1. 'ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - பாரதிதாசன்
2. "பாண்டியன் பரிசு" என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்
3. "அழகின் சிரிப்பு" என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்
4. "இசையமுது" என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
5. “இருண்ட வீடு" என்ற நூலை எழுதியவர்- பாரதிதாசன்
6. “குடும்ப விளக்கு" என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்.
7. “கண்ணகி புரட்சிக்காப்பியம்” என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்
8. பாரதிதாசன் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாடக நூல் - பிசிராந்தையார்
9. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது - மயில்
10. 'மலை'யைக் குறிக்கும் சொல் - வெற்பு
11. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஏடு + எடுத்தேன்
12. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - துயின்று + இருந்தார்
13. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- என்றுரைக்கும்
14. "வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்" எனத் தொடங்கும் நாலடியார் பாடலின் ஆசிரியர் - சமண முனிவர்
15. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் - நாலடியார்
16. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் – நாலடியார்
17. நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது – 400
18. "நாலடி நாலாறு" என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
19. வேளாண் வேதம்" என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
20. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளைக் கொண்ட நூல் - நாலடியார்
21. நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும் - நாலடியார்
22. நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்- திருக்குறள்
23. வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும்" எனத் தொடங்கும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் - தனிப்பாடல் திரட்டு
24. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் - கல்வி
25. கல்வியைப் போல் செல்வம் வேறில்லை - கேடில்லாத
26. 'வாய்த்தியின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வாய் + தீயின்
27. 'கேடில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கேடு + இல்லை
28. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - எவனொருவன்
29. உலகில் அழியாத செல்வம் - கல்வி
30. மகாத்மா காந்தி தாயார் பெயர் - புத்திலிபாய்
31. காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் - திருவள்ளுவர்
32. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்
33. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கூறியவர் - திருவள்ளுவர்
34. நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் - பாரதியார்
35. “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்" என்று கூறியவர் – பாரதியார்
36. "கற்க கசடற கற்பவை" என்று கூறியவர் - திருவள்ளுவர்
37. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணியை செய்தவர் - வீ. முனிசாமி
38. திருக்குறளார் என அழைக்கப்பட்டவர் - வீ. முனிசாமி
39. "வள்ளுவர் உள்ளம்” என்ற நூலை எழுதியவர் - வீ. முனிசாமி
40. வள்ளுவர் காட்டிய வழி என்ற நூலை எழுதியவர் - வீ. முனிசாமி
41. திருக்குறளில் நகைச்சுவை என்ற நூலை எழுதியவர் - வீ. முனிசாமி
42. "உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" என்ற நூலை எழுதியவர் - வி. முனிசாமி
43. "சிந்தனைக் களஞ்சியம்" என்ற நூலை எழுதியவர் - வி. முனிசாமி
44. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் - காலம் அறிதல்
45. கல்வியில்லாத நாடு- விளக்கில்லாத வீடு
46. உயர்வடைவோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - உயர் + அடைவோம்
47. இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - இவையெல்லாம்
48. இளமையில் கல் என்று கூறியவர் - ஒளவையார்
49. பள்ளிமறு திறப்பு என்னும் கதையை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்
50. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் - சுப்ரபாரதிமணியன்
51. "பின்னல்" என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்
52. "வேட்டை" என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்
53. "தண்ணீர் யுத்தம்' என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்
54. "புத்துமண்" என்ற நூலை எழுதியவர் – சுப்ரபாரதிமணியன்
55. கதை சொல்லும் கதை என்ற நூலை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்
56. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை - ஓரெழுத்து ஒருமொழி
57. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் - பவணந்தி முனிவர்
58. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை - 42
59. ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் - நொ,து
60. பகுபதாக அமையும் பெயர்ச்சொல் - பெயர்ப்பகுபதம்
61. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும் - ஆறு
62. பெயர்ப்பகுபதத்தின் வகைகள் - பொருள், இடம் ,காலம், சினை ,பண்பு, தொழில்
63. பருபதாக அமையும் வினைச்சொல் - வினைப்பகுபதம்
64. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்- ஆறு
65. பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில் வருவது- பகுதி
66. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது - விகுதி
67. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது- இடைநிலை
68. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து- சந்தி
69. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் - சாரியை
70. பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்- விகாரம்
71. பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் - பகாபதம்
72. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை 42 எனக் கூறும் நூல் – நன்னூல்.
73. 'எழுதினான்' என்பது- வினைப்பகுபதம்
74. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு- இடைநிலை
75. பொருத்துக
1. எத்தனிக்கும்- முயலும்
2. வெற்பு- மலை
3. கழனி- வயல்
4. நிகர்- சமம்
76. பொருத்துக.
1. பரிதி - கதிரவன்
2. அன்னதோர் - அப்படி ஒரு
3. கார்முகில் - மழைமேகம்
4. துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
77. பொருத்துக.
1. வைப்புழி- பொருள் சேமித்து வைக்கும் இடம்
2. கோட்படா- ஒருவரால் கொள்ளப்படாது
3. வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
4. விச்சை- கல்வி
78. பொருத்துக
1. பெயர்ப்பகாபதம்- நிலம், நீர், நெருப்பு, காற்று
2. வினைப்பகாபதம் - நட, வா, படி, வாழ்
3. இடைப்பகாபதம்- மன், கொல், தில், போல்
4. உரிப்பகாபதம்- உறு, தவ, நனி, கழி
79. பொருத்துக.
1. பெயர்ப்பகுபதம்- பெரியார்
2. வினைப்பகுபதம்- வாழ்ந்தான்
3. இடைப்பகாபதம் - மன்
4. உரிப்பகாபதம் - நனி
80. பொருத்துக
1. கோடை விடுமுறை- Summer Vacation
2. குழந்தைத் தொழிலாளர் – Child Labour
3. பட்டம்- Degree
4. கல்வியறிவு- Literacy
81. பொருத்துக.
1. நீதி - Morall
2. சீருடை - Uniform
3. வழிகாட்டுதல் - Guidance
4. ஒழுக்கம் – Discipline
Very useful sir
பதிலளிநீக்குminnal vega kanitham