Type Here to Get Search Results !

8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும், 8th மக்களின் புரட்சி, 7th வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 2025 TNTET Paper - 2

8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

1.    காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது - வேளாண்மையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக இருந்தது.

2.    மக்களின் முதல்நிலைத் தொழில்- வேளாண்மை.

3.    வேளாண்மை சார்ந்த பிற தொழில்கள்:

நெசவுத் தொழில்

சக்கரை தொழில்

எண்ணெய் தொழில்

4.    ஆங்கிலேய அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய மூன்று பெரிய நில வருவாய் மற்றும் நில உரிமை திட்டம்:

நிலையான நிலவரி திட்டம்

மகல்வாரி திட்டம்

இரயத்துவாரி திட்டம்

5.    1765 ல் வங்காளம், பீகார், ஓரிசா ஆகிய பகுதிகளில் ஓராண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்.

6.    ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றிய பின்பு ஓராண்டு திட்டமாக மாற்றிய ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.

7.    நிலையான நிலவரி திட்டத்தை பிறகு பத்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர் - காரன் வாலிஸ் பிரபு.

8.    காரன் வாலிஸ் நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு -1793.

9.    நிலையான நிலவரி திட்டம் கொண்டுவரப்பட்ட பகுதிகள்:

வங்காளம்

பீகார்

ஒரிசா

வடக்கு கர்நாடகம்

உத்திர பிரதேசத்தில் (வாரணாசி)

10.   நிலையான நிலவரி திட்டம் இந்தியாவில் மொத்த - 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

11.   நிலையான நிலவரி திட்டத்தின் வேறு பெயர்கள்:

ஜமீன்தாரி

ஜாகீர்தாரி

மல்குஜாரி

பிஸ்வேதாரி

12.   ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை - ஜமீன்தாரி முறை.

13.   ஜமீன்தார்கள் விவசாயிகளிடமிருந்து வசூலித்த வரியினை எத்தனை பங்கு ஆங்கில அரசுக்கு செலுத்தினர் - 10/11 பங்கு.

14.   ஆங்கிலேயர்களால் நிலவுடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்- ஜமீன்தார்கள்.

15.   விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்ட வர்கள்- ஜமீன்தார்கள்.

16.   ஜமீன்தார்கள் வணிகக் குழுவிற்கு செலுத்தும் வரி நிர்ணயிக்கப்பட்டு எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.

17.   ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு பட்டா வழங்கினர். இதன்மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களாக கருதப்பட்டனர்.

18.   1820 ல் இரயத்துவாரி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மன்றோ, கேப்டன் ரீ்ட்.

19.   இரயத்துவாரி முறை கொண்டுவரப்பட்ட பகுதிகள்:

பம்பாய்

அசாம்

மதராஸ்

கூர்க்

20.   நிலத்தின் உரிமையானது விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது முறை- இரயத்துவாரி முறை.

21.   இரயத்துவாரி முறையில் தொடக்கத்தில் நில வருவாய் நிர்ணயிக்கப்பட்டது- விளைச்சலில் பாதி.

22.   இரயத்துவாரி முறையில் விளைச்சலில் 1/3 பங்கு குறைத்தவர் - தாமஸ் மன்றோ.

23.   இரயத்துவாரி முறையில் 20 மற்றும் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின் மீதான குத்தகை மாற்றியமைக்கப்பட்டது.

24.   ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தபடாத பகுதி – வங்காளம்.

25.   மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றப்பட்ட வடிவம் - ஹோல்ட் மெகன்சி.

26.   மகல்வாரி முறையை 1833 இராபர்ட் மெர்கின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின் படி மாற்றியமைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு.

27.   1822 ல் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி:

கங்கை சமவெளி

வடமேற்கு மாகாணங்கள்

மத்திய இந்தியாவில் சில பகுதிகள்

பஞ்சாப்

28.   மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் - வில்லியம் பெண்டிங் பிரபு. மகல்வாரி முறையில் "மகல்என்றால் - கிராமம்.

29.   மகல்வாரி முறையையில் நிலவருவாய் தொடக்கத்தில் மொத்த விளைச்சலில் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது - 2/3 பங்கு.

30.   மகல்வாரி முறையையில் மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50 % என குறைத்தவர்- வில்லியம் பெண்டிங் பிரபு.

31.   மகல்வாரி முறையில் நில வருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமித்தவர் - கிராமத் தலைவர்.

32.   1833-ல் மகல்வாரி முறை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பகுதிகள் - ஆக்ரா, அயோத்தி.

33.   மகல்வாரி முறையில் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத் தரகராக செயல்பட்டவர்- கிராமத் தலைவர்.

34.   ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறை - மகல்வாரி முறை.

35.   ஆங்கிலேயர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் எதிராக விவசாயிகள் பல புரட்சிகளில் ஈடுபட்ட நூற்றாண்டு. – 19, 20 ஆம் நூற்றாண்டு.

36.   ஜமீன்தார்கள், மக்களுக்கும் ஆங்கிலேயர் அரசுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட திட்டம் - நிரந்தர நிலவரி திட்டம்.

37.   விவசாயிகளுக்கும், ஆங்கிலேயர் அரசும் நேரடி தொடர்பு- இரயத்துவாரி முறை.

38.   1855-1856 விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் - சாந்தல் கலகம்.

39.   சாந்தல் மக்கள் வேளாண்மை செய்து வந்த பகுதி – பீகார், ராஜ்மகால்.

40.   சாந்தல் கிளர்ச்சியினை தலைமை தாங்கிய சாந்தல் சகோதரர்கள் – சித்து, கங்கு

41.   1856-ல் ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்ற விவசாயிகளின் கலகம் - சாந்தல் கலகம்.

42.   சாந்தலர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் - சாந்தல் மண்டலம், சாந்தல் பர்கானா மண்டலம்

43.   இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு -1859 செப்டம்பர்.

44.   இண்டிகோ கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது- திகம்பர் பிஸ்வாஸ், பிஸ்ணு பிஸ்வாஸ்.

45.   இண்டிகோ கலகம் நடைபெற்ற இடம் - வங்காளம் - நாதியா மாவட்டம்.

46.   இண்டிகோ கலகத்தின் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையத்தை அமைத்த ஆண்டு -1860.

47.   அவுரி ஆணையத்தின் பரிந்துரைப்படி 1862 சட்டம் - பாகம் VI யை உருவாக்கியது.

48.   ஜரோப்பிய பண்ணையாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் குடியேறிய பகுதிகள்- பீகார், உத்திரபிரதேசம்.

49.   இண்டிகோ சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்திய பத்திரிகை - இந்து, தேசபக்தன்.

50.   வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர - நீல் தர்பன் என்ற ஒரு நாடகத்தை எழுதியவர்- தீனபந்து மித்ரா.

51.   பாப்னா கலகம் (1873-76) வங்காளத்தில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது- கேசப் சந்திர ராய்.

52.   தக்காணத்தில் விவசாயிகளின் குறைகளை போக்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம்- தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.

53.   பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காண கலகத்தில் ஈடுபட்ட ஆண்டு -1875.

54.   பஞ்சாப் விவசாயிகளை பாதுகாப்பதற்காக பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1900.

55.   ஆங்கிலேய இராணுவத்திற்குகு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட இடம் – பஞ்சாப்.

56.   1917-1918 சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற மாநிலம் - பீகார்.

57.   சம்பரான் விவசாயிகள் தங்களது மொத்த நிலத்தில் - 3/20 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்

58.   ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க - சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறைக் கொண்டு வரப்பட்டது.

59.   மகாத்மா காந்தி அவர்கள் எந்த மக்களுக்கு உதவ முன்வந்தார் – சம்பரான்.

60.   கேடா (கைரா) சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு-1918 சர்தார் வல்லபாய் படேல் முக்கிய தலைவராக உருவானார்.

61.   சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - மே 1918.

62.   மாப்ளா விவசாயிகள் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆண்டு-1921 ஆகஸ்ட்.

63.   மாப்ளா கிளர்ச்சியின் போது அரசு தலையீட்டின் விளைவாக 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 காயமடைந்தனர், 45000 சிறைபிடிக்கப்பட்டனர்.

64.   1937 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபொழுது – விவசாயிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திரும்பி தரப்பட்டது – பர்தோலி.

65.   பொருத்துக:

நிரந்தர நிலவரி திட்டம் - வங்காளம்

மகல்வாரி முறை - வடமேற்கு மாகாணம்

இரயத்துவாரி முறை - மதராஸ்

நீல் தர்பன் - வங்காளம் இண்டிகோ விவசாயிகளின் துயரம்

சந்தால் கலகம் - முதல் விவசாயிகள் கிளர்ச்சி.


8th மக்களின் புரட்சி

 

