Type Here to Get Search Results !

6th Old Tamil Book Unit - 4, 5 ஆசிரியர் குறிப்பு & நூல் குறிப்பு

0

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4 (பழமொழி நானூறு)
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.
முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும்.
• இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.
நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது.
• இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
• இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்'என்பது.
• இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 5 (சித்தர் பாடல்)
 பாடல் குறிப்பு
• ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.
• நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.
• இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.
சிறப்புக் குறிப்புகள்
• 17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்.
1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்டது.
நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்