6th New Book ஆசியஜோதி |
---|
நூல் வெளி
• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. • ஆசிய ஜோதி புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. |
8th New Tamil வருமுன் காப்போம் |
---|
நூல்வெளி
• கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். • முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
உமர்கய்யாம் பாடல்கள் (9th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு :
• கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். • இவரின் பெற்றோர் சிவதாணு ஆதிலட்சுமி அம்மையார். • இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். • அப்பாடல்களின் தொகுப்பு 'உமர்கய்யாம் பாடல்கள்' என்பது. • உமர்கய்யாம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். • இவரது முழுப் பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது. • இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர். • இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை. இவர் இயற்றிய பிற நூல்கள்: • மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலியன. • இவரது காலம் 1876முதல் 1954ஆம் ஆண்டுவரை. நூற்குறிப்பு : • இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பு. • இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார். • இதில், நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன. • வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன. (ரூபாயத் - நான்கடிச் செய்யுள்) |
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (9th New Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு :
• 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். • 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். • அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். • 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். • மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். |
Very nice
பதிலளிநீக்குThank you 🙏
பதிலளிநீக்குminnal vega kanitham