Type Here to Get Search Results !

நூல் வெளி, தெரிந்து தெளிவோம் 7th தமிழ் இயல் 5 || Day 13 Test - 13B

0

நூல்வெளி
இயல் 5.1 ஓதுவது ஒழியேல் (பாரதிதாசன்)
• கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
• இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர்.
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடக நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
• பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

நூல்வெளி
இயல் 5.2 அழியாச் செல்வம் (நாலடியார்)
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
•இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
•இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
•திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
•இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

நூல்வெளி
இயல் 5.3 வாழ்விக்கும் கல்வி
• திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ.முனிசாமி.
• நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர்.
• வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

நூல்வெளி
இயல் 5.5 பள்ளி மறுதிறப்பு
• இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
• இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
• பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெரிந்து தெளிவோம்
இயல் 5.6 ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
• 1. ஆ- பசு
• 2. ஈ- கொடு
• 3. ஊ- இறைச்சி
• 4. ஏ- அம்பு
• 5. ஐ- தலைவன்
• 6. ஓ - மதகுநீர் தாங்கும் பலகை
• 7. கா- சோலை
• 8. கூ- பூமி
• 9. கை- ஒழுக்கம்
• 10. கோ-அரசன்
• 11. சா- இறந்துபோ
• 12. சீ- இகழ்ச்சி
• 13. சே- உயர்வ
• ு 14. சோ- மதில்
• 15. தா - கொடு
• 16. தீ- நெருப்பு
• 17. தூ- தூய்மை
• 18. தே- கடவுள்
• 19. தை- தைத்தல்
• 20. நா- நாவு
• 21. நீ- முன்னிலை ஒருமை
• 22. நே- அன்பு
• 23. நை- இழிவு
• 24. நோ வறுமை
• 25. பா- பாடல்
• 26. பூ- மலர்
• 27. பே - மேகம்
• 28. பை- இளமை
• 29. போ- செல்
• 30. மா- மாமரம்
• 31. மீ- வான்
• 32. மூ - மூப்பு
• 33. மே- அன்பு
• 34. மை- அஞ்சனம்
• 35. மோ- மோத்தல்
• 36. யா- அகலம்
• 37. வா- அழைத்தல்
• 38. வீ- மலர்
• 39. வை- புல்
• 40. வௌ - கவர்
• 41. நொ- நோய்
• 42 . து- உண்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்