Type Here to Get Search Results !

காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது. நேற்று வருவேன் – நேற்று வந்தேன்

0
காலம்
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.
சான்று : பார்த்தான், ஆடினாள்.
2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.
சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள்.
3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
சான்று : காண்பான், ஆடுவாள்.
கட்டங்களை நிரப்புக.

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள்.
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்