6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 6 (புறநானூறு) |
---|
நூல் குறிப்பு
• புறநானூறு = புறம் + நான்கு + நூறு. • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. • இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். • சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது. • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது. ஆசிரியர் குறிப்பு • ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர். • அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். • சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். • அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார். • சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர். |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 7 ('தனிப்பாடல் திரட்டு') |
---|
நூல்குறிப்பு
• புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர். • பெரும்பாலான பாடல்கள் இருநூறுமுதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர், துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர். |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8 (உடுமலை நாராயணகவி ) |
---|
ஆசிரியர் குறிப்பு :
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார். • பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். • பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர். • இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை. |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 9 (குற்றாலக் குறவஞ்சி) |
---|
நூல்குறிப்பு :
• இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. • ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல் ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன. |
6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 9 (பமரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப் புலவர்) |
---|
ஆசிரியர் குறிப்பு
• அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர். • இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். • இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு. நூல்குறிப்பு • தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது. • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். • இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். • இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல். • இருபொருள்படப் பாடுவது. (எ.கா.) ஆறு ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும். |
Bro social science update panuga bro
பதிலளிநீக்குminnal vega kanitham