உடுமலை நாராயணகவி (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 8) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார். • பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். • பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர். • இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை. |
உடுமலை நாராயணகவி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 1) |
---|
நூல் வெளி
• பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. • இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். |
முடியரசன் (புதிய புத்தகம் இயல் 7) |
---|
நூல் வெளி
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு. • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். • இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. |
முடியரசன் (8th பழைய புத்தகம் இயல் 8) |
---|
ஆசிரியர் குறிப்பு
• பெயர் : முடியரசன் • இயற்பெயர் : துரைராசு • பெற்றோர் : சுப்பராயலு - சீதாலட்சுமி • ஊர் : தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம். • இயற்றிய நூல்கள் : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன. • பணி : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி. • பட்டம் : பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது. • பரிசு : பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது. • சிறப்பு : முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர். • காலம்: 07.10.1920 முதல் 03.12.1998 வரை |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (புதிய புத்தகம் இயல் 4) |
---|
நூல் வெளி
• எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர். |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பழைய புத்தகம் இயல் 7) |
---|
ஆசிரியர் குறிப்பு
• 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்; • திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். • உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார். • பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர். • இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை |
Anna pdf ah anupunga , download panti print potu patikanum pls
பதிலளிநீக்குminnal vega kanitham