மொழி பெயர்க்க: |
---|
1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு 3. Thinking is great : எண்ணுவது உயர்வு 4. Walk like a bull. : ஏறு போல் நட 5. Union is strength : ஒற்றுமை வலிமையாம் 6. Practice what you have learnt : கற்றது ஒழுகு இவை அனைத்தும் “பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி” |
மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க: |
---|
எட்டாக்கனி , உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.
● எ.கா: எட்டாக்கனி : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை. ● உடும்புப்பிடி : என் தம்பிக்கு பிடிவாத குணமாத்தால் பிடித்தால் உடும்புப்பிடிதான். ● கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே. ● ஆகாயத்தாமரை : ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே. ● எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான். ● மேளதாளத்துடன் : எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம். மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. 1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர். விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர். 2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள். விடை : கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள். 3. நேற்று தென்றல் காற்று அடித்தது. விடை : நேற்று தென்றல் வீசியது 4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார். விடை : தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்) 5. அணில் பழம் சாப்பிட்டது விடை : அணில் பழம் தின்றது 6 .கொடியிலுள்ள மலரை எடுத்து வா. விடை : கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா? |
உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக. |
---|
1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர். விடை: மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர் 2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர். விடை: குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர். 3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள் விடை: பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள். 4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள். விடை: முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள். |
கலைச்சொல் அறிவோம் |
---|
குடைவரைக்கோயில் - (Cave temple)
பெரிய மலை (வரை) களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களைக் குறிப்பது கருவூலம் - (Treasury) அரசின் செல்வம் மற்றும் நிதி சார்ந்த அனைத்தும் பாதுகாக்கப்படும் இடம். மதிப்புறு முனைவர் - (Honorary Doctorate) தொழில் துறை, கலை, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றி வாழ்நாள் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பட்டம். மெல்லிசை - (melody) இனிமையான இசையை மென்மையாக வெளிப்படுத்துதல் ஆவணக் குறும்படம் - (Document short film) ஒரு சமூகப் பிரச்சனை, அதன் தீவிரம் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறைந்த நேரத்தில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் படம். புணர்ச்சி - (combination) தமிழ் இலக்கணத்தில் இடம்பெறுவது. ஒரு சொல்லைப் பிரித்து நிலைமொழியும் வருமொழியும் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணம். |
இலக்கணக் குறிப்பு |
---|
● பைங்கிளி - பண்புத்தொகை;
● பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்எண்ணும்மைகள், இன்னிளங் குருளை - பண்புத்தொகை; ● அதிர் குரல் - வினைத்தொகை; ● மன்னிய- பெயரெச்சம்; ● வெரீஇ- சொல்லிசை அளபெடை; ● கடிகமழ்உரிச்சொற்றொடர்; மலர்க்கண்ணி- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ● எருத்துக்கோடு- ஆறாம் வேற்றுமைத்தொகை; ● கரைபொரு- இரண்டாம் வேற்றுமைத் தொகை; ● மரைமுகம்- உவமைத்தொகை; ● கருமுகில் - பண்புத்தொகை; ● வருமலை- வினைத்தொகை; ● முத்துடைத்தாமம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை ● இடிகுரல் - உவமைத் தொகை ● பெருங்கடல் - பண்புத் தொகை |
சொல்லும் பொருளும்: |
---|
● மைவனம் - மலைநெல்;
● முருகியம்- குறிஞ்சிப்பறை; ● பூஞ்சினை-பூக்களை உடைய கிளை; ● சிறை- இறகு; ● சாந்தம் - சந்தனம் ● பூவை- நாகணவாய்ப் பறவை; ● பொலம்- அழகு; ● கடறு- காடு; ● முக்குழல்-கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்; ● பொலி- தானியக்குவியல்; ● உழை- ஒரு வகை மான். ● வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்; ● குருளை- குட்டி; ● இனைந்து- துன்புறுதல்; ● உயங்குதல்- வருந்துதல். ● படிக்குஉற- நிலத்தில் விழ; ● கோடு- கொம்பு; ● கல்-மலை; ● முருகு- தேன், மணம், அழகு; ● மல்லல்- வளம்; ● செறு- வயல்; ● கரிக்குருத்து - யானைத்தந்தம்; ● போர்- வைக்கோற்போர்; ● புரைதப- குற்றமின்றி. ● தும்பி- ஒருவகை வண்டு; ● துவரை-பவளம்; ● மரை- தாமரை மலர்; ● விசும்பு- வானம்; ● மதியம்-நிலவு. ● தீபம் - விளக்கு; ● சதிர் - நடனம்; ● தாமம் - மாலை தெரிந்து தெளிவோம் ● கோர்வை கோவை : கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான். |
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் |
---|
தெரிந்து தெளிவோம்
சிறுகதை - விருது மாலை சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் ● 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி ● 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன் ● 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன் ● 1996 - அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன் ● 2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி ● 2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன் ● 2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன் இதேபோல் மற்றவகை இலக்கியப் படைப்புகளுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்க. |
bbbbbbbbbbbbbbb |
---|
● மெய் + மயக்கம் = மெய்ம்ம யக்கம்
● மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம் ● செய் + நன்றி = செய்ந்நன்றி ● வேய் + குழல் = வேய்ங்குழல் ● கூர் + சிறை = கூர்ஞ்சிறை ● பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு ● புளி + கறி = புளிங்கறி ● புளி + சோறு = புளிஞ்சோறு ● மா + பழம் = மாம்பழம் ● விள + காய் = விளங்காய் ● பூ + கொடி = பூங்கொடி ● பூ + சோலை = பூஞ்சோலை ● பூ + தொட்டி = பூந்தொட்டி ● கலை + அழகு – உயிரீறு ● மண் + குடம் – மெய்யீறு ● வாழை + இலை – உயிர்முதல் ● வாழை + மரம் – மெய்ம்முதல் ● மணி (ண்+இ) + அடி = மணியடி ● பனி + காற்று = பனிக்காற்று ● ஆல் + இலை = ஆலிலை ● மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை ● வாழை + மரம் = வாழைமரம் ● செடி + கொடி = செடிகொடி ● மண் + மலை = மண்மலை ● நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு (தோன்றல்) ● கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை (தோன்றல்) ● பல் + பசை = பற்பசை (திரிதல்) ● புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்) ● மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு ● தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி ● ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம் ● பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர் ● பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம் ● சே + அடி = சே + ய் + அடி = சேயடி; ● சே + வ் + அடி = சேவடி ● தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம் ● இவனே + அவன் = இவனே +ய் + அவன் = இவனேயவன் புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக. 1. செல்வி + ஆடினாள் - அ) மெய்யீறு + மெய்ம் முதல் 2. பாலை + திணை - ஆ) மெய்யீறு + உயிர் முதல் 3. கோல் + ஆட்டம் - இ) உயீரிறு + உயிர் முதல் 4. மண் + சரிந்தது - ஈ) உயிரீறு + மெய்ம் முதல் விடை: 1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ சேர்த்து எழுதுக: அ) தமிழ் + பேசு - தமிழ் பேசு ஆ) தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு இ) கை + கள் - கைகள் 1. தொன்மை +ஆன = தொன்மையான 2. நூல் + ஆகிய = நூலாகிய 3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில் 4. சிற்பம் + கலை = சிற்பக்கலை 5. அ + கல்லில் = அக்கல்லில் 6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை 7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம் 8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை 9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள் 10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது |
minnal vega kanitham