தாயுமானவர் (6th தமிழ் புதிய புத்தகம் இயல் 8) |
---|
• பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர். • திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். • இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. • இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். • இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. • ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை. |
தாயுமானவர் (8th தமிழ் பழைய புத்தகம்) |
---|
ஆசிரியர் குறிப்பு
• பெயர் : தாயுமானவர். • பெற்றோர் : கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார். • மனைவி : மட்டுவார்குழலி. • ஊர் : நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்). • நூல் : தாயுமானவர் திருப்பாடல் திரட்டு, • பணி : திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூலஅலுவலர். • காலம் : கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு. நூல் குறிப்பு : • வாழ்த்தாக இடம்பெற்றுள்ள பாடல், தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. • இந்நூல், தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆனது; கற்பார்க்கு மனத்தூய்மை, பத்திச்சுவை ஆகியனவற்றை ஊட்டும். • திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்குத் தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. • தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது. |
இராமலிங்க அடிகளார் (6th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு
• இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். • இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். • பெற்றோர்இராமையா-சின்னம்மையார். • ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. • இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. • சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. • அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். • அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. • வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. • இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823முதல் 30.01.1874வரை. |
Great job sir 👍👏
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்குminnal vega kanitham