Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 02 பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் PDF



HISTORY 6TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :


1.  பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் (100 questions) (14/07/2020)

2.  இந்தியா - மௌரியருக்குப் பின்னர் (63 questions) (16/07/2020)

3.  பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்(94 questions) (18/07/2020)

4.  தென்னிந்திய அரசுகள் (68 questions) (19/07/2020)


1.  எந்தத்திணை மென்புலம் என்று அழைக்கப்பட்டது?  

2. துறைமுகங்களில் இருந்த ஒளிவிலக்குக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?  

3. எந்த பாண்டிய அரசனோடு தலையாலங்கானம் தொடர்பு உடையது பாண்டியன்

4. கிழார் என்பவர் _____ ஆவார்.

5. பண்டைய தமிழகத்தில் நில வரி எவ்வாறு அழைக்கப்பட்டது? 

6. சங்க காலத்தில் நகரங்களில் தீர்ப்பு வழங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

7. சங்க காலத்தில் கிராமங்களில் தீர்ப்பு வழங்கும் இடத்திற்கு பெயர் என்ன?

8. சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

9. சங்ககால உள்ளாட்சி நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?                                   
10. சங்க காலத்தில் துறைமுகங்களை குறிக்கும் பொதுச் சொல் எது?

11. சங்க காலத்தில் பொருளாதார வசதி மிக்க மக்கள் எவ்வித ஆடைகளை அணிந்தனர்?

12. சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட பாம்பின் தோலை காட்டிலும் 
மென்மையான ஆடை எது?



13. மறவர் மறத்தியர் எந்த நில மக்கள்?

14. வீரச் செயல்கள் எந்த நில மக்களின் தொழில் ஆகும்?

15. சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் இருந்தனர்?

16. சங்க காலத்தில் பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது எது?

17. சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்?

18. சங்ககாலத்தில் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்த அவர் 
எவ்வாறு அழைக்கப்பட்டார்?

19. சங்க காலத்தில் பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?                    

20. சங்க காலத்தில் நடனமாடுபவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

21. சங்ககால முக்கியத் துறைமுகங்களில் உள்ள ஒளிவிளக்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

22. பட்டினம் என்ற சொல் எதைக் குறிக்கும்?

23. திணை என்ற சொல்லின் பொருள் என்ன?

24. மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது?

25. வன்புலம் புன்செய் என்றழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது?

26. பரதவர் பரத்தியர் எந்த நில மக்கள்?

27. படைத்தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? 

28. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை கட்டியவர் யார்? 

29.சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல்?  

30. வெண்ணி போரில் வெற்றி பெற்றது யார்? 

31. கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை 
பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது?

32.தென் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர் யார்?

33.சேர சோழ 5 வேளிர் குல தலைவர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இடையே போர் நடைபெற்ற இடம் எது?

34.குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?

35.கொற்கையின் தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

36.பாண்டியர்களின் நாணயத்தில் இடம்பெற்ற உருவங்கள் யாவை?                                              
37.வேத வேள்விகளை நடத்தி நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர் யார்?

38.ஆதவன் குட்டுவன் வானவன் இரும்பொறை ஆகிய பட்டங்களை கொண்டவர் யார்?

39.சென்னி செம்பியன் கிள்ளி வளவன் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்?

40.மாறன் வழுதி செழியன் தென்னர் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்?

41. இளஞ்சேரல் இளஞ்செழியன் என்பது யாரை குறிக்கும்?



42.ஆநிரை மேய்ப்பவர் குறிக்கும் சொல் எது?

43.சந்திரன் திதியன் நன்னன் என்பவர்கள் எந்த குறுநில மன்னர்கள் ஆவர்?

44.பண்டைய தமிழகத்தில் நிலவுடமை பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

45.கிழார் என்பவர் யார்?

46.பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது?

47.கோமகன் என்று யாரை அழைத்தனர்?

48.இளங்கோ என்று யாரை அழைத்தனர்?

49. கல்லணையால் பாசன வசதி பெறும் நிலப்பகுதி எவ்வளவு?

50.அரசுரிமை சின்னங்களாக கருதப்பட்டவை எவை? 
                                                              
51.கோ என அழைக்கப்பட்டவர் யார்?

52. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?                                          
53. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன்.
3. சங்க காலத்தை சேர்ந்த இலக்கியங்கள் உரைநடையில் எழுதப்பட்டன. 

54. கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் எனப்பட்டது
காரணம்: சங்க இலக்கியங்களின் மொழி தமிழ் ஆகும்.                                                            
55. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ___________ ? 


56.சங்க காலத்தில் அரசின் முக்கிய வருவாய் எது?

57. சங்க காலத்தில் மதுரையில் இருந்த காலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது?

58.சங்க காலத்தில் மதுரையில் இருந்த மாலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது?

59.எந்த மன்னன் சவப்பெட்டியில் மலபார் கருமிளகு கண்டுபிடிக்கப்பட்டது?                               
60. இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் யார்?                          

61. சங்ககாலத்தில் இருந்த முதல் பேரங்காடி எது அவ்வாறு குறிப்பிட்டவர் யார்?                               

62. ரோமானிய கடவுளின் பெயர் என்ன?

63. கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட அலெக்சாண்ட்ரியா மற்றும் முசிறி வணிகர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பதிவு தற்போது எங்கு உள்ளது?

64. களப்பிரர்கள் எவ்வளவு காலம் தமிழகத்தை ஆண்டனர்?

65. தமிழ் நாவலர் சரிதை யாப்பெருங்கலம் பெரியபுராணம் சீவகசிந்தாமணி குண்டலகேசி ஆகிய நூல்கள் யாருடைய காலத்தில் இயற்றப் பட்டன?

66. களப்பிரர் காலத்தில் உருவான எழுத்துமுறை எது?

67. மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமம் இயற்றிய பாடல்களின் மொத்த தொகுப்பிற்கு என்ன பெயர்?

68. தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிட்டவர்கள் யார்?                                                                                                  

69. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது?

70. புகளூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது?

71. சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு எது?                                           
72. மாங்குளம் அழகர்மலை கீழவளவு கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?

73. சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் செப்புப்பட்டயங்கள் எவை?                                  
74. இயற்கை வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

75. புவியியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?

76. இண்டிகா என்ற நூலின் ஆசிரியர் யார்?

77. சங்ககாலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளை கொண்டிருந்தனர்?

78. சங்ககாலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழுவினர் எது?


79. சங்ககாலத்தில் இருந்த ராணுவ பிரிவுகள் யாவை?                                                                  

80. சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

81. இளங்கோவடிகளின் தமையனார் பெயர் என்ன?

82. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

83. தனது பெயரில் நாணயங்களை வெளியிட சேர அரசர் யார்?

84. இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

85. சோழ அரசின் வடக்கு எல்லை எது?

86. சேர அரசர்கள் குறித்த செய்தியை வழங்குவது எந்த நூல்?

87. மத்திய வடக்கு திருவிதாங்கூர் கொச்சி தெற்கு மலபார் ஆகியவற்றை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் யார்?

88. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?

89. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?                                                                   

90. கரிகாலனுக்கு சேர பாண்டிய 11 ம் சேர பாண்டிய 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் எது? 
                                                 
91. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார்?

92. சோழர்களின் துறைமுகம் எது?

93. கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பண்டைய தமிழ் மன்னர்கள் யார்?

94. வட இந்தியாவின் மீது படையெடுத்த சேர மன்னர் யார்?

95. இமயமலையிலிருந்து கண்ணகி சிலைக்கு கற்களை கொண்டு வந்தவர் 
யார்?

96. சங்ககாலத்தில் தோமரம் என்று அழைக்கப்பட்ட ஆயுதம் எது?

97. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படும் ஆயுதம் எது?

98. சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

99 சங்ககாலத்தின் கால அளவு யாது?                                                                                               
100. சங்க காலம் எந்த உலோக காலத்தைச் சார்ந்தது?

101. தமிழ் மொழியானது லத்தீன் மொழி அளவுக்கு பழமையானது என்றவர் யார்?

102. வேந்தர் என்னும் சொல் யாரைக் குறிப்பிட பயன்பட்டது?






கருத்துரையிடுக

0 கருத்துகள்