Type Here to Get Search Results !

6th Old Tamil Book Unit -2, 3 ஆசிரியர் குறிப்பு & நூல் குறிப்பு

1

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2 (நாலடியார் - சமணமுனிவர்)
நூல்குறிப்பு
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
• இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
அறக்கருத்துகளைக் கூறுவது.
'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
• இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்
• சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
• பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள்.
• இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
• சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது.
• இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள்.
• இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர்.
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2 (பாரதியார்)
ஆசிரியர் குறிப்பு:
• ஆசிரியர் குறிப்பு:
• பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்.
'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கொண்டாடப்பட்டவர்.
• இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே.
• இந்தப் பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன. 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்'எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் வாழ்ந்த காலம் 11.12.1882 முதல் 11.9.1921வரை.

6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3 (நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்)
ஆசிரியர் குறிப்பு:
• நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார்.
விளம்பி என்பது ஊர்ப்பெயர்;
நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு :
நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham