இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. |
---|
(எ.கா) மாலை - மலர் மாலை, அந்திப்பொழுது.
• ஆறு – எண், நதி • அன்னம் – சோறு, பறவை • மதி - அறிவு, நிலவு • நகை - புன்னகை, அணிகலன் • மெய் - உடல், உண்மை • திங்கள் - மாதம், நிலவு • மாடு - விலங்கு, செல்வம் • தை - மாதம், தைத்தல் • பார் - உலகம், பார்த்தல் • திரை - கடல் அலை, திரைச்சீலை • படி - படித்தல், படிக்கட்டு • இசை - புகழ், சங்கீதம் • வேங்கை - மரம், விலங்கு • கிளை - மரக்கிளை, உறவு • மா - மாமரம், பெரிய • மறை - மறைத்தல், வேதம் |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) ‘வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) வனம் + இல்லை ஆ) வனப்பு + இல்லை இ) வனப்பு + யில்லை ஈ) வனப் + பில்லை [விடை : ஆ. வனப்பு + இல்லை]
2) ‘வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________ அ) வார்ப்எனில் ஆ) வார்ப்பினில் இ) வார்ப்பெனில் ஈ) வார்பு எனில் [விடை : இ. வார்ப்பெனில்]
3) ‘வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) வண் + கீரை ஆ) வண்ணம் + கீரை இ) வளம் + கீரை ஈ) வண்மை + கீரை [விடை : ஈ. வண்மை + கீரை]
4) கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) கட்டியிடித்தல் ஆ) கட்டியடித்தல் இ) கட்டி அடித்தல் ஈ) கட்டு அடித்தல் [விடை : ஆ. கட்டியடித்தல்]
5) 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------- அ) கோடு + ஓவியம் ஆ) கோட்டு + ஓவியம் இ) கோட் + டோவியம் ஈ) கோடி + ஓவியம் [விடை : ஆ. கோட்டு + ஓவியம்]
6) ‘செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) செப்பு + ஈடு ஆ) செப்பு + ஓடு இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு [விடை : இ. செப்பு + ஏடு]
7) எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – அ) எழுத்துஆணி ஆ) எழுத்தாணி இ) எழுத்துதாணி ஈ) எழுதாணி [விடை : ஆ. எழுத்தாணி]
8) ‘எழுத்தென்ப்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) எழுத்து + தென்ப ஆ) எழுத்து + என்ப இ) எழுத்து + இன்ப ஈ) எழுத் + தென்ப [விடை : ஆ. எழுத்து + என்ப]
9) 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ அ) கரைந்து + இன்னும் ஆ) கரை + துண்ணும் இ) கரைந்து + உண்ணும் ஈ) கரை + உண்ணும் [விடை : இ. கரைந்து + உண்ணும்]
10) கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________ அ) கற்றனைத்தூறும் ஆ) கற்றனைதூறும் இ) கற்றனைத்தீரும் ஈ) கற்றனைத்தோறும் [விடை : அ. கற்றனைத்தூறும்]
|
கலைச்சொல் அறிவோம் |
---|
• படைப்பாளர் - creator
• சிற்பம் - sculpture • கலைஞர் - artist • கல்வெட்டு - inscriptions • கையெழுத்துப்படி - manuscripts • அழகியல் - aesthetics • தூரிகை - brush • கருத்துப்படம் - cartoon • குகை ஓவியங்கள் - cave paintings • நவீன ஓவியம் - modern art |
சொல்லும் பொருளும் |
---|
• பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
• நெடி - நாற்றம் • மழலை - குழந்தை • வனப்பு - அழகு • பூரிப்பு - மகிழ்ச்சி • மேனி - உடல் • வண்கீரை - வளமான கீரை • முட்டப்போய் - முழுதாகச் சென்று • மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல் • பரி - குதிரை • கால் - வாய்க்கால், குதிரையின் கால் ‘ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் ‘பரி' என்பதன் பொருள் ________ அ) யானை ஆ) குதிரை இ) மான் ஈ) மாடு [விடை : ஆ. குதிரை]
|
இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக. |
---|
(எ.கா.) வீடு கட்டினான் - வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்
1. கடல் பார்த்தான் - கடல் + ஐ + பார்த்தான் = கடலைப் பார்த்தான் 2. புல் தின்றது - புல் + ஐ + தின்றது = புல்லைத் தின்றது 3. கதவு தட்டும் ஓசை - கதவு + ஐ + தட்டும் + ஓசை = கதவைத் தட்டும் ஓசை 4. பாடல் பாடினாள் - பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள் 5. அறம் கூறினார் - அறம் + ஐ + கூறினார் = அறத்தைக் கூறினார். |
minnal vega kanitham