Type Here to Get Search Results !

Tamil Test - 4

0

மதுரைக்காஞ்சி [பத்துப்பாட்டு] (9th New Tamil Book)
1. மதுரைக்காஞ்சியை என்ற நூலை எழுதியவர்? மாங்குடி மருதனார்
2. மதுரையை சிறப்பித்து கூறும் நூல்களில் முதன்மையானது எது? மதுரைக்காஞ்சி.
3. மதுரைக்காஞ்சியின் சிறப்பு பெயர் என்ன? பெருகுவள மதுரைக்காஞ்சி
4. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் யார்? பாண்டியன் நெடுஞசெழியன்
5. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று? மதுரைக்காஞ்சி.
6. மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்? திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்
7. _______ எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்? மாங்குடி மருதனார்
8. காஞசி என்றால் ______ என்று பொருள் என்ன? நிலையாமை
9. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை கொண்டது? 782
10. மதுரைக்காஞ்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்து கூறுகின்றன? 354
11. பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர்? மா. இராசமாணிக்கனார்
12. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்? மதுரை
13. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் ______ எனப்பட்டது? மதுரைக்காஞ்சி
14. மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன்? தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
15. பொறிமயிர் வாரணம்.....
கூட்டுறை வயமாப் புலியொடு குழும" (மதுரைக்காஞ்சி 673 - 677 அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் ______ இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்? வனவிலங்குச் சரணாலயம்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்