Type Here to Get Search Results !

6th Old Tamil Book Unit - 6, 7, 8, 9 ஆசிரியர் குறிப்பு & நூல் குறிப்பு

1

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 6 (புறநானூறு)
நூல் குறிப்பு
• புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
• இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
• சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது.
தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.
ஆசிரியர் குறிப்பு
• ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர்.
அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்.
• சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர்.
• அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார்.
சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 7 ('தனிப்பாடல் திரட்டு')
நூல்குறிப்பு
• புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர்.
• பெரும்பாலான பாடல்கள் இருநூறுமுதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
• பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர், துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர்.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8 (உடுமலை நாராயணகவி )
ஆசிரியர் குறிப்பு :
உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்.
பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்.
• இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 9 (குற்றாலக் குறவஞ்சி)
நூல்குறிப்பு :
• இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி.
• ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார்.
குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல் ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 9 (பமரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப் புலவர்)
ஆசிரியர் குறிப்பு
அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர்.
• இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.
நூல்குறிப்பு
• தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
• ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும்.
• இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர்.
• இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல்.
• இருபொருள்படப் பாடுவது. (எ.கா.) ஆறு ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும். எண் ஆறனையும் (6) குறிக்கும். செல்லும் வழியையும் குறிக்கும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham