Type Here to Get Search Results !

Day 16 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 7

0
பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.
• (எ.கா.) போயி - போய்
• பிடிக்கிறாங்க - பிடிக்கிறார்கள்
• வளருது - வளர்கிறது
• இறங்குறாங்க - இறங்குகிறார்கள்
• வாரான் - வரமாட்டான்

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
• 1. என் தாயார் என்னை ------ காத்து வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது போல, தாயைக்கண்ட சேயைப் போல)
விடை: கண்ணை இமை காப்பது போல
• 2. நானும் என் தோழியும் ------ இணைந்து இருப்போம்.
(இஞ்சி தின்ற குரங்கு போல, நகமும் சதையும் போல)
விடை: நகமும் சதையும் போல
• 3. திருவள்ளுவரின் புகழை --------- உலகமே அறிந்துள்ளது.
(எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)
விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல
• 4. அப்துல் கலாமின் புகழ் ------ உலகமெங்கும் பரவியது.
(குன்றின்மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல)
விடை: குன்றின் மேலிட்ட விளக்கு போல.
• 5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் -------- என் மனத்தில் பதிந்தன.
(கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல)
விடை: பசுமரத்தாணி போல.

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா) திருநெல்வேலி - திரு, நெல், வேலி, வேல்
1. நாகப்பட்டினம்
• விடை : நாகம், பட்டினம், பட்டி, நாடி.
2. கன்னியாகுமர
• விடை : கன்னி, குமரி, மரி, கனி.
3. செங்கல்பட்டு
• விடை : செங்கல், பட்டு, கல், கட்டு.
4. உதகமண்டலம்
• விடை : கமண்டலம், மண்டலம், உலகம், உண்.
5. பட்டுக்கோட்டை
• விடை : பட்டு, கோட்டை, படை, கோடை.

பழமொழி நானூறு
நூல் வெளி
• பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
• இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
• பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
• பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) ‘நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
[விடை : இ. நீர் + உலையில்]

2) மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -----
அ) மாரியொன்று
ஆ) மாரிஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
[விடை : அ. மாரியொன்று]

3) “தேர்ந்தெடுத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
[விடை : ஈ. தேர்ந்து + எடுத்து]

4) ‘ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------
அ) ஓடைஎல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
[விடை : ஆ. ஓடையெல்லாம்]

சொல்லும் பொருளும்
• மாரி - மழை
• வறந்திருந்த - வறண்டிருந்த
• புகவா - உணவாக
• மடமகள் - இளமகள்
• நல்கினாள் - கொடுத்தாள்
• முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
• குழி - நில அளவைப்பெயர்
• சாண் - நீட்டல் அளவைப்பெயர்
• மணி - முற்றிய நெல்
• சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
• சீலை - புடவை
• மடை - வயலுக்கு நீர் வரும் வழி
• கழலுதல் - உதிர்தல்
பொருத்துக.
• வினா
1. நாற்று - பறித்தல்
2. நீர் - அறுத்தல்
3. கதிர் - நடுதல்
4. களை - பாய்ச்சுதல்
• விடை
1. நாற்று - நடுதல்
2. நீர் - பாய்ச்சுதல்
3. கதிர் - அறுத்தல்
4. களை - பறித்தல்

கலைச்சொல் அறிவோம்
• நாகரிகம் - civilization
• நாட்டுப்புறவியல் - folklore
• அறுவடை - harvest
• நீர்ப்பாசனம் - irrigation
• அயல்நாட்டினர் - foreigner
• வேளாண்மை - agriculture
• கவிஞர் - poet
• நெற்பயிர் - paddy
• பயிரிடுதல் - cultivation
• உழவியல் - agronomy

கருத்துரையிடுக

0 கருத்துகள்