நூல்வெளி |
---|
இயல் 4.1 கலங்கரை விளக்கம்
• கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். தெரிந்து தெளிவோம் பத்துப்பாட்டு நூல்கள் • 1. திருமுருகாற்றுப்படை • 2. பொருநராற்றுப்படை • 3. பெரும்பாணாற்றுப்படை • 4. சிறுபாணாற்றுப்படை • 5. முல்லைப்பாட்டு • 6. மதுரைக்காஞ்சி • 7. நெடுநல்வாடை • 8. குறிஞ்சிப்பாட்டு • 9. பட்டினப்பாலை • 10. மலைபடுகடாம் |
நூல்வெளி |
---|
இயல் 4.2 கவின்மிகு கப்பல் (அகநானூறு ) • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. தெரிந்து தெளிவோம் எட்டுத்தொகை நூல்கள் • 1. நற்றிணை • 2. குறுந்தொகை • 3. ஐங்குறுநூறு • 4. பதிற்றுப்பத்து • 5. பரிபாடல் • 6. கலித்தொகை • 7. அகநானூறு • 8. புறநானூறு |
தெரிந்து தெளிவோம் |
---|
இயல் 4.3 தமிழரின் கப்பற்கலை
தெரிந்து தெளிவோம் • நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. • தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். • பிற்காலச் சோழர்களில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதை வரலாறு பகர்கிறது. தெரிந்து தெளிவோம் • "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார். தெரிந்து தெளிவோம் • கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது • ஆராய்ந்துள்ளனர். அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது. • எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது. |
நூல்வெளி |
---|
இயல் 5.5 ஆழ்கடலின் அடியில்
• அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். • இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். • அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. • அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. |
சிறப்பான உங்கள் சேவைக்கு நன்றி🙏
பதிலளிநீக்குminnal vega kanitham