Type Here to Get Search Results !

7th புதிய தமிழ் இயல் 4

1

 1.     கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் - கலங்கரை விளக்கம்.

2.     வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னிஎன்ற பாடலின் ஆசிரியர்கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

3.     வேயா மாடம் என்பது - சாந்து பூசப்பட்ட மாடம்.

4.     கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் – உருத்திரங்கண்ணனார்.

5.     கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டில் இயற்றியுள்ள நூள்பெரும்பாணாற்றுப்படைபட்டினப்பாலை.

6.     பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவர் - தொண்டைமான் இளந்திரையன்.

7.     வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர்பாணர் போன்றோர் அர வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது - ஆற்றுப்படை இலக்கியம்.

8.     கடலில் துறை அறியாமல் கலங்குவன – மரக்கலங்கள்.

9.     உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்க புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழஎன்ற பாடல் வரியை இயற்றியவர் - மருதன் இளநாகனார்.

10.   கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்ளரி மருங்கு அறிந்து ஒய்யஎன்ற பாடல் வரியை இயற்றியவர் - மருதன் இளநாகனார்.

11.   உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது – நாவாய்.

12.   மருதன் இளநாகனார் கலித்தொகையில் உள்ள மருதத்திணையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்35.

13.   மருதத்திணை பாடுவதில் வல்லவர் - மருதன் இளநாகனார்.

14.   அகநானூறில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400.

15.   அகநானூறின் வேறு பெயர் – நெடுந்தொகை.

16.   வங்கூழ் சொல்லின் பொருள் – காற்று.

17.   மக்கள் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றது – வங்கத்தில்.

18.   புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது – கடல்.

19.   'பெருங்கடல்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பெருமை + கடல்.

20.   இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – இன்றாகி.

21.   பயணம் எத்தனை வகைப்படும்3.

22.   நீர்வழிப்பயணம் எத்தனை வகைப்படும் – இரண்டு.

23.   நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் பழமையானது – தொல்காப்பியம்.

24.   கடற்பயணத்தை "முந்நீர் வழக்கம்எனக் குறிப்பிடும் நூல் – தொல்காப்பியம்.

25.   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - என்ற வரி இடம்பெற்ற நூல்திருக்குறள்.

26.   பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டதை விரிவாக விளக்கும் நூல் – பட்டினப்பாலை.

27.   'உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்என்ற வரி இடம்பெற்ற நூல் – அகநானூறு.

28.   'அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து.

29.   பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு -சேந்தன் திவாகர நிகண்டு.

30.   தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை -படகு,புணை,தோணி,ஓடம்,மிதவைதெப்பம்.

31.   தமிழர்கள் கடல் பயணம் மேற்கொள்ள உதவியவை – கலம்,வங்கம்,நாவாய்.

32.   பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது -நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகம்.

33.   தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர் – கம்மியர்.

34.    “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் –மணிமேகலை.

35.   தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்வேம்பு,இலுப்பை,புன்னை,நாவல்.

36.   தமிழர்கள் கப்பலின் பக்கங்களுக்கு பொருத்த எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்-தேக்குவெண்தேக்கு.

37.   மரத்தின் வெட்டப்பட்ட பகுதிவெட்டு வாய்.

38.   இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் – கண்ணடை.

39.   கப்பலின் நீளம்அகலம்உயரம் ஆகியவற்றை என்னும் நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்-தச்சுமுழம்.

40.  பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டுயானை, குதிரை, அன்னம்.

41.   தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதனைக் கலந்து பூசினர் - சுண்ணாம்பு ,சணல்,எண்ணெய்.

42.   தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டியுள்ள இத்தாலி நாட்டைச் சேர்ந்த கடற்பயணிமார்க்கோபோலோ.

43.   மரத்தினாலான ஆணிகள் - தொகுதி .

44.   ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்-12.

45.   தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லைஎன்று கூறியவர் – வாக்கர்.

46.   பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது-காற்று.

47.   தமிழர் பயன்படுத்திய பாய்மரக்கப்பல் - பெரிய பாய்மரம்திருக்கைத்திப் பாய்மரம்,காணப் பாய்மரம்கோசுப் பாய்மரம்.

48.   பாய்மரக்கப்பலில் பயன்படும் சில கயிறுகள் - ஆஞ்சான் கயிறுதாம்பாங்கயிறு, வேடாங்கயிறு,பளிங்கைக் கயிறு, மூட்டாங்கயிறுஇளங்கயிறுகோடிப்பாய் கயிறு

49.   பாய்மரக்கப்பலின் பாய்கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர்” என்று கூறும் நூல் – பரிபாடல்.

50.   கப்பலின் உறுப்புகள் எவை எராபருமல், வங்குகூம்பு, பாய்மரம்,சுக்கான், நங்கூரம்.

51.   கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் – எரா.

52.   கப்பலுக்கு பயன்படுத்தப்படும் குறுக்கு மரத்தை – பருமல்.

53.   கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி –சுக்கான்.

54.   கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவுவது – நங்கூரம்.

55.   சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் - கப்பல் சாத்திரம்.

56.   காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது – சமுக்கு.

57.   கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர் - மாலுமி , நீகான், மீகாமன்.

58.   'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருகஎன்னும் புறப்பாடல் அடியை பாடியவர் – வெண்ணிக்குயத்தியார்.

59.   கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவதுகலங்கரை விளக்கம்.

60.   உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்டதாக உள்ளது- கலங்கரை விளக்கம்.

61.   கலம் என்பதன் பொருள்கப்பல்.

62.   கரைத்தல் என்பதன் பொருள் – அழைத்தல்.

63.   "பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்என்ற செய்தி இடம்பெற்ற நூல் – புறநானூறு.

64.   கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – புறநானூறு.

65.   தமிழர்கள்  பயன்படுத்தி திசை அறிந்து கப்பலைச் செலுத்தினர் - திசைக்காட்டு கருவிவிண்மீன்கள்

66.   தமிழர்கள் யை வைத்து புயல்மழை மற்றும் கடல்நீர் பொங்கும் காலநிலைகளை கண்டறிந்தனர்-கோள்களின் நிலை.

67.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு – 1886.

68.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறதுஅந்த விந்தை விலங்குகைக் கண்டுபிடித்து அழிப்பதற்கு எங்கிருந்து ஒரு போர்க்கப்பல் புறப்பட்டது – அமெரிக்கா.

69.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் - 'ப்ராகட்

70.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் நிமிங்கலங்களை வேட்டையாடுவதில் வல்லவர் – நெட்.

71.   அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என புகழப்படுபவர் - ஜீல்ஸ் வெர்ன்.

72.   ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்பிரான்சு.

73.   "பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்என்ற புதினத்தை எழுதியவர் - ஜீல்ஸ் வெர்ன்.

74.   "எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி என்ற புதினத்தை எழுதியவர் - ஜீல்ஸ் வெர்ன்.

75.   அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றி தமது புதினங்களில் எழுதியவர்- ஜீல்ஸ் வெர்ன்.

76.   ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர்- ஜீல்ஸ் வெர்ன்.

77.   ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது-சொல்.

78.   சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் -மொழி,பதம்கிளவி.

79.   இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் – நான்கு.

80.   எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் – இயற்சொற்கள்.

81.   இயற்சொல் எத்தனை வகைப்படும் – நான்கு.

82.   கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்திரிசொற்கள்.

83.   திரிசொல்  - வகையில் வரும்

84.   வங்கம்அம்பிநாவாய் என்பது எவ்வகைத் திரிச்சொல் - ஒரு பொருள் குறித்த பல திரிச்சொல்.

85.   "இதழ்என்பது எவ்வகைத் திரிச்சொல்பல பொருள் குறித்த ஒருதிரிச்சொல்.

86.   வடமொழி தவிரபிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்திசைச்சொற்கள்.

87.   கேணி என்பதன் பொருளைக் – கிணறு.

88.   பெற்றம் என்பதன் பொருளைக் காண்க – பசு.

89.   வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் – வடசொற்கள்.

90.   வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு - கமலம்விடம் , சக்கரம் , வருடம்மாதம்.

91.   வடச்சொல் எத்தனை வகைப்படும்இரண்டு.

92.   வடசொல் வகைகள் - தற்சமம்தற்பவம்.

93.   வடச்சொல் வகையில் "தற்சமம்என்பதற்கு எடுத்துக்காட்டு - கமலம்அலங்காரம்.

94.   வடச்சொல் வகையில் “தற்பவம்” என்பதற்கு எடுத்துக்காட்டு - இலக்குமிவிடம்.

95.   பல பொருள் தரும் ஒரு சொல் என்பது – திரிசொல்.

96.   வடமொழி என்று அழைக்கப்படும் மொழி – சமஸ்கிருதம்.

97.   நடந்த செயலைக் குறிப்பது  குறிக்கும் - இறந்த காலம்.

98.   நடக்கும் செயலைக் குறிப்பது  குறிக்கும் - நிகழ்காலம் .

99.   நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது  குறிக்கும் – எதிர்காலம்.

100.  இறந்த காலத்திற்கு எடுத்துக்காட்டு - பார்த்தான் , ஆடினான் , பறந்தது

101.  நிகழ்காலத்திற்கு எடுத்துக்காட்டு - பார்க்கிறான் , ஆடுகின்றான், பறக்கின்றது.

102.  எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டு - காண்பான்ஆடுவாள், பறக்கும்.

103.  பொருத்துக.

           1.     இயற்சொல் - சோறு

           2.     திரிசொல் - அழுவம்  

           3.     திசைச்சொல் - பெற்றம்

           4.     வடசொல்  - இரத்தம்

104.  பொருத்துக

           1.     கலங்கரை விளக்கம்Light house

           2.     பெருங்கடல்Ocean

           3.     கப்பல் தொழில்நுட்பம்Marine technology

           4.     கடல்வாழ் உயிரினம்Marine creature

           5.     நீர் மூழ்கிகப்பல்Submarine

105.  பொருத்துக.

           1.     துறைமுகம் - Harbour

           2.     புயல் - Storm

           3.     மாலுமி - Sailor

           4.     நங்கூரம் - Anchor

           5.     கப்பல் தளம் - Shipyard

106.  பொருத்துக.

           1.     அழுவம்வங்கம்பெயர்த்திரிசொல்

           2.     இயம்பினான்பயின்றாள் - வினைத்திரிசொல்

           3.     அன்னமான- இடைத்திரிசொல்

           4.     கூர்கழிஉரித்திரிசொல்

107.  பொருத்துக.

           1.     மண்பொன் - பெயர் இயற்சொல்

           2.     நடந்தான்வந்தான் - வினை இயற்சொல்

           3.     அவனைஅவனால் - இடை இயற்சொல்

           4.     மாநகர் - உரி இயற்சொல்

108.  பொருத்துக.

           1.     வங்கூழ் - காற்று

           2.     அழுவம் - கடல்

           3.     சாற்றினான் - சொன்னான்

           4.     உறுபயன் - மிகுந்த பயன்

109.  பொருத்துக

           1.     எராஅடிமரம்

           2.     பருமல்குறுக்கு மரம்

           3.     மீகாமன்கப்பலைச் செலுத்துபவர்

           4.     காந்த ஊசிதிசைகாட்டும் கருவி

110.  பொருத்துக.

           1.     உரு- அழகு

           2.   போழபிளக்க

           3.     நீகான் - நாவாய் ஓட்டுபவன்

           4.     வங்கூழ்காற்று

111.  பொருத்துக.

           1.     வங்கம்கப்பல்

           2.     எல்பகல்

           3.     கோடு உயர் - கரை உயர்ந்த

           4.     மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்.

112.  பொருத்துக.

           1.     மதலை - தூண்

           2.     ஞெகிழி - தீச்சுடர்

           3.     அழுவம் -கடல்

           4.     சென்னி -உச்சி

           5.     உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு

           6.     கரையும் –அழைக்கும்


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham