பனை, மூங்கில்)



39. உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு
... விடை : 1938



40. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்
... விடை : ஹாங்க் மாக்னஸ்கி



கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham