திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள்
வெள்ளி வீதியார்செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார் இல்
மாங்குடி மருதனார்
ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு
எறிச்சலூர் மலாடனார்
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின் திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
போத்தியார்
அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல் திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை
மோசிகீரனார்
ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம் மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி அந்தாமரை மேல் அயன்
மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால் பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை
பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப் பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்
உருத்திர சன்மகண்ணர்
மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு
minnal vega kanitham