Type Here to Get Search Results !

கவிமணி தேசிக விநாயகனார் [6th, 8th & 9th Tamil Book]

2
6th New Book ஆசியஜோதி
நூல் வெளி
• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
• முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
• ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
• ஆசிய ஜோதி புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

8th New Tamil வருமுன் காப்போம்
நூல்வெளி
• கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
• முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
• மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

உமர்கய்யாம் பாடல்கள் (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.
• இவரின் பெற்றோர் சிவதாணு ஆதிலட்சுமி அம்மையார்.
• இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
• அப்பாடல்களின் தொகுப்பு 'உமர்கய்யாம் பாடல்கள்' என்பது.
• உமர்கய்யாம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர்.
• இவரது முழுப் பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது.
• இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர்.
• இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
இவர் இயற்றிய பிற நூல்கள்:
• மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலியன.
• இவரது காலம் 1876முதல் 1954ஆம் ஆண்டுவரை.
நூற்குறிப்பு :
• இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பு.
• இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
• இதில், நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
• வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன. (ரூபாயத் - நான்கடிச் செய்யுள்)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (9th New Tamil Book)
ஆசிரியர் குறிப்பு :
• 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார்.
• 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார்.
• அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
• 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார்.
• மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham