பாஞ்சாலி சபதம் (பாரதியார்) [9th Old Tamil Book] |
---|
ஆசிரியர் குறிப்பு
• சுப்பிரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.12.1882 அன்று பிறந்தார். • இவர்தம் பெற்றோர் சின்னசாமி - இலக்குமி அம்மையார் ஆவர். • இவரின் துணைவியார் செல்லம்மாள். • சிறந்த படைப்பாளரான பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களைப் படைத்தளித்தார். • நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல் இயற்றினார். • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார். • இவர் 11.09.1921 அன்று மறைந்தார். சிறப்பு • பாரதியார் பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாக்கவி என்றெல்லாம் புகழப்பெற்றார்; • சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்; • இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். • தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை. - பாரதிதாசன் நூற்குறிப்பு • இப்பாடப்பகுதி, பாரதியாரின் முப்பெரும் படைப்புகளுள் ஒன்றாகிய பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தின் சூழ்ச்சிச்சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது. • அனை- வரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இது, வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. • பாஞ்சாலி சபதம் இரு பாகத்தைக் கொண்டது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச்சருக்கம். அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கத்தையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடலையும் கொண்ட குறுங்காப்பியம். |
பாரதியார் (காற்றே வா!) [10th New Tamil Book] |
---|
நூல் வெளி
• மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம் - கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; • குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; • இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். • பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; |
கவிஞர் வெ. இராமலிங்கனார் [9th Old Tamil Book] |
---|
ஆசிரியர்குறிப்பு:
• கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் பிறந்தவர். • இவர்தம் பெற்றோர் வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் ஆவர். • கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார். • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். • இவருக்கு நடுவணரசு பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது. • இவர், தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்கப் பெற்றார். • இவரின் காலம் கி.பி. 1888 முதல் 1972 வரையாகும். நூற்குறிப்பு: • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. • இப்பாடல், சமுதாய மலர் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது •நாமக்கல்லாரின் படைப்புகள் •இலக்கியத்திறனாய்வுகள் - 7 •இசைநாவல்கள் – 3 •கவிதைத்தொகுப்புகள் - 10 •கட்டுரைகள் – 12 •சிறுகாப்பியங்கள் - 5 •தன் வரலாறு – 3 • மொழிபெயர்ப்புகள் – 4 •புதினங்கள் – 5 |
minnal vega kanitham