உருத்திரங் கண்ணனார் |
---|
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை*...... - கடியலூர் உருத்திரங் கண்ணனார் நூல் வெளி • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். நூல் வெளி • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
காலம் |
---|
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம் 2. நிகழ்காலம் 3. எதிர்காலம் 1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம். சான்று : பார்த்தான், ஆடினாள். 2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம். சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள். 3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம். சான்று : காண்பான், ஆடுவாள். கட்டங்களை நிரப்புக. |
பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக. |
---|
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான். 2. கண்மணி நாளை பாடம் படித்தாள். விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள். 3. மாடுகள் இப்பொழுது புல் மேயும். விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது. 4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார். விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார். 5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம். விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம். |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) ‘பெருங்கடல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல் [விடை : ஆ. பெருமை + கடல் ]
2) இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. அ) இன்றுஆகி ஆ) இன்றிஆகி இ) இன்றாகி ஈ) இன்றாஆகி [விடை : இ. இன்றாகி ]
|
கலைச்சொல் அறிவோம் |
---|
கலங்கரை விளக்கம் - Light house
பெருங்கடல் - Ocean கப்பல் தொழில் நுட்பம் - Marine technology கடல்வாழ் உயிரினம் - Marine creature நீர் மூழ்கிக் கப்பல் - Submarine துறைமுகம் - Harbour புயல் - Storm மாலுமி - Sailor நங்கூரம் - Anchor கப்பல் தளம் - Shipyard |
சொல்லும் பொருளும் |
---|
மதலை - தூண்
ஞெகிழி - தீச்சுடர் அழுவம் - கடல் வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம் சென்னி - உச்சி உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு கரையும் - அழைக்கும் உரவுநீர் அழுவம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை [விடை : இ. கடல்]
தூண் என்னும் பொருள் தரும் சொல் அ) ஞெகிழி ஆ) சென்னி இ) ஏணி ஈ) மதலை [விடை : ஈ. மதலை]
உரு - அழகு போழ - பிளக்க வங்கூழ் - காற்று நீகான் - நாவாய் ஓட்டுபவன் வங்கம் - கப்பல் எல் - பகல் கோடு உயர் - கரை உயர்ந்த மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம் இயற்கை வங்கூழ் ஆட்ட - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் -------- அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு [விடை : இ. காற்று ]
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல் [ விடை : இ. கடல் ]
பொருத்துக. வினா : 1. வங்கம் - பகல் 2. நீகான் - கப்பல் 3. எல் - கலங்கரை விளக்கம் 4. மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன் விடை : 1. வங்கம் - கப்பல் 2. நீகான் - நாவாய் ஓட்டுபவன் 3. எல் - பகல் 4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம் |
minnal vega kanitham