8th - மக்களின் புரட்சி

1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன? 1757.
2) ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரால் ஏற்பட்டது? பூலித்தேவர்.
3) எந்த அரசு தனது மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தது? விஜய நகர அரசு.
4) தமிழ்நாட்டில் பாளையக்காரரை நியமித்தவர்கள் யார்? மதுரை நாயக்கர்கள்.
5) விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு நாயக்கர் ஆனார்? 1529.
6) விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் யார்? அரியநாதர்.
7) தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1529.
8) நாடு மொத்தம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டது? 72.
பாளையக்காரர்கள் வசூலிக்கப்பட்ட வரி:
I) வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு நாயக்கர்களுக்கும்.
II) அடுத்த மூன்றில் ஒரு பங்கு இராணுவ செலவிற்கும்.
III) மீதியை தங்களின் சொந்த செலவிற்கு பயன்படுத்தினர்.
9) தமிழ்நாட்டில் பாளையக்காரர் எந்த நூற்றாண்டில் முக்கிய பங்கு வகித்தனர்? 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு.
10) பாளையக்கார்ர்களிடையே எத்தனை பாளையங்கள் இருந்தன? இரண்டு (கிழக்கு, மேற்கு)
11) கிழக்கு பாளையங்களை ஆட்சி செய்தவர்கள் யார்? நயக்கர்கள்.
12) கிழக்கு பாளையக்காரர்கள் யாருடைய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்தனர்? கட்டபொம்மன்.
13) மேற்கு பாளையங்களில் இருந்தவர்கள் யார்? மறவர்கள்.
14) மேற்கு பாளையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? பூலித்தேவர்.
15) பாளையகார்ர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் புரட்சி எதனால் ஏற்பட்டது? கப்பம் கட்ட மறுத்ததால்.
16) கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 1792.
17) இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்? பூலித்தேவர்.
18) பூலித்தேவர் எந்தப் பகுதியின் பாளையக்கார்ர் ஆவார்? திருநெல்வேலி அருகே இருந்த நெற்கட்டும்செவல்.
19) பூலித்தேவர் யாருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்க்க தொடங்கினார்? ஆற்காடு நவாப் முகமது அலி.
20) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் யாரைத் தாக்கின? பூலித்தேவர்.
21) ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரால் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டனர்? திருநெல்வேலியில்.
22) இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்? பூலித்தேவர்.
23) யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலை தாக்கிய ஆண்டு? 1759.
24) யூசுப்கான் படையினால் பூலித்தேவர் எந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டார்? அந்தநல்லூர்.
25) ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு? 1761.
26) பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கைக்கு பின் நெற்கட்டும்செவலைக் கைப்பற்றிய ஆண்டு என்ன? 1764.
27) கேப்டன் கேம்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1767.
28) கட்டபொம்மனின் முன்னோர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? ஆந்திரா.
29) கட்டபொம்மனின் முன்னோர்கள் தமிழ்நாட்டிற்கு எந்த நூற்றாண்டில் குடிபெயர்ந்தனர்? 11ஆம் நூற்றாண்டு.
30) பாண்டியர்களின் கீழ் நிலமானிய அடிப்படையில் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் யார்? ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
31) ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது? வீரபாண்டியபுரம்.
32) ஜெகவீரபாண்டியனின் மகன் யார்? வீரபாண்டிய கட்டபொம்மன்.
33) வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி யார்? ஜக்கம்மாள்.
34) வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்? ஊமைத்துரை, செவத்தையா
35) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குபின் தெற்கில் தங்கள் மேலாண்மையை நிறுவியவர்கள் யார்? முகலாயர்கள்.
36) கர்நாடகாவில் நவாப் முகலாயர்களின் பிரதிநியாக செயல்பட்டார்.
37) பாஞ்சாலங்குறிச்சி பாளையம் யாருடைய ஆளுகையின் கட்டுப்பாட்டில் இருந்தது? ஆற்காடு நவாப்.
38) எந்த உடன்படிக்கையின்படி கம்பெனி பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றது? கர்நாடகா உடன்படிக்கை 1792.
39) இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் எந்த ஆண்டு கட்டபொம்மனை நிலுவைத் தொகை செலுத்த சொல்லி கடிதம் எழுதனார்? 1798.
40) கலெக்டர் ஜாக்சனுக்கு கட்டபொம்மன் எழுதிய பதில் கடிதம் என்ன? "பஞ்சத்தின் காரணமாக நிலுவையைச் செலுத்தும் சூழ்நிலையில் இல்லை".
41) 1798 இல் கட்டபொம்மன் யாருடன் சென்று இராமநாதபுரத்தில் கலெக்டர் ஜாக்சனை சந்தித்தார்? அமைச்சர் சிவசுப்பிரமணியம்.
42) கட்டபொம்மன் எவ்வளவு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினார்? 1080 பகோடா நீங்கலாக.
43) கட்டபொம்மனும், சிவசுப்பிரமணியமும் ஜாக்சன் முன்பு எவ்வளவு நேரம் நிற்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்? 3 மணிநேரம்.
44) ஜாக்சனால் சிறை பிடிக்கப்பட்ட கட்டபொம்மனை தப்பிக்க உதவி செய்தவர் யார்? ஊமைத்துரை.
45) இறுதியில் சிறை பிடிக்கப்பட்டவர் யார்? சிவசுப்பிரமணியம்.
46) பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் காலின் ஜாக்சன் அவரிடம் நடந்துகொண்டதை யாருக்கு கடிதம் மூலம் தெரிவுபடுத்தினார்? சென்னைக் கவுன்சில்.
47) கட்டபொம்மனின் கடிதத்தைக் கண்ட சென்னை கவுன்சில் ஜாக்சனை பதவி நீக்கி யாரை இராமநாதபுர கலெக்டராக நியமிக்கப்பட்டது? எஸ்.ஆர். லூஷிங்டன்.
48) சென்னை கவுன்சிலின் கவர்னர் யார்? எட்வர்டு கிளைவ்.
49) "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள்" கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
50) "திருச்சிராப்பள்ளி பிரகடத்தை" வெளியிட்டவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
51) தென்னிந்திய கூட்டமைப்பில் இணைய மறுத்த பாளையம் எது? சிவகிரி பாளையம்.
52) 1799 செப்டம்பர் 05 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையை அனுப்பி வைத்த ஆங்கிலேயர் யார்? மேஜர் பானர்மேன்.
53) சிவசுப்பிரமணியம் எங்கு நடைபெற்ற சண்டையில் கைது செய்யப்பட்டார்? கள்ளர்பட்டி.
54) கட்டபொம்மன் எங்கு தப்பித்துச் சென்றார்? புதுக்கோட்டை
55) களப்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மனை காட்டிக்கொடுத்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்? ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
56) பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கம்பெனியின் கைவசம் வந்த பிறகு மேஜர பான்ர்மேன் கைதிகளை என்ன செய்தார்? மாதண்டனை வழங்கினார்.
57) சிவசுப்பிரமணியம் எந்த இடத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்? நாகலாபுரம்.
58) 1799 அக்டோபர் 16 ஆம் நாள் கட்டபொம்மன் பாளையக்காரர் அவையின் முன் விசாரிக்கப்பட்டார். 
59) கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு (1799 அக்டோபர் 17)
60) சிவகங்கையின் ராணி வேலுநாச்சியார் எந்த வயதில் முத்துவடுகநாதரை திருமணம் செய்துகொண்டார்? 16 ஆம் வயதில்.
61) ஆற்காடு நவாப் படைகள் எந்த ஆண்டு சிவகங்கையை தாக்கியது? 1772.
62) முத்துவடுகநாதர் எங்கு நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்? காளையார்கோவில் (1772).
63) வேலுநாச்சியார்-முத்துவடுகநாதர் தம்பதியருக்கு பிறந்த பெண் மகள் யார்? வெள்ளச்சி நாச்சியார்.
64) வேலுநாச்சியார் தனது பெண்மகளுடன் யாருடைய பாதுகாப்பில் வாழ்ந்தார்? திண்டுக்கல்-விருபாட்சியில் கோபாலநாயக்கர்.
65) வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி யார்? குயிலி.
66) வேலுநாச்சியார் ஆங்கிலேயரை எதிர்க்க உதவி புரிந்தவர்கள் யார்? மருது சகோதரர்கள்.
67) இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி யார்? வேலுநாச்சியார்.
68) வேலுநாச்சியார் தமிழர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்? "வீரமங்கை", "தென்னிந்தியாவின் ஜான்சிராணி".
69) பொன்னாத்தாள்-மூக்கைய்யா பழனியப்பன் ஆகியோரின் புதல்வர்கள் யார்? மருது சகோதரர்கள்.
70) மருது சகோதரர்களில் மூத்தவர் யார்? பெரிய மருது (வெள்ளை மருது)
71) மருது சகோதரர்களில் இளையவர் யார்? சின்ன மருது (மருது பாண்டியன்)
72) சின்ன மருது யாரிடம் பணிபுரிந்தார்? முத்துவடுக நாத பெரிய உடையத்தேவர்.
73) சிவகங்கை மீண்டும் கைப்பற்றப்பட்டு அரசராக பொறுப்பேற்றவர் யார்? பெரிய மருது.
74) பெரிய மருதுவிற்கு ஆலோசகராக இருந்தவர் யார்? சின்ன மருது.
75) "சிவகங்கை சிங்கம்" யார்? சின்ன மருது.
76) மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்ற மோதலுக்கான 
காரணங்கள்:
I) கட்டபொம்மனின் இறப்பிற்கு பின் அவருடைய சகோதரர் ஊமைத்துரையும் மற்றவர்களும் சிவகங்கைக்குத் தப்பித்தனர்.
II) சிவகங்கையில் மருது சகோதரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.
III) சிவகங்கை வியாபாரிகள், தங்களது உள்நாட்டு கொள்கையில் கம்பெனியின் தலையீட்டை விரும்பவில்லை.
77) எந்த ஆண்டு கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரையும், செவத்தையாவும் சிறையிலிருந்து தப்பித்து கமுதியை வந்தடைந்தனர்? 1801 பிப்ரவரி.
78) சிறையிலிருந்து தப்பித்த ஊமைத்துரையும், செவத்தையாவையும் சின்ன மருது எங்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார்? சிறுவயல்.
79) கட்டபொம்மனின் சகோதரர்கள் மீண்டும் புனரமைத்த கோட்டை எது? பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
80) மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தாக்கிய ஆங்கில படை எது? காலின் மெக்காலே.
81) மருது சகோதரர்களுக்கு எதிராக படைநடத்தி சென்றவர்கள் யார்? கர்னல் அக்னியூகர்னல் இன்ஸ்.
82) தென்னிந்திய கூட்டமைப்பில் இருந்தவர்கள் யாவர்:
I) சிவகங்கையின் மருது சகோதரர்கள்.
II) திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்.
III) மலபாரின் கேரளவர்மன்.
IV) மைசூரின் கிருஷ்ணப்பநாயக்கர்.
V) துண்டாஜி.
83) "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" அல்லது "சுதந்திர பிரகடனம்" அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன? 1801 ஜீன்.
84) ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது எது? திருச்சிராப்பள்ளி பிரகடனம்.
85) திருச்சிராப்பள்ளி பிரகடனம் எங்கெங்கு ஒட்டப்பட்டது?
I) ஆற்காடு நவாப்பின் அரண்மனையான திருச்சி கோட்டை சுவரிலும்.
II) ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது.
86) ஆங்கிலேயரை எதிர்த்து போரிட மருது சகோதரர்களிடம் இருந்த வீரர்கள் எத்தனை பேர்? 20000 பேர்.
87) ஆங்கிலேய படைகளுக்கு வலுவூட்ட எந்தப் பகுதியிலிருந்து படைகளை வரவழைத்தனர்இலங்கை, மலேயா.
88) புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசர்கள் யாருக்கு ஆதரவு அளித்தனர்? ஆங்கிலேயர்களுக்கு.
89) பாளையக்கார்ர்களின் படைகளில் பிளவை ஏற்படுத்தியது எது? ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை.
90) 1801 இல் ஆங்கிலேயர்கள் எந்தப் பகுதியை தாக்கினர்? தஞ்சாவூர், திருச்சி.
91) கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு பயந்து எப்பகுதிக்குச் சென்றனர்? பிரான்மலை, காளையார் கோயில்.
92) தென்னிந்திய கிளர்ச்சியில் வென்றவர்கள் யார்? ஆங்கிலேயர்கள்.
93) சிவகங்கையை மருது சகோதர்ர்கள் இணைத்துக் கொண்டது எந்த ஆண்டு? 1801.
94) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? இராமநாதபுரம் திருப்பத்தூர் கோட்டை
95) மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் எது? அக்டோபர் 24, 1801.
96) ஊமைத்துரை, செவத்தையா தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நாள் எது? பாஞ்சாலங்குறிச்சி? 1801 நவம்பர் 16.
97) கிளர்ச்சியாளர்களில் எத்தனை பேர் மலேயாவில் உள்ள பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டனர்? 73 பேர்.
98) பினாங் தீவு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? வேல்ஸ் இளவரசர் தீவு.
99) ஆங்கிலேய ஆவணங்களில் "இரண்டாவது பாளையக்காரர் போர்" எனக் குறிப்பிடப்படும் போர் எது? தென்னிந்திய கிளர்ச்சி (1800-1801)
100) கர்நாடக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட நாள் எது? 1801 ஜீலை 31.
101) தீரன் சின்னமலை பிறந்த ஊர்? ஈரோடு சென்னிமலை (மேலப்பாளையம்).
102) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கொங்கு நாட்டு பாளையக்காரர் யார்? தீரன் சின்னமலை.
103) கொங்கு நாடு: சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர்.
104) கொங்கு பகுதி யாரால் இணைக்கப்பட்டது? மைசூர் உடையார்களால்.
105) மைசூர் உடையார்கள் வீழ்ந்த பிறகு அப்பகுதி யாரால் ஆளப்பட்டது? மைசூர் சுல்தான்கள்.
106) தீரன் சின்னமலை எந்த இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்றிருந்தார்? பிரெஞ்சு.
107) திப்புசுல்தான் பக்கம் இருந்து ஆங்கிரேயருக்கெதிராக போராடி வெற்றிபெற்றவர் யார்? தீரன் சின்னமலை.
108) தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்க்க கோட்டை கட்டிய இடம் எது? ஓடாநிலை.
109) தீரன் சின்னமலை எப்பகுதிகளில் கொரில்லா போர் முறையைப் பின்பற்றி ஆங்கிலேயர்களை தோற்கடித்தார்? காவேரி, ஓடாநிலை, அரச்சலூர்.
110) இறுதி போரின் போது தீரன் சின்னமலையை காட்டிக் கொடுத்தவர் யார்? அவரின் சமையற்காரர் நல்லப்பன்.
111) தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்? 1805 சங்ககிரி கோட்டை
112) நான்காம் மைசூர் போருக்கு பின் திப்புவின் குடும்பத்தினர் எங்கு சிறை வைக்கப்பட்டனர்? வேலூர் கோட்டை
113) ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் எங்கு இடம்பெயர்ந்தனர்? வேலூர்.
114) 1803 இல் சென்னை மாகாண கவர்னர் யார்? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
115) யாருடைய காலத்தில் இராணுவத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது? வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
116) 1803 ல் சென்னை மாகாண படைத்தளபதி யார்? சர் ஜான் கிடராக்.
117) வேலூர் புரட்சிக்கான காரணங்கள்:
I) புதிய ஆயுதங்கள், புதிய முறைகள் மற்றும் சீருடைகள் சிப்பாய்களுக்கு அறிமுகம்.
II) தாடி, மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
III) சமய அடையாளத்தை நெற்றியில் இடுதல், காதுகளில் வளையம் அணிதல் ஆகியவை தடை செய்யப்பட்டன.
IV) ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை தாழ்வாகவும், இன பாரட்சமும் காட்டி நடத்தினர்.
118) வேலூர் புரட்சிக்கான உடனடிக் காரணங்கள்:
I) ஜீன் 1806 இல் இராணுவத் தளபதி அக்னியூ தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.
II) "அக்னியூ தலைப்பாகை" எனப்பட்டது.
III) இந்து முஸ்லீம் வீரர்கள் இதனை ஒன்றாக எதிர்த்தனர்.
IV) இதனால் ஆங்கிலேயர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
119) திப்புவின் மூத்த மகன் யார்? பதே ஹைதர்.
120) வேலூர் புரட்சியை தொடங்கியவர்கள் யாவர்? 1 வது மற்றும 23 வது படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள்.
121) ஆங்கிலேய படையை வழிநடத்தியவர் யார்? கர்னல் பான்கோர்ட்.
122) திப்புவின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் என்ன? புலி.
123) கிளர்ச்சியாளர்கள் யாரை புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்? பதே ஹைதர்.
124) கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்? மேஜர் கூட்ஸ்.
125) வேலூர் கிளர்ச்சியை அடக்கிய ஆங்கில தளபதி யார்? கர்னல் கில்லெஸ்பி.
126) வேலூர் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை? மொத்தம் 113 பேர். (ஐரோப்பியர்கள்&300 சிப்பாய்கள்).
127) வேலூர் கலகத்தின் விளைவுகள்:
I) புதிய முறைகள்.
II) சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
III) வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
128) புரட்சிக்கு பிறகு திப்புவின் குடும்பம் எங்கு அனுப்பப்பட்டனர்? கல்கத்தா.
129) வேலூர் கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:
I) இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
II) கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
III) ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
130) 1806 இல் நடந்த வேலூர் கலக்ம் 1857 இல் நடைபெற்ற "முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி" என்று கூறியவர் யார்? வி.டி. சவார்க்கர்.
131) 1857 புரட்சிக்கான காரணங்கள்:
I) ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் கெள்கை.
II) வாரிசு இழப்புக் கொள்கை.
III) துணைப்படைத் திட்டம்.
IV) நாடு இணைக்கும் கொள்கை.
V) கிறிஸ்துவ சமய பரப்பாளர்களின் மத மாற்ற கொள்கை.
VI) சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் ஒழிப்பு நடவடிக்க்கைள் இந்திய கலாச்சாரத்தில் ஐரோப்பியர்கள் தலையிடுவதாக கருதினார்.
VII) ஆங்கிலேய சிப்பாய்களைக் காட்டிலும் இந்திய சிப்பாய்கள் குறைவான ஊதியமே பெற்றனர்.
132) பெரும்புரட்சிக்கான உடனடிக் காரணம்:
I) இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி.
II) குண்டுகளின் மேலுறை பசுவின் கொப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
III) இந்துக்கள் பசுவை புனிதமாக கருதினர்.
IV) முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்கள்.
133) புரட்சியின் முதல் பொறி எங்கு தொடங்கப்பட்டது? 1857 மார்ச் 29 பாரக்பூர்.
134) புரட்சியை தொடங்கி வைத்தவர் யார்? மங்கள் பாண்டே. (இவர் கொழுப்பு தடவிய துப்பாக்கியை தொட மறுத்து தனது உயரதிகாரியை சுட்டுக்கொன்றார்)
135) 1857 ஆம் ஆண்ட மே 10 ஆம் நாள் புரட்சி எங்கு வெடித்தது? மீரட்.
136) மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் சக படைவீரர்களை விடுவித்தன் மூலம், வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்டனர்.
137) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாருடன் இணைந்தனர்? 11 வது மற்றும் 20 வது உள்ளூர் காலாட்படை.
138) டெல்லிக்கு வந்த மீரட் சிப்பாய்கள் மே 11 ஆம் நாள் யாரை இந்தியாவின் பேர்ரசராக அறிவித்தனர்? இரண்டாம் பகதூர்ஷா.
139) புரட்சி பரவிய இடங்கள்? லக்னோ, கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத்.
140) ஆங்கிலப் படை குவாலியரை எப்போது கைப்பற்றியது? 1858 ஜீன்.
141) மத்திய இந்தியாவில் புரட்சி வழிநடத்திய பெண்மணி யார்? ராணி லட்சுமிபாய்.
142) புரட்சியை உடனடியாக அடக்க முயற்சி எடுத்தவர் யார்? கானிங் பிரபு.
143) கானிங் பிரபு புரட்சியை அடக்க படைகளை எங்கிருந்து வரவழைத்தார்? இலங்கை, சென்னை, பம்பாய்.
144) டெல்லி மீண்டும் யாரால் கைப்பற்றப்பட்டது? 1857 செப்டம்பர் 20 இல் நிக்கல்சன்.
145) இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்? ரங்கூன்.
146) இரண்டான் பகதூர்ஷா இறந்த ஆண்டு? 1862.
147) கான்பூரை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி யார்? சர் காலின் கேம்பெல்.
148) கான்பூரில் புரட்சியை வழி நடத்தி சென்றவர் யார்? நானாசாகிப்.
149) நானாசாகிப் எங்கு தப்பியோடினார்? நேபாளம்.
150) கலகம் பற்றியவை:

கலகம் நடைபெற்ற இடங்கள்

இந்திய தலைவர்கள்

கலகத்தை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகள்

டெல்லி

இரண்டாம் பகதூர்ஷா

ஜான் நிக்கல்சன்

லக்னோ

பேகம் ஹஸ்ரத் மகால்

ஹென்றி லாரன்ஸ்

கான்பூர்

நானாசாகிப்

சர் காலின் கேம்பெல்

ஜான்சி&குவாலியர்

ராணி லட்சுமிபாய், தாந்தியா தோப்

ஜெனரல் ஹக்ரோஸ்

பரெய்லி

கான் பகதூர் கான்

சர் காலின் கேம்பெல்

பீகார்

கன்வர் சிங்

வில்லியம் டைலர்

151) பெருங்கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:
I) சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை இல்லை.
II) கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை.
III) வங்காளம், பம்பாய், சென்னை. மேற்கு பஞ்சாப், இராஜபுதனம் புரட்சியில் கலந்துகொள்ளவில்லை.
IV) நவீனக் கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
V) சீக்கியர்கள், ஆப்கானியர்கள், கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் ஆதரவை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
152) விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? 1858.
153) கவர்னர்-ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டது? வைசிராய்.
154) இயக்குநர் குழு மற்றும கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் எத்தனை பேர் கொண்ட சபை அமைக்கப்பட்டது? 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சில்.
155) ஆங்கில இராணுவத்தில் ஆதிக்கம் செலுத்திய கொள்கை எது? "பிரித்தல் மற்றும் எதிர் தாக்குதல்".
156) நவீன இந்திய இயக்கம் தோன்ற வழிவகுத்த போர் எது? 1857 பெரும்புரட்சி.
157) "முதல் இந்திய சுதந்திரபோர்" என்ற தனது நூலில் 1857 ஆம் ஆண்டு புரட்சியை எவ்வாறு குறிப்பிட்டிருந்தார்? "ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர்" எனக் குறிப்பிட்டார்.

 




7th வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

1. பந்தேல்கண்டை ஆட்சி புரிந்தவர்கள்? சந்தேலர்கள்

2. ஹரியானாவை ஆட்சி புரிந்தவர்கள்? தோமரர்கள்

3. அனைத்து ராஜபுத்திர இனக்குழுவிற்கும் ஒருங்கிணையும் மையமாக விளங்கியது? சித்தூர்

4. பால அரசவம்சத்தை உருவாக்கியவர் யார்? கோபாலர்

5. ராஜபுத்திரர்களின் மூன்று குலங்கள்? சூரிய குலம், சந்திர குலம், அக்னி குலம்

6. ஆறாம் நூற்றாண்டில் கூர்ஜர அரச வமசத்தை தோற்றுவித்தவர்? ஹரிசந்திரா

7. பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களை கொடையாக வழங்கியவர்? தேவபாலர்

8. ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசை புலமையாளர் கி.பி.1829 ஆண்டு எத்தனை ராஜபுத்திர அரச குலங்கள் இருந்ததாக பட்டியலிட்டார்? 36 ராஜபுத்திர அரச குலங்கள்

9. பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமைமிக்க சக்தியாக உருவாக்கியவர்? தர்மபாலர்

10. சித்தூரின் ராணா (அரசர்) எந்த பகுதியை வெற்றி கொண்டதன நினைவாக 'ஜெய ஸ்தம்பா' எனும் வெற்றி தூண் சித்தூரில் நிறுவப்பட்டது? மாளவத்தை

11. பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமான அரசர் யார்? முதலாம் நாகபட்டார்

12. சௌகான் வம்சத்தின் கடைசி அரசர்? பிருதிவிராஜ் சௌகான்

13. 1191 ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர்? பிருதிவிராஜ் சௌகான்

14. பௌத்த கல்விக்கான மிகச்சிறந்த மையமாக விளங்கிய விக்கிரமசீலா மடாலயத்தை உருவாக்கியவர்? தர்மபாலர்

15. சௌகான்களின் தலைநகராக விளங்கியது எது? சாகம்பரி

16. பிரதிகாரர்களுக்கு கட்டுப்பட்ட குருநில மன்னர்களாக இருந்தவர்கள் யார்? சௌகான்கள்

17. தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலம் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள் என கூறிய வரலாற்றாளர்? ஆர்.சி.மஜீம்தார்

18. சுமத்ரா மற்றும் ஜாவாவை சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் நட்புறவு கொண்டவர்கள்? பாலர்கள்

19. சௌகான்கள் அரச வம்சத்தை தோற்றுவித்தவர்? சிம்மராஜ்

20. பிருதிவிராஜ ராசோ' எனும் நீண்ட காவியத்தை எழுதியவர்? சந்த் பார்தை

21. ரக்க்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது யாருக்கு உரியது? ராஜபுத்திரர்கள்

