Type Here to Get Search Results !

Day 21 New syllabus அடிப்படையில் 8th தமிழ் இயல் - 3

0
திருக்குறள்
நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
● திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
● இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.
பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.
இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.
1) 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
[விடை : இ) உவமை அணி]

2) புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
[விடை : இ) நடுவுநிலைமை]

3) பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
[விடை : ஆ) கல்லாதவர்]

கலைச்சொல் அறிவோம்.
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain
3. பள்ளத்தாக்கு – Valley
4. புதர் – Thicker
5. மலைமுகடு – Ridge
6. வெட்டுக்கிளி – Locust
7. சிறுத்தை – Leopard
8. மொட்டு – Bud

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
[விடை : இ) இவை + உண்டார்]

2) தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) தாம்இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
[விடை : இ) தாமினி]

3) 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
[விடை : இ) விழுந்தது + அங்கே]

4) 'நலமெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____
அ) நலம் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஆ) நலன் + எல்லாம்
ஈ) நலன் + எலாம்
[விடை : அ) நலம் + எல்லாம்]

5) இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) இடவெங்கும்
ஆ) இடம் எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
[விடை : இ) இடமெங்கும்]

சொல்லும் பொருளும்
● தீர்வன - நீங்குபவை
● திறத்தன - தன்மையுடையன
● உவசமம் - அடங்கி இருத்தல்
● கூற்றவா - பிரிவுகளாக
● நிழல்இகழும் - ஒளிபொருந்திய
● பூணாய் - அணிகலன்களைஅணிந்தவளே
● பேர்தற்கு - அகற்றுவதற்கு
● பிணி - துன்பம்
● திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
● ஓர்தல் - நல்லறிவு
● தெளிவு - நற்காட்சி
● பிறவார் - பிறக்கமாட்டார்
● முகில் - மேகம்
● கெடிகலங்கி - மிக வருந்தி
● சம்பிரமுடன் - முறையாக
● சேகரம் – கூட்டம்
● காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
● வின்னம் - சேதம்
● வாகு – சரியாக
● காலன் – எமன்
● மெத்த – மிகவும்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

● யாழ்கோடு அன்ன கொளல் களைகொடிது
● வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
விடை
● கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
● வினைபடு பாலால் கொளல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்