Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 8 இந்திய அரசியலமைப்பு

0
6th தேசிய சின்னங்கள்
6th தேசிய சின்னங்கள்

1.    விரலிமலை மயில் சரணாலயம் உள்ள மாவட்டம் - புதுக்கோட்டை.
2.    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் - பாரதியார்.
3.    இந்தியாவின் நீளமான நதி - கங்கை 2525 கி. மீ.
4.    இந்தியாவின் தேசிய சின்னங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு-
                1.    தேசிய மரம் - ஆலமரம் - 1950.
                2.    தேசிய மலர் - தாமரை - 1950.
                3.    தேசிய பழம் - மாம்பழம் - 1950.
                4.    தேசிய பறவை - மயில் - 1963.
                5.    தேசிய விலங்கு - புலி - 1973.
                6.    தேசிய ஆறு - கங்கை - 2008.
                7.    பாரம்பரிய தேசிய விலங்கு - யானை - 2010.
                8.    தேசிய நீர் விலங்கு - ஆற்று ஓங்கில் - 2010.
                9.    தேசிய நுண்ணுயிரி - லாக்டோ பேசில்லஸ் – 2012.
               10.   தேசிய ஊர்வன - ராஜநாகம்.
5.    தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள்.
                1.    மாநில விலங்கு - வரையாடு .
                2.    மாநில பறவை - மரகதப்புறா.
                3.    மாநில மலர் - செங்காந்தல் மலர்.
                4.    மாநில மரம் - பனை மரம்.
6.    தேசிய கொடியின் நீளம் அகலம் - 3 : 2.
7.    தேசிய கொடியின் காவி நிறம் - தைரியம், தியாகம்.
8.    தேசிய கொடியின் பச்சை நிறம்- செழுமை, வளம்.
9.    தேசிய கொடியின் வெள்ளை  நிறம்- நேர்மை, அமைதி, துய்மை.
10.   இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் - பிங்காலி வெங்கையா (ஆந்திரா).
11.   விடுதலை இந்தியாவின் முதல் தேசிய கொடி எங்கு நெய்யப்பட்டது - குடியாத்தம்.(வேலூர்)
12.   இக்கொடியை பண்டித ஜவஹர்லால் நேரு (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
13.   இந்த கொடி தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
14.   தேசிய கொடியில் அசோகச் சக்கரத்தில் உள்ள ஆரம் - 24.
15.   திருப்பூர் குமரன் பிறந்த இடம் - சென்னிமலை. (ஈரோடு)
16.   கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டவர் - திருப்பூர் குமரன் (போராட்டத்தில் உயிர் நீத்தப்போது மூவர்ணக்கொடியைக் கீழே விடவில்லை).
17.   இந்தியாவின் தேசிய இலச்சினை - நான்கு முகச் சிங்கம்.
18.   இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி -26 , 1950.
19.   சத்தியமேவ ஜெயதே - என்பதன் பொருள் - வாய்மையே வெல்லும்.
20.   நமது இலச்சினையில் எத்தனை சிங்க உருவங்கள் மட்டுமே காண இயலும் - 3.
21.   இந்திய இலச்சினை பயன்படுத்தக்கூடிய இடம் - இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்பு, இந்திய நாணயம், கடவுச்சீட்டு.
22.   தேசிய கீதம் யாரால் வங்காள மொழியால் எழுதப்பட்டது -இரவீந்திரநாத் தாகூர்.
23.   தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 24 , 1950.
24.   தேசிய கீதம் 1911 டிசம்பர் - 27 ம் நாள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பாடப்பட்டது - கொல்கத்தா.
25.   தேசிய கீதம் எத்தனை வினாடிகளில் பாடி முடிக்க வேன்டும் - 52 வினாடி. (பொருள் புரிந்து சரியாக பாட வேண்டும், பாடும்போது எந்தவித அசைவின்றி நேராக நிற்க வேண்டும்)
26.   தேசிய பாடலை எழுதியவர் - பங்கிம் சந்திர சட்டர்ஜி.
27.   தேசியப்பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - ஜனவரி - 24 , 1950.
28.   தேசியப்பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது - ஆனந்த மடம்.
29.   தேசிய உறுதிமொழியை எழுதியவர் - பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.
30.   லாக்டோபேசில்லஸ் தேசிய நுண்ணுயிரயாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 2012.
31.   பாலை தயிராக மாற்றுவது - லாக்டோபேசில்லாஸ்.
32.   16- ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நானையம்-ருபியா.
33.   ரூபாய் என்ற சின்னத்தை வடிவமைத்தவர் - டி. உதய குமார் (தமிழ்நாடு)-2010.
34.   தேசிய நாட்காட்டி - சக ஆண்டு.
35.   தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1957 மார்ச் - 22.
36.   யார் தலைமையிலான நாட்காட்டி சிரமைப்பு குழு மூலம் சக நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது - மேக்னாத் சாகா.
37.   ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே, யாருடைய பாடல் - மகாகவி பாரதியார்.
38.   ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை அகில இந்திய வானோலியில் பாடியவர் - டி.கே பட்டம்மாள்.
39.   சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுபவர்-பிரதமர்.
40.   இந்திய குடியரசு நாளாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1950 ஜனவரி-26.
41.   நாட்டின் முதல் குடிமகன் - குடியரசு தலைவர்.
42.   குடியரசு நாளில் டெல்லி செங்கேட்டையில் கொடி ஏற்றுபவர்-குடியரசுத்தலைவர்.
43.   பாசறைக்கு திரும்புதல் என்ற விழா எப்போது நடைபெறும்-ஜனவரி-29.
44.   தேசத்தந்தை காந்தியின் பிரந்தநாள் - அக்டோபர் - 2.
45.   அக்டோபர் - 2 ம் நாளை சர்வதேச அகிம்சை நாளாக ஐ.நா சபை எப்போது அங்கிகரித்தது - 2007.
46.   ஆற்று ஓங்கில் - கங்கையில் வாழும் டால்பின்.
47.   இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கண மண.
48.   தேசிய கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் - கருநீலம்.
49.   1896 -தேசிய காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை பாடியவர் -ரவிந்திரநாத் தாகூர் .
50.   பெருத்துக.
                1.    ரவிந்திரநாத் தாகூர் - தேசியகீதம்.
                2.    பங்கிம் சந்திர சட்டர்ஜி - தேசியபாடல்.
                3.    பிங்காலி வெங்கையா - தேசியகொடி.
                4.    மேக்னாத் சாகா - வான் இயற்பியலாளர்.
                5.    யானை - ஆற்றல்.
                6.    குதிரை - வேகம்.
                7.    கடின உழைப்பு - காளை.
                8.    கம்பீரம் - சிங்கம் .


6th இந்திய அரசியலமைப்பு சட்டம்
6th இந்திய அரசியலமைப்பு சட்டம்

1.    இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு  - 1950 -ஜனவரி -26.
2.    1929 ஆண்டு எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழுசுயராஜ்யம் அடைவது முழக்கம் வலுப்பெற்றது - லாகூர்.
3.    முழுசுதந்திர நாளாக கொண்டாடப்பட்ட ஆண்டு - 1930 -ஜனவரி 26.
4.    நமது நாட்டின் உயர்ந்த சட்டம்  - இந்திய அரசியலமைப்பு சட்டம்.
5.    இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1946. நவம்பர் - 09
6.    இந்திய அரசியலமைப்பு எழுதிமுடிக்கப்பட்ட நாள் -1949. நவம்பர் - 26.
7.    அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் நாள்- நவம்பர் -26.
8.    இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் உருவாக்கப்பட்டபோது இருந்த உறுப்பினர்கள் - 389.
9.    இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் நிரந்தர தலைவர்  - ராஜேந்திர பிரசாத்.
10.   இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின்  தற்காலிக தலைவர் - சச்சிதானந்த சின்ஹா.
11.   அரசியலமைப்பு நிர்ணைய சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள் -15 பேர்.
12.   அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர் - அம்பேத்கார்.
13.   வரைவுக்குழுவின் மொத்த உறுப்பினர்கள் - 8 பேர்.
14.   வரைவுக்குழுவின் ஆலோசகர் - பி.என். ராவ்.
15.   அரசியலமைப்பின் வரைவுக்குவின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு – 1946 டிசம்பர் - 9.
16.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை - அம்பேத்கார்.
17.   இங்கிலாந்து , அமேரிக்கா , ரஷ்யா , ஃப்ரான்ஸ் , சுவிட்சர்லாந்து உட்பட எத்தனை நாடுகள் அரசியலமைப்பு சட்டங்களை வாசித்து அரசியலமைப்பு உருவாக்கினர் – 60.
18.   அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்வதற்கு முன்னர் எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன - 2000.
19.   அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் – 2 -ஆண்டு , 11- மாதம் , 18- நாட்கள்.
20.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க ஆன செலவு - 64 லட்சம்.
21.   அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை என்பது - முகவுரை.
22.   ஒரு நாட்டின் உச்ச நிலை அதிகாரம் - இறையான்மை.
23.   இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது - 18.
24.   அடிப்படை கடமைகள் - 11.
25.   அரசியலமைப்பு சட்டம் 16-09-2016 வரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 101.
26.   இந்திய அரசியலமைப்பு உண்மைபிரதிகள் (இந்தி , ஆங்கிலம்) நாடாளுமன்ற நூலகத்தில் எந்த வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது - ஹீலியம் வாயு.
27.   அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்கள்:
          1.    பி.ஆர் . அம்பேத்கர்.
          2.    என் .கோபால்சாமி.
          3.    கே. எம் முன்சி.
          4.    சையது முகம்மது சாதுல்லா.
          5.    என் . மாதவராவ்.
          6.    டி.டி கிருஷ்ணமாச்சாரி.
          7.    அல்லாடி கிருஷ்ணசாமி.
28.   அடிப்படை உரிமைகள்:
          1.    சமத்துவ உரிமை.
          2.    சுதந்திர உரிமை.
          3.    சுரண்டலுக்கெதிரான உரிமை.
          4.    சமய சுதந்திர உரிமை.
          5.    கல்வி கலாச்சார உரிமை.
          6.    சட்டத்தீர்வு பெறும் உரிமை.
29.   முகவுரை :
          1.    இறையான்மை.
          2.    சமத்துவம் .
          3.    சமயசார்பின்மை.
          4.    மக்களாட்சி.
          5.    குடியரசு.
30.   அரசியல்லமைப்பு சட்டம் உருவானபோது இருந்த உறுப்புகள், பகுதி, அட்டவனை:
          1.    உறுப்புகள்  395.
          2.    பகுதி - 22 .
          3.    அட்டவனை - 8 .
31.   அரசியல்லமைப்பு சட்டம் தற்போது உள்ள உறுப்புகள், பகுதி, அட்டவனை:
          1.    உறுப்புகள் - 448.
          2.    பகுதி -25.
          3.    அட்டவனை -12.
32.   அரசியலமைப்பு சட்டம் உருவாக்குவதில் இருந்த சிலர்:
          1.    ஜவஹர்லால் நேரு .
          2.    சர்தார் வல்லபாய் பட்டேல்.
          3.    மெளலானா ஆஸாத்.
          4.    எஸ் ராதாகிருஷ்ணன்.
          5.    விஜயலஷ்மி பண்டிட்.
          6.    சரோஜிணி நாயுடு.


6th மக்களாட்சி
6th மக்களாட்சி

1.    மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி -ஆப்ரகாம் லிங்கன் .
2.    மக்களாட்சியின் பிறப்பிடம் -  கிரேக்கம். Demos - மக்கள், Cratia  - அதிகாரம்.
3.    மக்களாட்சியின் இருவகை: நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி , (பிரதிநித்துவ மக்களாட்சி).
4.    நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்றுள்ள நாடு - சுவிட்சர்லாந்து.
5.    நேரடி மக்களாட்சி உள்ள நாடு  -  சுவிட்சர்லாந்து.
6.    பிரதிநிதித்துவ மக்களாட்சி உள்ள நாடு: இந்தியா, இங்கிலாந்து , அமெரிக்கா  ஐக்கியநாடுகள்.
7.    பிரதிநிதித்துவ மக்களாட்சி வகைகள் : அதிபர் மக்களாட்சி , நாடாளுமன்ற மக்களாட்சி .
8.    நாடாளுமன்ற மக்களாட்சி உள்ள நாடு :  இந்தியா,  இங்கிலாந்து.
9.    நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவர்கள்  -  மக்கள்.
10.   அதிபர் மக்களாட்சி உள்ள நாடு: இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கஐக்கியநாடுகள்.
11.   உலக மக்களாட்சி தினம்  - செப்டம்பர் - 15.
12.   ஐ.நா சபை செப்டம்பர் - 15 யை உலக மக்களாட்சி தினமாக அறிவித்தஆண்டு  -  2007.
13.   உலகில் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்களில் மிகப்பெரியது - இந்திய அரசியலமைப்பு.
14.   மக்களாட்சி அமைப்பில் அதிகாரம் உள்ளவர்கள் - மக்கள்.
15.   உலகில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு - நியூஸிலாந்து - (1893).
16.   ஐக்கிய பேரரசு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு - 1918.
17.   அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு -  1920.
18.   இந்திய மக்களாட்சியில் நம் கொள்கையை கொண்டுள்ளவர்கள் எத்தனை சதவீதம்பேர் - 79% .
19.   கிரேக்கம் கி.மு.5 நூற்றான்டு - கிரீஸ்
20.   ரோமானிய பேரரசு கி.மு.300 - 50 - இத்தாலி
21.   சான் மரினோஸ் - கி.பி.301 - இத்தாலி. பழமையான அரசியலமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளது).
22.   உலகின் பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்படும் நாடாளுமன்றம் -ஐஸ்லாந்து - கி.பி 930.
23.   மன்னராட்சியின் கிழ் சுயாட்சி - மனிதத்தீவு - கி.பி - 927.
24.   1215 - எழுதப்பட்ட மகாசானம் (மாக்னா கார்டா) - இங்கிலாந்து.
25.   மிக பழமையான மக்களாட்சிகளில் ஒன்று - அமெரிக்க ஐக்கிய நாடுகள்  - 1789.


8th குடிமக்களும் குடியுரிமையும்
8th குடிமக்களும் குடியுரிமையும்

1.    குடிமகன் (Citizen) என்ற சொல் சிவிஸ் என்னும் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது – இலத்தீன்.
2.    இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1955.
3.    இந்தியா மக்களுக்கு வழங்குகிற குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை.
4.    குடியுரிமையின் வகைகள் : 2 வகை.
          1.    இயற்கை குடியுரிமை : பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை.
          2.    இயல்புக் குடியுரிமை : இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை.
5.    இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை பெறலாம் : 5.
          1.    பிறப்பால் குடியுரிமை .
          2.    வம்சாவழியாக குடியுரிமை பெறுதல்.
          3.    பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்.
          4.    இயல்பு குடியுரிமை.
          5.    பிரதேசங்கள் இணைத்ததன் மூலம் பெரும் குடியுரிமை.
6.    இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை இழத்தல் : 3.
          1.    தானாக முன்வந்து குடியுரிமையை துறத்தல்- குடியுரிமையை துறத்தல்
          2.    குடியுரிமையை முடிவுக்கு வருதல்- சட்டப்படி நடைபெறுதல்
          3.    குடியுரிமை மறுத்தல்- கட்டாயமாக முடிவுக்கு வருதல்
7.    இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் -7 ஆண்டுகள்.
8.    இயல்பு குடியுரிமை :
          1.    விண்ணப்பிப்பது மூலம் குடியுரிமை பெறலாம்.
          2.    வெளிநாட்டு குடியுரிமையை துறக்கும் பட்சத்தில் பெறலாம்.
9.    1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவரின் தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் பெறும் குடியுரிமை - வம்சாவழி குடியுரிமை.
10.   பிறப்பால் பெரும் குடியுரிமை :
          1.    1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த பெற்றோரின் மகன் .
          2.    1987ஜூலை 1 மற்றும் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
          3.    2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள்.
11.   சிவிஸ் என்பதன் பொருள்- குடியிருப்பாளர்.
12.   1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் பெரும் குடியுரிமை - வம்சாவளிக் குடியுரிமை.
13.   2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.
14.   பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்தியா குடியுரிமையை வழங்கியஆண்டு-1962.
15.   அரசியலமைப்புச் சட்டத்தின் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடப்படும் பகுதி , பிரிவுகள் – பகுதி II,  பிரிவு 5 -11.
16.   பூர்வீகம், பிறப்பு , இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை- குடியுரிமை.
17.   இரட்டைக் குடியுரிமை உள்ள நாடுகள்- அமெரிக்கா & சுவிட்சர்லாந்து.
18.   ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவனுக்கு வழங்கப்படுவது- குடியுரிமை.
19.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் - பிரவாசி பாரதிய தினம் - ஜனவரி 9.
20.   காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த தினம் - ஜனவரி 9.
21.   PIO முறை 0CI - ல் இணைக்கப்பட்ட ஆண்டு - 2015 ஜனவரி 9
22.   இந்திய கடவுச்சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் – NRI - NON RESIDENT INDIAN.
23.   இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் இந்திய பூர்வீக குடிகள் ஆவார் – PIO - PERSON ON INDIAN ORIGIN.
24.   வெளிநாட்டு குடிமக்கள் காலவரையின்றி இந்தியாவில் வசித்தல் மூலம் பெரும் குடியுரிமை – OCI- OVERSEAS CITIZEN OF INDIAN CARD.
25.   ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களின் வகைகள் என்ன - அந்நியர் , குடியேறியவர்.
26.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது - 2 ஆண்டுகள்.
27.   இந்தியாவின் முதல் குடிமகன் - குடியரசுத் தலைவர்.
28.   அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இரட்டை குடியுரிமை வழங்குகிறது.
29.   இந்தியா - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
30.   குடியுரிமையை உரிமையை - மாற்ற முடியும். நாட்டு உரிமையை - மாற்ற இயலாது.


9th அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
9th அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

1.    பல்வேறு வகையான அரசாங்கங்கள்:
          1.    உயர் குடியாட்சி
          2.    முடியாட்சி
          3.    தனிநபர் ஆட்சி
          4.    சிறு குழு ஆட்சி
          5.    மதகுருமார்கள் ஆட்சி
          6.    மக்களாட்சி
          7.    குடியரசு
2.    ஆட்சி அதிகாரத்தில் அதிகாரம், சிறு, சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் காணப்படுவது - உயர்குடி ஆட்சி.
3.    உயர்குடி ஆட்சி நாடுகள் எ. கா- இங்கிலாந்து, ஸ்பெயின்.
4.    ஒரு நபர், வழக்கமாக அரசரால் அமைக்கப்படும் அரசாங்கம்  - முடியாட்சி.
5.    முடியாட்சி நாடுகள் எ. கா- பூட்டான், ஓமன், கத்தார்.
6.    முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் - தனிநபர் ஆட்சி.
7.    தனிநபர் ஆட்சி எ. கா- வடகொரியா, சவுதி அரேபியா.
8.    மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டை (அ) அமைப்பை கட்டுப்படுத்துவது - சிறு குழு ஆட்சி.
9.    சிறு குழு ஆட்சி எ. கா - முன்னாள் சோவியத் யூனியன், சீனா வெனிசூலா, வடகொரியா.
10.   மதகுருமார்கள் தம்மை கடவுளாக (அ) கடவுளின் பெயரால் மத குருமார்களால் அமைக்கப்படும் அரசாங்கம் - மதகுருமார்கள் ஆட்சி.
11.   மத குருமார்களின் ஆட்சி எ. கா- வாட்டிகன்.
12.   ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட ஒரு தனி நபரோ (அ) குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம் – மக்களாட்சி.
13.   மக்களாட்சி நாடுகள் எ. கா-இந்தியா,அமெரிக்கா ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்.
14.   மக்களிடம் (அ) அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இடம் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறை-குடியரசு.
15.   குடியரசு நாடுகள் எ. கா - இந்தியா, ஆஸ்திரேலியா.
16.   பொ.ஆ.மு 500 ம் ஆண்டு எந்த நாட்டில் முதன் முதலில் குடியரசு என்னும் சொல் வடிவமைக்கப்பட்டது- ரோம்.
17.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் அமைப்பு – மக்களாட்சி.
18.   குடியரசு என்னும் சொல் Res publica எந்த மொழி சொல் – லத்தின்.
19.   Res publica என்பதன் பொருள் - பொது விவகாரம்.
20.   இந்திய அரசியலமைப்பு  ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 1949 நவம்பர் 26.
21.   இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - 1950 ஜனவரி 26.
22.   மக்களாட்சி DEMOS, CRATIA இரு சொற்கள் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது- கிரேக்கம்.
23.   ஒரு உண்மையான மக்களாட்சி 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது.இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் செயல்படுவதாகவும் எனக் கூறியவர்- மகாத்மா காந்தி.
24.   மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர்- ஆபிரகாம் லிங்கன்.
25.   ஆபிரகாம் லிங்கன் எந்த நாட்டின்  ஜனாதிபதியாக இருந்தார்- அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
26.   உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராம குழுக்கள் பண்டைய காலத்தில் இருந்தது என்னும் செய்தியை கூறும் நூல் - அர்த்தசாஸ்திரம்.
27.   அர்த்தசாஸ்திரம் நூல் ஆசிரியர் – சாணக்கியர்.
28.   தமிழகத்தில் யாருடைய ஆட்சிக் காலத்தில் குடவோலை முறை இருந்தது- பிற்கால சோழர்கள்.
29.   நாடாளுமன்ற அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகள் - இந்தியா, இங்கிலாந்து.
30.   அதிபர் அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகள் - அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ரஷ்யா, இலங்கை.
31.   மக்களாட்சியின் வகைகள்-2.
          1.    நேரடி மக்களாட்சி.
          2.    மறைமுக மக்களாட்சி -  பிரதிநிதித்துவ மக்களாட்சி.
32.   நேரடி மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகள் - பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து.
33.   மறைமுக மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகள் - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து.
34.   1912-1913 புது தில்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடத்தை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்கள்- எட்வின் லுட்டியன்ஸ் , ஹெர்பர்ட் பேக்கர்.
35.   நாடாளுமன்றக் கட்டிடத்தை 1921ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1927ம் ஆண்டு முடித்தனர்.
36.   மக்களவை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பிரதமர் அமைச்சரை நியமிப்பவர்- குடியரசுத் தலைவர்.
37.   நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்  எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - 5.
38.   மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2. (ஆங்கிலோ-இந்தியர்கள்)
39.   மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை- 12. (கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை, விளையாட்டு).
40.   இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21- வரை.
41.   முதல் மக்களவை பொதுத் தேர்தலில் 489 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது- 364 இடங்கள்.
42.   சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு.
43.   பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1920.
44.   இந்திய மக்களாட்சி எதிர்கொள்ளும்  முக்கிய சவால்கள்:
          1.    கல்வியறிவின்மை
          2.    வறுமை
          3.    பாலினப் பாகுபாடு
          4.    பிராந்தியவாதம்
          5.    சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
          6.    ஊழல்
          7.    அரசியல் குற்றமயமாதல்
          8.    அரசியல் வன்முறை
45.   ஒரு சமூகத்தை நிர்வகிக்கும் அமைப்பு- அரசாங்கம்.
46.   ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை – முடியாட்சி.
47.   ஏதன்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒருசில நகர அரசுகளில், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது – 2500.
48.   இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்த காலம்-வேதகாலம்.
49.   இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கிய கொள்கைகள்:
          1.    இறையாண்மை
          2.    சமதர்மம்
          3.    மதச்சார்பின்மை
          4.    மக்களாட்சி
          5.    குடியரசு
50.   நாடாளுமன்றம் எத்தனை அவைகளை கொண்டது: 2.
          1.    மக்களவை /கீழவை / லோக்சபா.
          2.    மாநிலங்களவை / மேலவை / ராஜ்யசபா.
51.   இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்துவது - இந்திய தேர்தல் ஆணையம்.
52.   அன்னிய அதிகாரத்தின் கட்டுப்பாடோ இடையூறோ இல்லாதிருப்பது – இறையாண்மை.
53.   குடவோலை முறையை பின்பற்றியவர்கள் – சோழர்கள்.
54.   பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி - பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்.
55.   மக்களாட்சி தோன்றிய நாடு – ஏதேன்ஸ்.
56.    “டெமோகிரஸி” என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது- கிரேக்கம்.
57.   மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் – மக்கள்.
58.   உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு- இந்தியா.
59.   வாக்குரிமையின் பொருள் - வாக்களிக்கும் உரிமை.
60.   அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது - அரசியல் சமத்துவம்.
61.   இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்  பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு- 1951-1952.
62.   இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1949 நவம்பர் - 26.
63.   நேரடி மக்களாட்சிக்கு ஒரு எ.கா – சுவிட்சர்லாந்து.
64.   இந்தியா மறைமுக மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
65.   பொருத்துக:
          1.    தனிநபராட்சி - வடகொரியா
          2.    வாக்குரிமை - 18
          3.    சாணக்கியர் - அர்த்தசாஸ்திரம்
          4.    மதகுருமார்கள் ஆட்சி- வாடிகன்


10th இந்திய அரசியலமைப்பு
10th இந்திய அரசியலமைப்பு

1.    அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA).
2.    அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1946.
3.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு-1946டிசம்பர் 9.
4.    அரசியலமைப்பை நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1949 நவம்பர் 26.
5.    அரசியலமைப்பு நடைமுறை வந்த ஆண்டு - 1950-ஜனவரி – 26.
6.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவர்-சச்சிதானந்த சின்கா.
7.    அரசியலமைப்பு நிர்ணய சபையின்  தலைவர்-ராஜேந்திர பிரசாத்.
8.    துணை தலைவர்கள் - H.C. முகர்ஜி, V.T கிருஷ்ணமாச்சாரி.
9.    அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்த உறுப்பினர்கள்- 389.
          1.    மாகாண பிரதிநிதிகள்-292.
          2.    சுதேசி அரசுகளின் நியமன உறுப்பினர்கள்-93.
          3.    மாகாண முதன்மை ஆணையர் – 3.
          4.    பலுசிஸ்தான் -1.
10.   அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டம் 11 -அமர்வுகளாக 166 -நாட்கள் நடைபெற்றது,  முன்வைக்கப்பட்டன திருத்தங்கள் -2473.
11.   அரசியலமைப்பு சட்ட வரைவு குழு தலைவர் - B. R அம்பேத்கர்.
12.   இந்திய அரசியலமைப்பின் தந்தை - Dr. B. R. அம்பேத்கர்.
13.   இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இருந்த பகுதிகள், சரத்துகள், அட்டவணைகள் - 22 பகுதி, 395 சரத்து, 8 அட்டவணைகள்.
14.   தற்போது - 25 பகுதி,  448 சரத்து, 12 அட்டவணைகள்.
15.   இந்திய அரசியலமைப்பு சட்டம் யாரால் இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதப்பட்டது -பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா.
16.   இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:
          1.    எழுதப்பட்ட நீளமான அரசியலைமைப்பு.
          2.    பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டது.
          3.    நெகிழும் தன்மை மற்றும் நெகிழா தன்மை.
          4.    கூட்டாட்சி முறை, நாடாளுமன்ற முறை.
          5.    சுதந்திரமான நிதித்துறை.
          6.    ஒற்றைக் குடியுரிமை.
          7.    இந்திய சமய சார்பற்ற நாடு.
17.   முகவுரை Preamble என்ற சொல்-  அரசியலமைப்பு அறிமுகம் (அ) முன்னுரை.
18.   அரசியலமைப்பின் திறவுகோல்  -முகவுரை.
19.   நேருவின் குறிக்கோள் தீர்மானம் நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1947 ஜனவரி -2.
20.   முகவுரை   திருத்தப்பட்ட ஆண்டு - 1976-42 ஆவது சட்ட திருத்தம் - ஒரு முறை
21.   1789 -ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
22.   1976 - 42 ஆவது திருத்தம், மூலம் சேர்க்கபட்ட  மூன்று சொற்கள்- சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு.
23.   சிட்டிசன் (Citizen) என்ற செல் சிவிஸ் ( Civis) என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் இதன் பொருள் - நகர அரசில் வசிப்பவர்.
24.   குடியுரிமை - பகுதி II - சரத்து 5- 11.
25.   குடியுரிமை சட்டம் - 1955  .
26.   குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 8.
27.   முதலில் வழங்கிய குடியுரிமை சட்டம்  - காமன்வெல்த் குடியுரிமை.
28.   காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 2003.
29.   இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும்  - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
30.   குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1955.
          1.    குடியுரிமை பெறுதல் - 5 வழி.
          2.    குடியுரிமை இழத்தல் - 3 வழி.
31.   குடியுரிமை பெறுதல் : 5 வழி.
          1.    பிறப்பு.
          2.    வம்சாவளி .
          3.    பதிவு செய்தல்.
          4.    இயல்புரிமை.
          5.    பிரதேச இணைப்பு
32.   குடியுரிமை இழத்தல் : 3 வழி.
          1.    துறத்தல்.
          2.    முடிவுரை செய்தல்.
          3.    இழத்தல்.
33.   அடிப்படை உரிமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் USA.
34.   அடிப்படைக் கடமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது-முன்னாள் சோவியத் யூனியன் USSR .
35.   அடிப்படை உரிமை- பகுதி - III - சரத்து -12-35.
36.   முதலில் எத்தனை அடிப்படை உரிமை இருந்தது – 7.
37.   தற்போது உள்ள அடிப்படை உரிமை- 6.
38.   இந்தியாவின் " மகாசாசனம்" என அழைக்கப்படும் பகுதி - பகுதி- III அடிப்படை உரிமைகள்.
39.   இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான்  எந்த ஆண்டு வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே மகா சாசனம் எனப்படுகிறது -1215.
40.   எந்த ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி எந்த அடிப்படை உரிமையில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது -1978- 44 வது திருத்தம். சரத்து –31.
41.   சொத்துரிமை தற்போது - பகுதி – XII - சரத்து - 300 A.
42.   நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை - நீதிப்பேராணை.
43.   ஆட்கொணர் நீதிப்பேராணை -சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்வதில் இருந்து இது பாதுகாக்கிறது
44.   கட்டளையுறுத்தும் நீதிப் போராணை - மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியும்
45.   தடை உறுத்தும் நீதிப் பேராணை -ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்டை எல்லை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது.
46.   ஆவணக் கேட்போர் நீதிப்பேராணை – உயர்நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணையாகும்
47.   தகுதி முறை விணவும் நீதிபேராணை - சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடை செய்கிறது.
48.   352- அவசர நிலையின் போது எந்த உரிமை தாமாகவே நிறுத்தப்படும்- சரத்து 19.
49.   352-அவசர நிலையின் போது தடை செய்ய முடியாதது - சரத்து 20, சரத்து 21.
50.   அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது-அயர்லாந்து.
51.   அரசு நெறிமுறைக் கோட்பாடு- பகுதி IV , சரத்து 36 – 51.
          1.    மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
          2.    சமதர்ம, காந்திய, தாராள - அறிவுச் சார்ந்தவை.
          3.    நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.
          4.    நாட்டின் நிர்வாகத்திற்கு அவசியமானது.
          5.    ஓர் அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
          6.    சமுதாய நலன் தருவதே இதன் நோக்கம்.
52.   இந்திய அரசியல் அமைப்பின்" புதுமையான சிறப்பம்சம்" எனஅரசு நெறிமுறைக் கோட்பாடுகளை  குறிப்பிட்டவர் - B.R அம்பேத்கர்.
53.   அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை- சரத்து -32.
54.   அலுவலக மொழி  -பகுதி XVII - சரத்து 343 – 351.
55.   மத்திய மாநில நிர்வாக உறவுகள் - பகுதி XII - சரத்து 268 - 293.
56.   அவசர கால நெருக்கடி நிலை – XVIII - சரத்து - 352,  356, 360.
57.   சிறிய அரசியலமைப்பு  என அழைக்கப்படும் சட்ட திருத்தம் - 1976 - 42 ஆவது சட்ட திருத்தம்.
58.   சொத்துரிமை நீக்கம் - 1978 - 44 ஆவது சட்ட திருத்தம்.
59.   மத்திய மாநில உறவுகள் பற்றிய ஆராய அமைக்கப்பட்ட குழு -1983 -சர்க்காரியா குழு.
60.   இந்திய அரசியலமைப்பில் தொடங்கபட்டபோது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன -7. தற்போது - 6- சொத்துரிமை நீக்கம்.
61.   அடிப்படை கடமைகள் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி-சர்தார் ஸ்வரன் சிங் குழு.
62.   மத்திய - மாநில உறவுகள் பற்றிய  அட்டவணை- 7.
          1.    மத்திய பட்டியல்     -       97    -       100.
          2.    மாநிலப் பட்டியல்   -      66    -         61.
          3.    பொதுப்பட்டியல்     -      47    -         52.
63.   முதலாவது மொழி குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1955.
64.   மொழி குழு அறிக்கை தாக்கல் – 1956.
65.   அலுவலக மொழி சட்டம் – 1963.
66.   அலுவலக மொழி சட்டம் திருத்தம் – 1967.ஆங்கில மொழி காலவரையின்றி தொடரலாம்.
67.   8 வது அட்டவணை - 14 மொழி தொடக்கத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டது - தற்போது - 22.
68.   தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஆண்டுகள்-1962, 1971, 1975.
69.   அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி மற்றும் சரத்து – பகுதி - XX - சரத்து-368.
70.   அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் வழிமுறைகள்:
          1.    நாடாளுமன்றத்தின் அவைக்கு வந்து வாக்களித்தவர்களில் 3 ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.
          2.    நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரமுடியும்.
71.   அரசியலமைப்பின் 368-வது சட்டப்பிரிவு எத்தனை வகைகளில் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழி செய்கிறது- 3.
          1.    நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
          2.    நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
          3.    நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் திருத்தப்படுதல்.
72.   தீண்டாமை பற்றி குறிப்பிடும் சரத்து-சரத்து 17.
73.   பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு  -சரத்து 16.
74.   ராணுவம் மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல் - சரத்து 18.
75.   மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட – 5 -துறைகள் .
          1.    கல்வி .
          2.    காடுகள்.
          3.    எடைகள் மற்றும் அளவைகள்.
          4.    பறவைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு.
          5.    உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற அமைப்புகளை தவிர பிற நீதிமன்றங்களில் நீதி நிர்வாகம்.
76.   சர்க்காரியா குழு  பரிந்துரை செய்த - 247  எத்தனை மத்திய அரசு செயல்படுத்தியது -180.
77.   முதல் அவசரநிலை எந்த ஆண்டு எந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது -1951, பஞ்சாப்.
78.   அரசியலமைப்பின் 44 வது சட்ட திருத்தம் – சிறிய அரசியலமைப்பு.
79.   அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி மற்றும் சரத்து - பகுதி XX சரத்து-368.
80.   அலுவலக மொழி- பகுதி XVII - 343 - 351.
81.   நிதி உறவுகள்-பகுதி XII சரத்து - 268 – 293
82.   அடிப்படை கடமைகள் - பகுதி IVA - 51A.
83.   Dr.P.Vராஜமன்னார் குழு -1969 மத்திய மாநில உறவுகள்.
84.   சர்க்காரியா குழு – 1983 மத்திய மாநில உறவுகள்.
85.   M. M. பூஞ்சி – 2007. அரசின்பல்வேறுநிலைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள்.
86.   M. N - வெங்கடாசலய்யா குழு -2000. அரசியல் அமைப்பு செயல்பாடு .
87.   சர்தார் ஸ்வரன் சிங் குழு - 1976 அடிப்படை கடமைகள்.
88.   நிதிக்குழு-சரத்து – 280.
89.   செம்மொழிகள்-6.
          1.    தமிழ்- 2004
          2.    சமஸ்கிருதம்- 2005
          3.    தெலுங்கு-2008
          4.    கன்னடம் - 2008
          5.    மலையாளம் - 2013
          6.    ஒடியா-2014.
90.   அடிப்படைக் கடமைகளை:
          1.    ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு அதன் கொள்கைகள், நிறுவனங்கள் தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்.
          2.    சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.
          3.    இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை , ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப்பாதுகாத்தல்.
          4.    தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்.
          5.    சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.
          6.    நமது உயர்ந்த பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.
          7.    காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் ,உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.
          8.    அறிவியல் கோட்பாடு மனிதநேயம் ஆராய்ச்சி மனப்பான்மை ,சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.
          9.    வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.
         10.   தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.
         11.   6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல்.


12th இந்திய அரசியலமைப்பு
12th இந்திய அரசமைப்பு

1.    மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது -1968.
2.    இந்திய அரசியல் அமைப்பின் முதன்மை வரைவாளர் டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் எந்த சரத்தை எழுத மறுத்தார் - 370 . (எழுதியவர் - கோபால சுவாமி)
3.    அரசமைப்பு உறுப்பு  எதன் கீழ் ஆங்கிலோ - இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் - 333.
4.    மாநிலங்களவை முதல் கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு - 1952 மே 13.
5.    பிரிட்டன் நாட்டில் இருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு-
          1.    நாடாளுமன்ற அரசு.
          2.    ஒற்றைக் குடியுரிமை.
          3.    சட்டத்தின் ஆட்சி.
6.    26.11.1949 அன்று  எத்தனை உறுப்பினர்கள் அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர் - 284.
7.    மதசார்பு அரசுக்கு எடுத்துக்காட்டு - பாகிஸ்தான், வாடிகன் நகரம்.
8.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் -1946 டிசம்பர் 9.
9.    அரசியலமைப்பு நிர்ணய சபையின் கடைசி கூட்டம் -1950 ஜனவரி 24.
10.   இந்திய அரசியலமைப்பில் சமதர்மம் என்ற சொல் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது - 42 வது திருத்தம் 1976.
11.   தென்னாப்பிரிக்காவில்' இருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு :
          1.    அரசியலமைப்பு சட்டத்திருத்தம்.
          2.    மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு .
12.   1955 குடியுரிமைச் சட்டம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 2015 பிப்ரவரி 27.
13.   மக்களவை :
          1.    மொத்த உறுப்பினர்கள் – 545.
          2.    மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் – 543.
          3.    குடியரசுத்தலைவர் இரண்டு ஆங்கிலோ – இந்தியன் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
          4.    மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
          5.    மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்.
14.   தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்துதல்-2014 ஆகஸ்ட் 1.
15.   பொதுக்கணக்கு குழு தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்- மக்களவைத் தலைவர்.
16.   தமிழ்நாடு:
          1.    மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள்- 234.
          2.    பொது தொகுதி உறுப்பினர்கள்- 189.
          3.    தனி தொகுதி உறுப்பினர்கள்- 45.
          4.    முதல் சட்டமன்றம் அமைக்கப்பட்டது -  03 - 05 - 1952.
          5.    15 வது சட்டமன்றம் அமைக்கப்பட்டது -21 - 05- 2016.
17.   மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவை கொண்டு வந்தவர்: திருச்சி சிவா.
          1.    2014 -தனிநபர் சட்ட முன்வரைவு.
          2.    2015 ஏப்ரல் 24 - மேலவை.
          3.    2016 பிப்ரவரி 26 - மக்களவை .
          4.    45 ஆண்டுகளுக்கு பிறகு மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு.
18.   மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் எத்தனை நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்- 76 .(20.07.1956 - 10.10.1956 ).
19.   வரதட்சனை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு -1961 மே -9.
20.   முகப்புரையில் அமைந்துள்ள சொற்களை வரிசை:
          1.    இறையாண்மை.
          2.    சமதர்ம.
          3.    மதச்சார்பின்மை.
          4.    மக்களாட்சி.
          5.    குடியரசு.
21.   பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு -103 வது அரசமைப்பு திருத்த சட்டம்.
22.   1976, 42 வது சட்ட திருத்தம் யாருடைய ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது -இந்திரா காந்தி.
23.   அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கஹாவை தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக் கொண்டவர் - ஜே. பி. கிருபளானி.
24.   கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை  என்று கூறியவர் - அம்பேத்கர்.
25.   கிராம பஞ்சாயத்து அமைப்பு பற்றி குறிப்பிடும் சரத்து- சரத்து 40. (பகுதி V. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் எனும் பிரிவில் உள்ளது).
26.   மாநிலங்களவைக்கு மேலவை  என்ற பெயர் எப்போது மாநிலங்களவை தலைவரால் அறிவிக்கப்பட்டது -1954 ஆகஸ்ட் 23.
27.   அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது- அயர்லாந்து. (பகுதி IV, சரத்து 36 - 51)
28.   நெருக்கடிநிலை காலங்களில் எந்த அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது -  சரத்து 20, 21.
29.   முதல் 14 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்கும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 86 வது திருத்தம் , 2002.
30.   இந்திய அரசியலமைப்பு அதிக இறுக்கமான தன்மையும் கொண்டதுமில்லை; அதிக நெகிழ்வு தன்மை கொண்டதுமில்லை.
31.   பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசியல் நிர்ணய சபை ஆகஸ்ட் 14, 1947 அன்று மீண்டும் கூடியது.
32.   நிர்ணய சபைக்கு மக்கள் தொகைக்கு ஏற்றபடி 10 லட்சத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
33.   டிசம்பர் 9, 1946 முதல் ஜனவரி 24 , 1950 வரை அரசியல் நிர்ணய சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு எத்தனை தொகுதிகளை கொண்டது-12.
34.   இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - லிருந்து எடுக்கப்பட்டவை ---
          1.    கூட்டாட்சி விதிகள்.
          2.    ஆளுநர் பதவி.
          3.    நீதித்துறை.
          4.    பொதுத் தேர்வாணையங்கள்.
          5.    நெருக்கடிக்கால விதிகள்.
          6.    நிர்வாக விவரங்கள்
35.   மத்திய அரசின் நிர்வாக தலைவர் - குடியரசு தலைவர்.
36.   மத்திய அரசின் உண்மையான தலைவர் - பிரதமர்.
37.   இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் -அடிப்படை உரிமைகள்.
38.   சிறார் இலவச கட்டாய கல்வி செட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 2009.
39.   அரசு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளது- பகுதி -IV.
40.   பகுதி IV A , சரத்து 51 A எந்த சட்ட திருத்தத்தின் அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது - 42 வது திருத்தம் 1976.
41.   உச்சநீதிமன்ற உத்தரவையே அல்லது தீர்ப்பையே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் பெற்றது உச்சநீதிமன்றம்.
42.   சொத்துரிமை எந்த சட்ட திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு 300A வில் சாதாரண சட்டமாக தற்போது உள்ளது - 44 வது திருத்தம் 1978 . (சரத்து 31 A)
43.   இந்திய அரசியலமைப்பின் பாகம் IV ன் கீழ் முதுமை, வேலையின்மை நோய்வாய்ப்படுதல், உடல் வலிமை கொண்டோர் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்கள், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கல் பகிர்வில் உள்ள பாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன .
44.   கிராம சுயராஜ்யம்  என்ற கருத்துடன் தொடர்புடையவர் - மகாத்மா காந்தி.
45.   மாநிலங்களவை : மொத்த உறுப்பினர்கள் -250.
46.   மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்- 238.
47.   குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யும் உறுப்பினர்கள்- 12.
48.   மாநிலங்களவை ஒரு - நிரந்தரமான அமைப்பு, கலைக்க முடியாது.
49.   மாநிலங்களவை பதவிக்காலம்  - 6 ஆண்டுகள்.
50.   1/3 பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்.
51.   மாநிலங்கள் குழு  அவை இந்திய அரசாங்க சட்டம் 1919ன் கீழ் உருவாக்கப்பட்டது-1921 முதல் செயல்பட்டு வருகிறது.
52.   மாநிலங்களவை கூட்டத்தொடர் : 3 முறை.
          1.    நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் - பிப்ரவரி - மே .
          2.    மழைக்கால கூட்டத்தொடர்- ஜூன் - ஆகஸ்ட் .
          3.    குளிர்கால கூட்டத்தொடர் - நவம்பர் – டிசம்பர்.
53.   இராஜாஜி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஆண்டு -1937.
54.   யாருடைய ஆட்சியில் இந்து திருமண சட்டம் திருத்தப்பட்டு சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன - சி. என். அண்ணாதுரை.
55.   அரசமைப்பில் தரப்படாத நிறுவனம் எது -திட்ட ஆணையம்.
56.   முகப்புரையில் இடம்பெறும்' நாம்' என்னும் சொல் எதைக் குறிக்கிறது - இந்திய மக்கள்.
57.   அரசியலமைப்பை இறுதிபடுத்த அரசியலமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது - 1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்றாண்டுகள்.
58.   இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை  மக்களாட்சி , குடியரசு நாடு என்று கூறும் அரசியலமைப்பின் பாகம் – முகப்புரை.
59.   பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 2002 மார்ச்.
60.   பிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட அரசிலமைப்பு :
          1.    குடியரசு.
          2.    முகப்புரையில் சுதந்திரம்.
          3.    சமத்துவம் .
          4.    சகோதரத்துவம்.
61.   அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது - ரஷ்யா / சோவியத் யூனியன்.
62.   இந்திய அரசியலமைப்பு - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
63.   அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் - பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
64.   சரத்து 343 ஒன்றிய அரசின் அலுவல் மொழி 1963 க்குப் பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் ஏன்று கூறுகிறது.
65.   இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என கூறும் சரத்து - சரத்து 1(1).
66.   திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு -1967 .(சி.என். அண்ணாதுரை)
67.   மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவு திட்டமாக மேம்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்.
68.   வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான  கர்ணம் பதவிக்கு முடிவு கட்டியவர் - எம்.ஜி.ஆர். (1977-1987)
69.   மண்டல் ஆணையம் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஆண்டு -1992 நவம்பர் .கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
70.   தமிழகத்தில், பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனங்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது -69%.
71.   எந்த ஆண்டில் முதன்முறையாக எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரே பொதுக்கணக்கு குழு தலைவராக மக்களவை தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்-1967 - 1968.
72.   1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை பொதுக்கணக்கு குழு எத்தனை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது – 1596.
73.   நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளன -(கடைசி - 1970) -14  (2014 - திருச்சி சிவா , மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள்-15.
74.   நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தனிநபர் சட்டங்கள்:
          1.    இஸ்லாமிய வகுப்புவாரி சட்ட முன்வரைவை 1952 - சையத் முச்சமத் அகமத் (21.05.1956)
          2.    இந்திய பதிவு திருத்த சட்ட முன்வரைவு 1955 - எஸ்.சி.சமந்தா (06.04.1956 ).
          3.    நாடாளுமன்ற செயல்முறைகள் சட்ட முன்வரைவு 1956 - ஃபெரோஸ் காந்தி (26.05.1956).
          4.    குற்ற செயல் முறை திருத்த சட்ட முன்வரைவு 1956 - ரகுநாத் சிங் 01.09.1956.
75.   ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இணைப்பதற்கு முன்பு மன்னராக இருந்தவர்-ராஜா ஹரிசிங்.
76.   ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு -370.
77.   ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் பதவி- சதா - ஐ – ரியாஷத்.
78.   ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற பதவிக்காலம் - 6 ஆண்டுகள்.
79.   சென்னையை தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று 1952-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் - ஸ்ரீராமலு.
80.   சங்கரலிங்கனார் :
          1.    பிறப்பு - 1895 இல் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமம்.
          2.    பெற்றோர்- கருப்பசாமி - வள்ளியம்மாள்.
          3.    1917 இல் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
          4.    ராஜாஜியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
          5.    1930 இல் காந்தியுடன் தண்டி உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு பெற்றார்.
81.   1956 ஜூலை 27 இல் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி உண்ணாவிரதம் தொடங்கியவர்-76. சங்கரலிங்கனார்.
82.   மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறையில் உறுப்பு-  சரத்து 125 இன் கீழ் எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவை தேர்வுகுழுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டுவர முடியும்
83.   மக்களவை, மாநிலங்களவை இணைந்தது இந்திய நாடாளுமன்றம் ஆகும். இரண்டில் ஒரு அவை இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது -ஜவகர்லால் நேரு.
84.   மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது - மாநிலங்களவை.
85.   நாடாளுமன்றத்தில் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம்- உறுப்பினர்களின் கேள்வி நேரம்.
86.   நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறுகிறது -3 முறை.
87.   அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை :
          1.    அடிப்படை உரிமைகள்.
          2.    நீதி சீராய்வு.
          3.    குடியரசு தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம்.
          4.    உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கும் முறை.
          5.    குடியரசுத் துணைத் தலைவர் பதவி நீக்கும் முறை.
88.   கனடா அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை :
          1.    ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி.
          2.    மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள்.
          3.    பொதுப்பட்டியல்.
          4.    மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம்.
          5.    உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு.
88.   ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை:
          1.    வணிகம்.
          2.    வர்த்தக சுதந்திரம்.
          3.    நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்