22. முதலாம் மகிபாலர் படையெடுப்பு வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முடியாமல் போக காரணமாக இருந்த தென்னிந்திய அரசர்? இராஜேந்திர சோழன்

23. 1192 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ்சொனை ரோற்கொலைசெய்கவர்? முகமதுடகோரி

24. இரண்டாம் பாலவம்சத்தை தோற்றுவித்தவர்? முதலாம் மகிபாலர்

25. திபெத்திய பௌத்தத்தை சீர்திருத்தம் செய்தவர் மற்றும் விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தவர்? அதிசா

26. ஆஜ்மீர் நகரை தோற்றுவித்தவர்? சிம்மராஜ்

27. பாலர்கள் எந்த மதத்தை பின்பற்றினர்? மகாயான பௌத்தம்

28. இஸ்லாமை தோற்றுவித்தவர்? இறைதூதர் முகமது நபிகள் நாயகம்

29. 1905 ஆண்டு வங்கப்பிரிவினையின் போது இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ரக்ஷாபந்தன் விழாவை தொடங்கியவர்? இரவீந்திரநாத் தாகூர்

30. கலீஃபா என்பது? இறைத்தூதர் முகமது நபிகளின் பிரதிநிதி

31. சந்துவின மது படைஎடுத்து, சிந்துவின அரசர தாகரை தோற்கடித்து கொலைசெய்தவர்? முகமது-பின்-காசி

32. ரக்ஷாபந்தன் என்பதன் பொருள்? சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழா

33. உமையது அரசின் படைத்தளபதி? முகமது-பின்-காசிம்

34. இஸ்லாம் எங்கு தோன்றியது? அரேபியாவில் உள்ள மெக்காவில்

35. ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு எவ்வாறு அழைக்கப்படும்? கலீஃபத்

36. பஞ்சாபிலுள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகே தானேஸ்வர் ஆகிய நகரங்கள் சூறையாடப்பட்ட ஆண்டு? 1011 ஆண்டு

37. கஜினி மாமூது மரணமடைந்த ஆண்டு? 1030 ஆண்டு

38. கஜினி மாமூது 1001 ஆண்டு ஷாகி அரசுக்கு எதிரான போரில் யாரை தோற்கடித்தார்? அரசர் ஜெயபாலர்

39. புஜியத்தின் முக்கியத்துவத்தை அரேபியர்கள் எங்கு இருந்து கற்றுக்கொண்டனர்? இந்தியாவில்

40. கஜினி மாமூது புனித நகரான மதுராவை கொள்ளையடித்த ஆண்டு? 1018 ஆண்டு

41. கஜினிக்கு கப்பம் கட்டிய குறுநில தலைவராக இருந்தவர்? முகமது கோரி

42. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது? துருக்கி

43. கஜினி மாமூது கன்னோஜ் மீது படைஎடுத்து எந்த அரசரை நாட்டை விட்டு ஓடவைத்தார்? அரசர் ராஜ்யபாலர்

44. புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலை கொள்ளையடித்து அங்கிருந்த கடவுள் சிலையை உடைத்தவர் யார்? கஜினி மாமூது

45. முகமது கோரிக்கு சொந்தம்மான இந்தியப்பகுதிகளை தனது கட்டுப்பாடிற்கு கொண்டுவந்த தளபதி? குத்புதீன் ஐபக்

46. கஜினி மாமூதுவை போல் இல்லாமல், இந்தியாவை கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய நினைத்தவர்? முகமது கோரி

47. முகமது கோரி மரணமடைந்த ஆண்டு? 1206 ஆண்டு

48. முகமது-பின்-காசிம் எந்த பகுதி மக்களுக்கு "பாதுகாக்கப்பட்ட மக்கள்" எனும் தகுதி வழங்கப்பட்டது? சிந்துபகுதிவாழ் மக்கள்

49. கஜினி மாமுது 1008 ஆண்டு பெஷாவருக்கு அருகே வைகிந்த் என்னும் இடத்தில் யாரை தோற்கடித்தார்? ஆனந்தபாலர்

50. தன்னை டெல்லியின் முதல் சுல்தான் என பிரகடனப்படுத்திக் கொண்டவர்? குத்புதீன் ஐபக்

51. கஜினி மாமூதின் 17 முறை படைஎடுப்பிற்கு காரணம்? இந்தியாவில் செல்வதை கொள்ளையடிப்பது

52. கஜினி மாமூது 1024 ஆண்டு சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரை தோற்கடித்து எந்த நகரை சூறையாடினர்? அன்கில்வாட்

53. இந்திய வரலாற்றில் முஸ்லீம்களின் புதிய சகாப்தம் ஏற்பட காரணமாக அமைந்த போர்? இரண்டாம் தரெய்ன் போர் - 1192


8th கிராம சமூகமும் வாழ்க்கை முறையும், 8th மக்களின் புரட்சி, 7th வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்




Uploading: 281600 of 281600 bytes uploaded.









Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.