Type Here to Get Search Results !

6th New Tamil Book Unit - 5 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்

0

Unit -3
நூல்வெளி
இயல் 5.1 ஆசாரக்கோவை
• ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
• இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
• ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

நூல்வெளி
இயல் 5.2 கண்மணியே கண்ணுறங்கு
• தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

தெரிந்து தெளிவோம்
இயல் 5.3 தமிழர் பெருவிழா
• தெரிந்து தெளிவோம்
• வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
• தெரிந்து தெளிவோம்
தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.
தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.
• தெரிந்து தெளிவோம்
• திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 - 2049
• தெரிந்து தெளிவோம்
• அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
• பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது.
• குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.

தெரிந்து தெளிவோம்
இயல் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்
• தெரிந்து தெளிவோம்
• மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள்
• 1. அர்ச்சுனன் தபசு
• 2. கடற்கரைக் கோவில்
• 3. பஞ்சபாண்டவர் ரதம்
• 4. ஒற்றைக்கல் யானை
• 5. குகைக்கோவில்
• 6. புலிக்குகை
• 7. திருக்கடல் மல்லை
• 8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
• 9. கலங்கரை விளக்கம்
• தெரிந்து தெளிவோம்
• சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்.
• குடைவரைக் கோயில்கள்
• ஒற்றைக் கல் கோயில்கள்
• கட்டுமானக் கோயில்கள்
• புடைப்புச் சிற்பங்கள்
• இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்