காலம் |
---|
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம் 2. நிகழ்காலம் 3. எதிர்காலம் 1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம். சான்று : பார்த்தான், ஆடினாள். 2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம். சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள். 3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம். சான்று : காண்பான், ஆடுவாள். கட்டங்களை நிரப்புக. |
பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக. |
---|
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான். 2. கண்மணி நாளை பாடம் படித்தாள். விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள். 3. மாடுகள் இப்பொழுது புல் மேயும். விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது. 4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார். விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார். 5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம். விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம். |
minnal vega kanitham