Type Here to Get Search Results !

நூல் வெளி, தெரிந்து தெளிவோம் 7th தமிழ் இயல் 4 || Day 12 Test - 12B

1

நூல்வெளி
இயல் 4.1 கலங்கரை விளக்கம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
• இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
• இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
• பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
• இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
தெரிந்து தெளிவோம்
பத்துப்பாட்டு நூல்கள்

• 1. திருமுருகாற்றுப்படை
• 2. பொருநராற்றுப்படை
• 3. பெரும்பாணாற்றுப்படை
• 4. சிறுபாணாற்றுப்படை
• 5. முல்லைப்பாட்டு
• 6. மதுரைக்காஞ்சி
• 7. நெடுநல்வாடை
• 8. குறிஞ்சிப்பாட்டு
• 9. பட்டினப்பாலை
• 10. மலைபடுகடாம்

நூல்வெளி
இயல் 4.2 கவின்மிகு கப்பல் (அகநானூறு )
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
• இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
தெரிந்து தெளிவோம்
எட்டுத்தொகை நூல்கள்

• 1. நற்றிணை
• 2. குறுந்தொகை
• 3. ஐங்குறுநூறு
• 4. பதிற்றுப்பத்து
• 5. பரிபாடல்
• 6. கலித்தொகை
• 7. அகநானூறு
• 8. புறநானூறு

தெரிந்து தெளிவோம்
இயல் 4.3 தமிழரின் கப்பற்கலை
தெரிந்து தெளிவோம்
• நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
• தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
பிற்காலச் சோழர்களில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதை வரலாறு பகர்கிறது.
தெரிந்து தெளிவோம்
• "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.
தெரிந்து தெளிவோம்
• கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது
• ஆராய்ந்துள்ளனர். அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.
• எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது.

நூல்வெளி
இயல் 5.5 ஆழ்கடலின் அடியில்
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
• இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.
• அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.
• அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham