கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. |
---|
அ) இயற்கை - செயற்கை
இயற்கையுடன் வாழ் செயற்கையுடன் வாழாதே. ஆ) கொடு - கோடு மணி கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தேன். இ) கொள் - கோள் கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள் ஈ) சிறு - சீறு சிறு புற்றிலிருந்து வந்த பாம்பு சீறுவதைக் கண்டேன் உ) தான் - தாம் தான் செய்யும் தவறு தாம் அறிந்தே செய்யக்கூடாது. ஊ) விதி - வீதி ஹரிச்சந்திரனின் தலை விதி அவனை வீதியில் நிறுத்தியது |
பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் |
---|
நூல் வெளி
• நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. • பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. • இதில் 105 பாடல்கள் உள்ளன. • இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. |
பரிபாடல் - கீரந்தையார் (எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று) |
---|
நூல் வெளி
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். • பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். • இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். |
நீதிவெண்பா - கா.ப. செய்குதம்பிப் பாவலர் |
---|
நூல் வெளி
• ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; • சீறாப்புராணத்திற்கு -உரை எழுதியவர்; • 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். • இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. |
சொல்லும் பொருளும் |
---|
• விசும்பு - வானம்
• ஊழி - யுகம் • ஊழ் - முறை • தண்பெயல் - குளிர்ந்த மழை • ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த • பீடு - சிறப்பு • ஈண்டி - செறிந்து திரண்டு |
இலக்கணக் குறிப்பு |
---|
• ஊழ்ஊழ் - அடுக்குத் தொடர்
• வளர்வானம் - வினைத்தொகை • செந்தீ - பண்புத்தொகை • வாரா (ஒன்றன்)- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
கலைச் சொல் அறிவோம் |
---|
• Nanotechnology - மீநுண்தொழில்நுட்பம்
• Biotechnology - உயிரித் தொழில்நுட்பம் • Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள் • Space Technology - விண்வெளித் தொழில்நுட்பம் • Cosmic rays - விண்வெளிக் கதிர்கள் • Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள் • தனிநபர் கணினிகளின் (Personal Computers) • மின்னணுப் புரட்சிக்குக் (Digital Revolution) • இயல்பான மொழிநடையை உருவாக்குதல் (Natural Language Generation) • மென்பொருள் (Software) • கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program) • உலாவியில் (browser) • காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் (Video Editing) • மென்பொருளை (Chatbot) • தரவு அறிவியலாளர்களின் (Data Scientists) • மின்னணுக் கல்வியறிவையும் (Digital Literacy) • மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் (Digital Marketing) • பக்கவாதம் (Amyotrophic lateral Scleroses) • அடுத்த தலைமுறை (The next generation), • பெருவெடிப்புக் கோட்பாடு (The Bigbang Theory) • இயந்திர மனிதன் (Robo) • திறன் பேசி (Smart Phone) |
minnal vega kanitham