Type Here to Get Search Results !

Last Minute Study-12 [தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்] PDF




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

 1. பரிதிமாற் கலைஞர் (1870 – 1903) [12th Tamil பாடம் 3.5 பொருள் மயக்கம்]

2. உ.வே.சா [12th Tamil பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்]

3. முத்துராமலிங்கத் தேவர்  [7th Tamil  தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்]

4. அம்பேத்கர்  [8th Tamil  Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்]     

5. பெரியார் [9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்]

6. அண்ணா [9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை]

7. காமராசர் [6th பாடம் 4.3 கல்விக்கண் திறந்தவர்]

8. காயிதேமில்லத்  [7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்]

9. மா.பொ.சிவஞானம் [10th Lesson 7.1 சிற்றகல் ஒளி]

10. செய்குதம்பிப் பாவலர் [9th New Book நீதிவெண்பா]

11. தனிநாயகம் அடிகள்  [9th New Book விரிவாகும் ஆளுமை ]

12. 9th New  Book அகழாய்வுகள்

13. 9th New  Book  ஏறுதழுவுதல் (கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, கண்ணுடையம்மன் பள்ளு, சிந்துவெளி நாகரிக வரலாற்றில்)

14. 9th New  Book வணிக வாயில் (கடற்பயணம்)

15. 9th New  Book  சந்தை (மதுரை மாவட்ட மாட்டுச்சந்தை பெயர் மாட்டுத்தாவணி)

16. 9th New  Book சிற்பக்கலை

17. 6th New Tamil பாடம் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

18. 9th New  Book செய்தி (சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்)

19. 9th New  Book பழந்தமிழர் சமூக வாழ்க்கை (பெண்கள் எவ்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள்)

20. 10th New Tamil 3.1 விருந்து போற்றுதும்! (தமிழர் பண்பாட்டில் = திருக்குறள், பெரியுராணம்)




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

பரிதிமாற் கலைஞர் (1870 – 1903) [12th Tamil பாடம் 3.5 பொருள் மயக்கம்]

1. ‘திராவிட சாஸ்திரிஎன்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர்.

2. அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்;

3. எப்.ஏ (F.A – First Examination in Arts) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்றார்.

4. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

5. 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

6. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

7. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாட கவியல் என்னும் நாடக இலக்கணநூலையும் இயற்றினார்.

8. இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

9. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. 

10. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

11. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார்.

12.  தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

13. பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம். “ - பரிதிமாற் கலைஞர் ('உயர்தனிச் செம்மொழி’என்னும் கட்டுரையிலிருந்து)

 

வினா - விடை

1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்? திராவிட சாஸ்திரி

2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை? ரூபாவதி, கலாவதி

3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக.

செம்மொழி – பண்புத்தொகை

செம்மொழி = செம்மை + மொழி

ஈறுபோதல்என்ற விதிப்படி “செம்மொழிஎன்றாயிற்று.

4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்கு தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக?  திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தாய்மொழி செம்மொழி

5. சூரிய நாராயணர் – இதன் தமிழாக்கம் என்ன? பரிதிமாற்கலைஞர்

 

உ.வே.சா [12th Tamil பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்]

உ.வே.சா – குறிப்பு வரைக

·         ’தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்;

·         பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

·         ‘மகாமகோபாத்தியாய,’ ‘திராவிட வித்தியா பூஷணம்’, ‘தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்;

·         கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

·         1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

·         அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

·         சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.


நூல் வெளி

·         இப்பாடப்பகுதி உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

·         ’தமிழ்த் தாத்தா’ என அழைக்கப்பெற்ற உ.வே.சா. இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்;

·         பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

·         மகாமகோபாத்தியாய,’ ‘திராவிட வித்தியா பூஷணம்’, ‘தாக்ஷிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்;

·         கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

·         1932இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

·         அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

·         சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.

 

உ.வே.சா அவர்கள் பயின்ற கல்வி முறை குறித்துக் குறிப்பு வரைக

i. மரபு வழிக்கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்வி முறையில் உ.வே.சா. பயின்றார்.

ii. இக்கல்வி முறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்வி முறையாகும்.

iii. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

1. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்? உ.வே.சா

2. புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு? 1894

3. தமிழ்த்தாத்தாஎன அழைக்கப்பட்டவர்? உ. வே. சாமிநாதர்

4. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம்? திருவான்மியூர்

5. உ.வே.சா. சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு? 1932

“தமிழ்த்தாத்தா” – பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?

·         மகாமகோபாத்தியாய

·         திராவிட வித்தியா பூஷணம்

·         தாக்ஷிணாத்திய கலாநிதி

·         1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

 

உ.வே.சா. அவர்களின் பன்முகங்கள் யாவை?

·         இணையற்ற ஆசிரியர்

·         புலமைப் பெருங்கடல்

·         சிறந்த எழுத்தாளர்

·         பதிப்பாசிரியர்

·         பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.

·         கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

 

உ.வே.சாவிற்கு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்புகள் யாவை?

உ.வே.சாவின் திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.


 

tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes, 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.