வேலுநாச்சியார் (6th New Tamil Book) |
---|
1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்? வேலுநாச்சியார்
2. வேலுநாச்சியார் கற்றிந்த மொழிகள் எவை? தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது 3. சிவகங்கையின் மன்னர்? முத்துவடுகநாதர் 4. வேலுநாச்சியார் யாரை மணந்து கொண்டார்? சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் 5. எங்கு நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்? காளையார் கோவில் 6. வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்? திண்டுக்கல் 7. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்? தாண்டவராயர் 8. வேலுநாச்சியாரின் தளபதிகள் யார்? பெரிய மருது, சின்ன மருது 9. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்? எட்டு ஆண்டுகள் 10. ஐதர்அலியுடன் வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்? உருது மொழி 11. ஐதர்அலியின் எத்தனை குதிரைப் படை வீரர்கள் வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ வந்தனர்? 5000 குதிரைப் படை வீரர்கள் 12. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்? மருது சகோதரர்கள் 13. பெண்கள் படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்? குயிலி 14. எந்த நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும் என்று வேலுநாச்சியார் கூறினார்? விஜயதசமித் திருநாள் 15. வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொன்றனர்? உடையாள் என்னும் பெண்ணை 16. உடையாளுடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக செலுத்தினார்? தமது தாலியை 17. யார் ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு குதித்தவர் யார்? குயிலி 18. வேலுநாச்சியாரின் காலம்? 1730 - 1796 19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? 1780 20. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்? வேலு நாச்சியார் 21. 'என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில், எனவே, தாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம்: பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார்? வேலு நாச்சியார் 22. "குயிலி தம் உயிரைத் தந்து நம்நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார்? வேலுநாச்சியார் 23. விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்? வேலுநாச்சியார் 24. வேலுநாச்சியார் ________ ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்? சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி 25. வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது 26. சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் எந்த திருநாளில் திறக்கப்படும்? விசயதசமி |
வேலுநாச்சியார் [6th New Tamil Book]
டிசம்பர் 09, 2023
0
minnal vega kanitham