பரிபாடல் |
---|
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று
• ஓங்கு என்ற அடைமொழி உடைய நூல் பரிப்பாடல் • எட்டுத் தொகையுள் அகம் புறம் சேர்ந்த நூல். • பரிபாடலை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. • பரிபாடலை தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை • எட்டுத்தொகையில் அடி அளவால் பெரிய நூல் பரிப்பாடல் • பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி பேரெல்லை 400 அடி கொண்டது. • பரிபாடல் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை 70 • பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13. • முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர். (1919) • பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார். • பரிபாடலின் வேறுபெயர்கள் i. ஓங்கு பரிபாடல் ii. இசைப்பாட்டு iii. பொருட்கலவை நூல் • இந்நூல் 70 பாடல்களால் ஆனது என்பதை இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது • பரிபாடல் மொத்தம் 70 பாடல்களை கொண்டுள்ளது i. திருமால் - 8 ii. முருகன் - 31 iii. கொற்றவை -1 iv. வையை 26 v. மதுரை - 4 • பரிபாடலில் மொத்தம் 22 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளது. i. திருமால் -6 ii. முருகன் - 8 iii. வையை - 8 • பரிபாடல் இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல் • தமிழின் முதல் இசைப்பாடல் நூல் இந்த பரிப்பாடல். • வெண்பா ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் ஆசிரியப்பு பாக்களும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுப்பதால் பரிப்பாடல் என்று அழைக்கப்படுகிறது. • பரிபாடல் பாண்டியர்களை பற்றி விரிவாக கூறுகிறது. • பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை • பரிபாடலில் திருமால், முருகன் போன்ற கடவுள்களின் புராணக் கதைகளும் நிரம்பியுள்ளது. • தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் பரிப்பாடல். • வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன. • பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று • "கின்று" என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் தான் வருகிறது. • பரிபாடல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது. • மதுரை தமிழ்சங்கத்தை தமிழ் வேலி பரிப்பாடல் என்று கூறிப்பிடும் நூல் • பரிபாடல் அறம் பொருள், இன்ப கூறுகிறது ஆகிய நான்கினையும் • இசைப்பண்ணும் இசை அமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம் பரிபாடல் • ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும், அப்பாடலுக்கு இசை வகுத்தவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது |
பரிபாடல் (10th New Tamil Book நூல் வெளி) |
---|
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். • பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். • இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். |
பரிபாடல் (10th New Tamil Book பாடல்கள்) |
---|
• விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி. உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் • செந்தீச் சுடரிய ஊழியும்: பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு. மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் பாடியவர் : கீரந்தையார் புத்தகம் மேற்கோள்கள் • இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டறி வுறுத்தவும் • மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர் • தீயினுள் தென்றல் நீ; பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ |
minnal vega kanitham