நூல் வெளி
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிகுரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழ்ச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.
bbbbbbbbbbbbbbb
3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
[விடை : இ) நன்மை + செய்]
4. 'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
[விடை : ஈ) நீள் + உழைப்பு]
5. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
[விடை : ஆ) சீருக்கேற்ப]
6. ஓடை+ஆட - என்பதனைச் சேர்த்தெழுதல் கிடைக்கும் சொல்
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
[விடை : ஆ) ஓடையாட]
3. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
[விடை : இ) விழுந்தது + அங்கே]
4. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்து + இறந்த
[விடை : ஆ) செத்து + திறந்த]
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பருத்திஎல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
[விடை : ஆ) பருத்தியெல்லாம்]
சொல்லும் பொருளும்
தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்
ஈரம் - இரக்கம்
முழவு - இசைக்கருவி
பயிலுதல் - படித்தல்
நாணம் - வெட்கம்
செஞ்சொல் - திருந்திய சொல்
நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
வன்னைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
முகில் - மேகம்
கெடிகலங்கி - மிக வருந்தி
சம்பிரமுடன் - முறையாக
சேகரம் – கூட்டம்
காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
வின்னம் - சேதம்
வாகு – சரியாக
காலன் – எமன்
மெத்த – மிகவும்
minnal vega kanitham