சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. |
---|
1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர் கூற்றாக மாற்றுக).
விடை : ''நான் நாளை வீட்டுக்கு வருவேன்'' என்று முரளி கூறினார். 2. தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம் என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக). விடை : தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார். 3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக) விடை : காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்). 4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக). விடை : அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும். 5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக). விடை : கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின. |
சொல்லும் பொருளும் |
---|
விண் - வானம்;
ரவி - கதிரவன்; கமுகு -பாக்கு அறம் - நற்செயல்; வெகுளி- சினம்; ஞானம் - அறிவு; விரதம் – மேற்கொண்ட நன்னெறி. “ஞானம்” என்பதன் பொருள் யாது? அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு விடை: ஈ) அறிவு |
இலக்கணக் குறிப்பு |
---|
பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் - உருவகங்கள்.
பாண்டம் பாண்டமாக - அடுக்குத்தொடர் வாயிலும் சன்னலும் - எண்ணும்மை |
கலைச்சொல் அறிவோம் |
---|
எழுத்துச் சீர்திருத்தம் - (Reforming the letters)
பெரியாரால் தமிழ்மொழியில் ஏற்படுத்தப்பட்டது. எழுத்துரு - (font) அச்சில் எழுத்துக்களின் வடிவமைப்பு அளவைக் குறிப்பது. மெய்யியல் - (philosophy) வாழ்வியல் உண்மைகளைத் தத்துவ இலக்கியமாக, கருத்துகளாக கூறுவது. அசை - (syllable) சொல்லைப் பிரித்தல் (சீர் பிரித்தல்). இயைபுத்தொடை - (Rhyme) செய்யுளில் அடிதோறும் இறுதிச் சொல் அல்லது எழுத்து ஒன்றி வருவது. |
விடைக்கேற்ற வினாவைத் தேர்க. |
---|
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது? ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது? இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது? ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது? விடை: பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது? பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக. விடை : . வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார். . வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, 'வில்லிபாரதம்', 'பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது. . ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது. . Pilgrims progress நூலைத் தழுவி "இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது. . The secret way - என்னும் நூலைத் தழுவி" மனோன்மணியம் " எழுதப்பட்டது. . புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது. |
minnal vega kanitham