Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நாடும் நகரமும் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8)

நாடும் நகரமும் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8)
• நாடு என்பது யாது? சேர சோழ பாண்டிய நாடுகளின் உட்பிரிவு.
• ஊரும் பேரும என்னும் நூலை எழுதியவர்? ரா.பி. சேதுப்பிள்ளை.
• முரப்புநாடு என்பது எம்மண்டலத்தைச் சேர்ந்தது? பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தது.
• இப்பொழுது அப்பெயர் பொருணையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
• செவ்வாய்ப்பேட்டை எவ்வூருக்கருகில் உள்ளது? சேலத்துக்கருகில்.
• பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
• நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
• ஆழ்வார் திருநகரியின பழைய பெயர் குருகூர்
• மாயவரத்திற்கு அருகிலுள்ள கொரநாடு என்னும் ஊரின் சரியான பெயர் கூறைநாடு.
• சென்னை: திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம்.
• அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.
• கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எவ்வாறு பெயர் பெறும்? பட்டினம்.
• இக்காலத்தில் புதிதாகத் தோன்றும் ஊர்கள் எப்பெயரைத் தாங்கி நிற்கின்றன? நகரம்.
• சிறந்த ஊர்களைக் குறிக்கும் பெயர் - புரம்.
• கடற்கரையில் உருவாகும் நகரங்களின் பெயர் பட்டினம்.
• கடற்கரையில் உருவாகும் சிற்றூர்களின் பெயர் பாக்கம்.
• புலம் என்பதன் பொருள் நிலம்.
• மாம்பலம் என்பதன் சரியான வடிவம் மாம்புலம்.
• குப்பம் எனப்படுவது நெய்தல்நில வாழ்விடங்கள்.
• தொழில்களால் சிறப்படையும் ஊர்கள் எவ்வாறு பெயர் பெறும்? பேட்டை.
• “உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” என்று பாடியவர் கம்பர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்