Type Here to Get Search Results !

Day 25 New syllabus அடிப்படையில் 8th தமிழ் இயல் - 8

1
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) "நமனில்லை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) நம் + இல்லை
ஆ) நமது + இல்லை
இ) நமன் + நில்லை
ஈ) நமன் + இல்லை
[விடை : ஈ) நமன் + இல்லை]
2) நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) நம்பரங்கு
ஆ) நம்மார்க்கு
இ) நம்பர்க்கங்கு
ஈ) நம்பங்கு
[விடை : இ) நம்பர்க்கங்கு]
3) "ஆனந்தவெள்ளம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) அனந்தம் + வெள்ளம்
ஈ) ஆனந்தர் + வெள்ளம்
[விடை : இ) அனந்தம் + வெள்ளம்]
4) உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
[விடை : ஆ) உள்ளிருக்கும்]
5) "பெருஞ்செல்வம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரிய + செல்வம்
ஆ) பெருஞ் + செல்வம்
இ) பெரு + செல்வம்
ஈ) பெருமை + செல்வம்
[விடை : ஈ) பெருமை + செல்வம்]
6) "ஊராண்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஊர் + ஆண்மை
இ) ஊ+ ஆண்மை
ஆ) ஊராண் + மை
ஈ) ஊரு + ஆண்மை
[விடை : அ) ஊர் + ஆண்மை]
7) திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) திரிந்ததுஅற்று
ஆ) திரிந்தற்று
இ) திரிந்துற்று
ஈ) திரிவுற்று
[விடை : ஆ) திரிந்தற்று]

குணங்குடி மஸ்தான் சாகிபு
நூல் வெளி குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
● இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
● சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
● எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
● நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

சொல்லும் பொருளும்
● நமன் - எமன்
● சித்தம் - உள்ளம்
● நம்பர் - அடியார்
● நாணாமே - கூசாமல்
● உய்ம்மின் - ஈடேறுங்கள்
● ஈயில் - வழங்கினால்
● பகராய் - தருவாய்
● ஆனந்த வெள்ளம் - இன்பப்பெருக்கு
● பராபரம் - மேலான பொருள்
● அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு
● கான - காடு
● நகுதல் - சிரித்தல்
● நட்டல்- தவறு செய்தல்
● பிடித்தல் - திருத்துதல்
● ஆய்ந்து - ஆராய்ந்து
● கேண்மை - நட்பு
● கடை - இறுதி
● மண்புக்கு - மண்ணுக்கு
● மாய்வது - அறிவது
● களம் - பாத்திரம்

கலைச்சொல் அறிவோம்.
1. தொண்டு – Charity
2. ஞானி – Saint
3. தத்துவம் – Philosophy
4. நேர்மை – Integrity
5. பகுத்தறிவு – Rational
6. சீர்திருத்தம் – Reform

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.
(எ.கா) முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.
1. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.
விடை : மழை நன்கு பெய்ததால் எங்களால் விளையாட முடியவில்லை.
2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.
விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.
3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
4. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.
விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்கவும் அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றவும் வேண்டும்.
5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரச் கண்ணி நூலை இயற்றியுள்ளார்.
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham