Type Here to Get Search Results !

காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது. நேற்று வருவேன் – நேற்று வந்தேன்

0
காலம்
♦ இலக்கணத்தில், காலம் என்பது ஒரு செயல் எப்போது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும்
♦ தமிழ் இலக்கணத்தில் காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும்

இறந்தகாலம்
♦ செயல் நிகழ்ந்து முடிந்ததைக் குறிப்பது இறந்தகாலம்.
♦ இறந்தகாலத்தை கடந்த காலம், சென்றகாலம் என்றும் அழைப்பர்
♦ செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும்.
♦ (எ.கா) உண்டான். இது, உண்ணுதலாகிய செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிக்கின்றது.
♦ சில எடுத்துக்காட்டுகள்:
i) உண்டான், வாழ்ந்தார், அழைத்தார், தூங்கினார், வாங்கினாள், குடித்தாள், புலம்பினார், துலக்கினாள், துவட்டினான், துவைத்தார்
ii) அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்
iii) நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

நிகழ்காலம்
♦ தற்போது நடந்து கொண்டிருக்கும் செயல்களை குறிப்பது நிகழ்காலம்
♦ செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை நிகழ்காலம் ஆகும்
♦ (எ.கா.) உண்கின்றான். இது, உண்ணுதல் தொழில், தொடங்கப் பெற்று, முற்றுப்பெறாமல் நிகழ்ந்து கொண்டுள்ளது
♦ சில எடுத்துக்காட்டுகள்:
i) ஓடுகின்றாள், நடக்கின்றான், ஆடுகின்றாள், படிக்கின்றான்
ii) மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன

எதிர்காலம்
♦ இலக்கணத்தில், எதிர்காலம் என்பது தற்போது வரை நடைபெறாத, ஆனால் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வினைச்சொல் வடிவமாகும்
♦ (எ.கா.) புகழினி நாளை கடிதம் எழுதுவாள். இதில் எழுதுவாள் என்பது இனிமேல் நடைபெறுவதைக் குறிக்கும் வினைச்சொல் வடிவமாகும்
♦ சில எடுத்துக்காட்டுகள்:
i) படிப்பாள், வருவாள், பாடுவான்
ii) கண்மணி நாளை பாடம் படிப்பாள்
iii) ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

உண்டு, இல்லை
♦ உண்டு, இல்லை என்னும் இரு சொற்களையும் நாம் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம்
♦ உண்டு, இல்லை என முடியும் சொற்களில் காலம் வெளிப்படையாக இல்லை. குறிப்பாகத்தான் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்
♦ (எ.கா.)
i) பாத்திமா தேர்வை நன்றாக எழுதவில்லை. (இறந்தகாலம்)
ii) அண்ணன் வந்ததும் உனக்குப் பரிசு உண்டு. (எதிர்காலம்)
♦ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக
1. நாளைக்கு நான் ஊருக்குப் போய் சேர்ந்தேன்.
விடை: நாளைக்கு நான் ஊருக்குப்போய்ச் சேர்வேன்.
2. நேற்று பால் பொங்குகிறது.
விடை: நேற்று பால் பொங்கியது.

காலம் (7th New Tamil Book)
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.
சான்று : பார்த்தான், ஆடினாள்.
2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.
சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள்.
3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
சான்று : காண்பான், ஆடுவாள்.
கட்டங்களை நிரப்புக.

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள்.
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

(எ.கா.) பொருத்தமான காலம் அமைத்தல்: வயலில் உழவர் கூட்டம் வெள்ளம் போல் நிறைந்திருந்தது. (05 Feb 2024)
(A) இறந்தகாலம்
(B) நிகழ்காலம்
(C) எதிர் காலம்
(D) முக்காலம்




காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது. நேற்று வருவேன் – நேற்று வந்தேன்;





Start Online Test
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong
















கருத்துரையிடுக

0 கருத்துகள்