Type Here to Get Search Results !

சிறுபஞ்சமூலம் & ஏலாதி நோட்ஸ் Test -2

0

சிறுபஞ்சமூலம் (9th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
• இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
• இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
• பெரும்பான்மை பொது அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூற்குறிப்பு:
• சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இதன் ஆசிரியர் காரியாசான்.
• இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் உள்ளன.
• கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன.
• அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்தும் மக்கள் மனநோயைப் போக்குவன. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.

சிறுபஞ்சமூலம் (9th New Tamil Book)
நூல் வெளி
• தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
• அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
• அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
• அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
• இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
• இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
• சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
• காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
• மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

ஏலாதி (பத்தாம் வகுப்பு பழைய புத்தகம்)
ஆசிரியர் குறிப்பு :
• ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
• இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
• இவர், சமண சமயத்தவர் என்பர்.
• இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
• இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூற்குறிப்பு :
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
• இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
• நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
• இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
• ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
• இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள் கற்போரின் அறியாமையை அகற்றும்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்