1) நம்முடைய கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது? உள்ளாட்சி அரசாங்கம். 2) ஒரு பகுதியில் இருப்பிட சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்பு வருமான சான்றிதழ்களை வழங்கும் அமைப்பு எது? உள்ளாட்சி அமைப்பு. 3) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள்: i) மாநகராட்சிகள் ii)நகராட்சிகள், iii) நகரியங்கள் iv) பேரூராட்சிகள் v) பாளைய வாரியங்கள். 4) பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டவை எது? மாநகராட்சிகள். 5) அக்டோபர் 02 யாருடைய பிறந்த தினம்? மகாத்மா காந்தி. 6) எந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படுகிறது? "ராஜீவ் ஆவாஸ் யோஜனா". 7) எந்த்த் திட்டத்தின் மூலம் குடிசைப் பகுதிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யப்படுகிறது? ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல். 8) பாளைய வாரியங்கள் ஏற்படுத்தப்படும் இடம்? இராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களில். 9) உள்ளாட்சி அரசாங்கங்கள் மூலம் விதிக்கப்படும் வரிகள்: சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி. 10) ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? மகாவீரர். 11) புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? புத்தர். 12) புத்தர் மற்றும் மகாவீர்ரின் காலத்திய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கும் நூல் எது? அர்த்தசாஸ்த்திரம். 13) மௌரியர்களின் ஆட்சி காலத்தில் நிர்வாக அலகுகளாக இருந்தவை எது? மாவட்டம், கிராமம். 14) யாருடைய காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்தது? சோழர்கள். 15) சோழர் காலத்திய உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது? உத்திரமேரூர் கல்வெட்டு. 16) உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தவை? முதலாம் பராந்தக சோழன். 17) உத்திரமேரூர் கல்வெட்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது? காஞ்சிபுரம். 18) முதலாம் ராஜராஜ சோழன் எந்த ஊரின் மகாசபைக்கு நாட்டுக்கு துரோகமிழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார் என அறியமுடிகிறது? வீர நாராயண சதுர்வேதி மங்கலம். 19) மொகலாயர்கள் காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? பர்கானாக்கள். 20) எந்தப் போருக்குப் பின் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, பங்காள நவாபிடமிருந்து நில வரி வசூல் செய்யும் உரிமையைப் பெற்றது? பிளாசிப்போர் 1757. 21) ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாவட்ட நிர்வாகமானது யாருடைய தலைமையில் இயங்கியது? மாவட்ட ஆட்சியர். 22) ஆங்கிலேயர் காலத்தில் முதன்முதலில் நிறுவப்பட்ட மாநகராட்சிகள் யாவை? சென்னை, பம்பாய், கல்கத்தா. 23) உள்ளாட்சி அமைப்புகளுக்கான தீர்மானத்தை ரிப்பன் பிரபு எப்போது முன்மொழிந்தார்? 1882. 24) மாவட்ட வாரியங்களின் பணிகள் 1909 ஆம் ஆண்டு வரை எவ்வாறு இருந்தது? காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு. 25) மத்திய அரசிற்கும், மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்குமிடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன? 1907. 26) 1936 களில் தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? 1417 உள்ளாட்சி அமைப்புகள். 27)1937 ஆம் அண்டில் தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? 6250. 28) மாவட்ட, வட்டார மற்றும் கிராம அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது எப்போது? 1923. 29) தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாக அமைப்புகளில் 1927 ஆம் ஆண்டில் நீதிக்கட்டிசியின் உறுப்பினர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்? 545 பேர். 30) "தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யத்தை" விரும்பியவர் யார்? மகாத்மா காந்தி. 31) சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான திட்ட வரைபடத்தை தயாரித்தவர் யார்? ஷர்மா நாராயணன். 32) இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது? நவம்பர் 26, 1949. 33) அரசின் வழிகாட்டு நெறிமுறை கோட்டுபாடு பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பின் பகுதி எது? பகுதி 4. 34) எந்த சட்டப்பிரிவின்படி கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்துதல் பற்றி குறிப்பிடுகிறது? சட்டப்பிரிவு 40. 35) சமூக மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? 1952. 36) இரண்டாவது ஐந்தாண்டு திட்டக்காலம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? 1956-1961. 37) பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன? 1957. 38) பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிட்டவர்கள் யாவர்? சர் சார்லஸ் மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட், எல்பின்ஸ்டோன். 39) மாவட்ட பஞ்சாயத்து நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டுமென்ற பரிந்துரையை வழங்கிய குழு எது? அசோக் மேத்தா குழு. 40) அசோக் மேத்தா குழு தனது பரிந்துரையை சமர்பித்த ஆண்டு என்ன? 1978. 41) உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த 1978 மதல் 1986 வரை ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் யாவை? சி.எச். அனுமந்த்ராவ் குழு, ஜி.வி.கே.ராவ் குழு, எல்.எம்.சிங்வி. 42) 64 மற்றும் 65 வது சட்டத்திருத்தம் யாருடைய காலத்தில் கொண்டுவரப்பட்டது? இராஜீவ் காந்தி. 43) 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1992. 44) 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன? 1993. 45) 73 வது (ம) 74 வது சட்டத்திருத்தம் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட புதிய பகுதி என்ன? பகுதி IX, பகுதி IX(A). 46) 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட புதிய விதிகள் என்ன? 243 முதல் 243 (ZG). 47) இருபது லட்சத்துக்கும் மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும மாவட்டத்தைக் கொண்ட பகுதிகளில் எவ்வகையான பஞ்சாயத்து அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென 73 வது சட்டத்திருத்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு. 48) ஒரு கிராம பஞ்சாயத்தின் எல்லையை மாற்றி அமைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? மாநில ஆளுநர். 49) 73 வது சட்டத்திருத்ததின் மூலம் அரசிலமைப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட அட்டவணை எது? அட்டவணை 11. 50) பஞ்சாயத்தின் மூன்றடுக்கு முறை பின்வருமாறு: i) கிராம அளவில் கிராம பஞ்சாயத்து, ii) மாவட்ட அளவில் மாவட்ட பஞ்சாயத்து, iii) 20 இலட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் இடைநிலைப் பஞ்சாயத்துக்கள். 51) ஒரு கிராம பஞ்சாயத்தின் வாக்காளர்களை கொண்ட அமைப்பு எது? "கிராம சபை", 52) பஞ்சாயத்து ராஜ்க்கான அடிக்கல் எப்போது நாட்டப்பட்டது? அக்டோபர் 02, 1959. 53) பஞ்சாயத்து ராஜ்க்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்? ஜவஹர்லால் நேரு. 54) பஞ்சாயத்து ராஜ்க்கான அடிக்கல் எந்த மாநிலத்தில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது? இராஜஸ்தான் (நகவூர்). 55) 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை என்ன? 2,50,000. 56) 73 வது அரசமைப்பு சட்ட திருத்த்த்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு: i) மாவட்ட பஞ்சாயத்துகள் (தேர்ந்தெடுக்கப்பட்டோர் மற்றும் நியமிக்கப்பட்டோர்), ii) ஊராட்சி ஒன்றிய குழு (தேர்ந்தெடுக்கப்பட்டோர்) iii) கிராம பஞ்சாயத்து (தேர்ந்தெடுக்கப்பட்டோர்), iv) கிராம சபை (ஒரு கிராமத்தின் அனைத்து வாக்காளர்களும், ஆலோசனை அமைப்பு). 57) பாளைய வாரியங்கள்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன? 1924. 58) 74 வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? 1993 ஜீன். 59) பஞ்சாப் நகராட்சிகள் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1911. 60) பஞ்சாப் நகராட்சிகள் மசோதா எப்போது கொண்டு வரப்பட்டது? 1998. 61) கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடக்கின்றன? 6 முறை. i) ஜனவரி 26 குடியரசு தினம், ii) மே -01 உழைப்பாளர் தினம், iii) ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், iv) ஆக்டோபர்- 02 காந்தி ஜெயந்தி, v) மார்ச் - 22 தண்ணீர் தினம், vi) நவம்பர் -01 உள்ளாட்சி நாள். 62) 74 வது சட்டத்திருத்தம் நகர உள்ளாட்சிகளுக்கு எத்தனை அடுக்கு பஞ்சாயத்து அமைப்பை பரிந்துரைத்த்து? மூன்றடுக்கு முறை. 63) 74 வது சட்டத்திருத்ததின் மூன்று அடுக்கு முறை: பேரூராட்சிள், நகராட்சிகள், மாநகராட்சிகள். 64) ஒரு பகுதி, ஊரக பகுதியிலிருந்து நகர பகுதியாக உயரக்கூடிய நிலையில் இருந்தால், அப்பகுதி? பேரூராட்சி 65) 5000 க்கு மேலும் 15000 க்கு மிகாமலும் மக்கள்தொகை இருந்தால் அப்பகுதி? பேரூராட்சி. 66) பேரூராட்சியின் உறுப்பினர்கள்? 3 க்கு குறையாமலும், 15 ஐ விட மிகாமலும் இருக்க வேண்டும். 67) ஒரு பேரூராட்சியின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள். 68) உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கீடு என்ன? மூன்றில் ஒரு பங்கு. 69) மக்கள் தொகை 15000 க்கு மேலும் மூன்று இலட்சத்திற்கு கீழும் உள்ள சிறு நகரப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுவது? நகராட்சி. 70) நகராட்சி உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? ரகசிய வாக்கெடுப்பு மூலம். 71) தேர்தல் முடிவுகள் வெளியான எத்தனை நாட்களில் துணை ஆணையரை நியமிக்கப்பட் வேண்டும்? 14 நாட்களில். 72) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு நகராட்சி அமைப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு எவ்வளவு? 30 சதவீதம். 73) நகராட்சியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள். 74) நகரசபை ஆண்டுக்கு ஒரு முறையாவது கூட வேண்டும். 75) நகர் மன்றத்தின் முதன்மை பேச்சாளர்? நகர சபை தலைவர். 76) நகர்மன்றத்தை ஆளுகின்ற அமைப்பு எது? நகர்மன்ற குழு. 77) 74 வது சட்டத்திருத்ததின் படி எந்த அட்டவணை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது? அட்டவணை 12. 78) 1992 ஆம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட திட்டக்குழுவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? ஐந்தில் நான்கு பங்கிற்கு குறையாமல். 79) இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு எது? மாநகராட்சி. 80) ஆரம்ப காலத்தில் மாநகராட்சி எங்கெங்கு அமைக்கப்பட்டது? மும்பை, சென்னை, கொல்கத்தா. 81) நிலைக்குழுவின் பணி என்ன? மாநகராட்சிக்கு துணையாக செயல்படுவது. 82) இந்தியாவில் உள்ள மாநகராட்சி அமைப்புகள் எதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது? மும்பை மாநகராட்சி. 83) மாநகராட்சி அமைப்பின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள். 84) மாநகராட்சியில் நிலைக்குழுவின் தலைவர் யார்? மேயர். 85) 74 வது சட்டத்திருத்தம், அட்டவணை 12 மூலம் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய 18 பணிகளை பட்டியலிட்டுள்ளது. 86) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் முதல் இடம் வகிக்கும் பகுதி எது? புனே. 87) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் கடைசி இடம் வகிக்கும் பகுதி எது? பெங்களூரு. 88) மாநகராட்சி ஆணையர் யார்? இந்திய ஆட்சிபணி அதிகாரி (IAS). 89) மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? மூன்று ஆண்டுகள். 90) எந்த சட்டத்திருத்ததின் மூலம் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது? 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம். 91) சுதந்திரத்திற்கு முன் தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1958. 92) தற்போது தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட பஞ்சாயத்துகள் எத்தனை? 38. 93) தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை? 388. 94) தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் எத்தனை? 12525.
|
minnal vega kanitham