காலம் |
---|
♦ இலக்கணத்தில், காலம் என்பது ஒரு செயல் எப்போது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் இலக்கணக் கூறு ஆகும்
♦ தமிழ் இலக்கணத்தில் காலம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும் |
இறந்தகாலம் |
---|
♦ செயல் நிகழ்ந்து முடிந்ததைக் குறிப்பது இறந்தகாலம்.
♦ இறந்தகாலத்தை கடந்த காலம், சென்றகாலம் என்றும் அழைப்பர் ♦ செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிப்பது இறந்தகாலம் எனப்படும். ♦ (எ.கா) உண்டான். இது, உண்ணுதலாகிய செயல் நிகழ்ந்து முற்றுப் பெற்றதைக் குறிக்கின்றது. ♦ சில எடுத்துக்காட்டுகள்: i) உண்டான், வாழ்ந்தார், அழைத்தார், தூங்கினார், வாங்கினாள், குடித்தாள், புலம்பினார், துலக்கினாள், துவட்டினான், துவைத்தார் ii) அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான் iii) நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம். |
நிகழ்காலம் |
---|
♦ தற்போது நடந்து கொண்டிருக்கும் செயல்களை குறிப்பது நிகழ்காலம்
♦ செயல் தொடங்கி, முற்றுப் பெறாத நிலை நிகழ்காலம் ஆகும் ♦ (எ.கா.) உண்கின்றான். இது, உண்ணுதல் தொழில், தொடங்கப் பெற்று, முற்றுப்பெறாமல் நிகழ்ந்து கொண்டுள்ளது ♦ சில எடுத்துக்காட்டுகள்: i) ஓடுகின்றாள், நடக்கின்றான், ஆடுகின்றாள், படிக்கின்றான் ii) மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன |
எதிர்காலம் |
---|
♦ இலக்கணத்தில், எதிர்காலம் என்பது தற்போது வரை நடைபெறாத, ஆனால் எதிர்காலத்தில் நடக்கும்
என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வினைச்சொல் வடிவமாகும்
♦ (எ.கா.) புகழினி நாளை கடிதம் எழுதுவாள். இதில் எழுதுவாள் என்பது இனிமேல் நடைபெறுவதைக் குறிக்கும் வினைச்சொல் வடிவமாகும் ♦ சில எடுத்துக்காட்டுகள்: i) படிப்பாள், வருவாள், பாடுவான் ii) கண்மணி நாளை பாடம் படிப்பாள் iii) ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார். |
உண்டு, இல்லை |
---|
♦ உண்டு, இல்லை என்னும் இரு சொற்களையும் நாம் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம்
♦ உண்டு, இல்லை என முடியும் சொற்களில் காலம் வெளிப்படையாக இல்லை. குறிப்பாகத்தான் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும் ♦ (எ.கா.) i) பாத்திமா தேர்வை நன்றாக எழுதவில்லை. (இறந்தகாலம்) ii) அண்ணன் வந்ததும் உனக்குப் பரிசு உண்டு. (எதிர்காலம்) ♦ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக 1. நாளைக்கு நான் ஊருக்குப் போய் சேர்ந்தேன். விடை: நாளைக்கு நான் ஊருக்குப்போய்ச் சேர்வேன். 2. நேற்று பால் பொங்குகிறது. விடை: நேற்று பால் பொங்கியது. |
காலம் (7th New Tamil Book) |
---|
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம் 2. நிகழ்காலம் 3. எதிர்காலம் 1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம். சான்று : பார்த்தான், ஆடினாள். 2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம். சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள். 3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம். சான்று : காண்பான், ஆடுவாள். கட்டங்களை நிரப்புக. |
பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக. |
---|
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான். 2. கண்மணி நாளை பாடம் படித்தாள். விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள். 3. மாடுகள் இப்பொழுது புல் மேயும். விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது. 4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார். விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார். 5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம். விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம். |
(எ.கா.) பொருத்தமான காலம் அமைத்தல்: வயலில் உழவர் கூட்டம் வெள்ளம் போல் நிறைந்திருந்தது. (05 Feb 2024)
(A) இறந்தகாலம் (B) நிகழ்காலம் (C) எதிர் காலம் (D) முக்காலம் |
காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது. நேற்று வருவேன் – நேற்று வந்தேன்;
Start Online Test
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong
minnal vega kanitham