UNIT 1: அமுதென்று பேர் [200 வினா விடை] |
---|
1. திராவிட மொழிகளில் மூத்த மொழியாய் விளங்குவது
- தமிழ் 2. தமக்குத் தோன்றிய கருத்தை பிறருக்கு உணர்த்த
மனிதர் கண்டுபிடித்த கருவி - மொழி 3. பருப்பொருளை உணர்த்த மனிதன் பயன்படுத்தியவை - மெய்பாடுகள்,சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் 4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
- 1300க்கும் மேற்பட்டது 5. இந்தியாவில் மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக
பிரிக்கப்பட்டு உள்ளன - 4 6. இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்கள்
- திராவிட மொழிகள்,இந்தோ - ஆரிய மொழிகள்,
ஆஸ்திரோ ஆசிய மொழிகள்,சீன - திபெத்திய மொழிகள் 7. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர்
- ச. அகத்தியலிங்கம் 8. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்
- குமரிலப்பட்டர் 9. தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல்
உருவானது என்று கூறியவர்- ஹீராஸ் பாதிரியார் 10. ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா
என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்- தமிழ்- தமிழா-தமிலா-மரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா 11. எந்த நூற்றாண்டு தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும்
வடமொழி தான் மூலம் எனவும் அதிலிருந்து மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள்
கருதினர்-18ம் நூற்றாண்டு 12. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று
குறிப்பிட்டவர் - வில்லியம் ஜோன்ஸ் 13. கி.பி.1816 ஆண்டில் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொண்டவர்கள்
- பாப்,ராஸ்க்,கிரிம் 14. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள்
ஒரே மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்று குறிப்பிட்டவர் - பிரான்சிஸ் எல்லிஸ் 15. தமிழ், தெலங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு
தென்னிந்திய மொழிகள் என பெயாட்டவர் - பிரான்சிஸ்
எல்லிஸ் 16. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர்
- ஹோக்கன் 17. தமிழியன் மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகள் - தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், மால்தோ ,
தோடா, கோண்டி 18. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்
- கால்டுவெல் 19. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட
ஆண்டு - 1856 20. திராவிட மொழிக்குடும்பங்களின் வகைகள் – 3 21. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை - 28 22. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எத்தனை
- 4 23. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள்- எருகலா, குறும்பா, சோழிகா 24. தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக்குடும்பத்திற்கு
உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" எனக்
கூறியவர் - கால்டுவெல் 25. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது-
தமிழ் 26. கன் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது-
குருக் 27. கொண் என்ற அடிசோல் எத்திராவிட மொழியில் இடம்பெற்றுள்ளது-
தோடா 28. மூன்று என்ற எண்ணுப்பெயர் மூணு என எம்மொழியில்
குறிப்பிடப்படுகிறது- மலையாளம் 29. மூன்று என்ற எண்ணுப்பெயர் மூரு என எம்மொழியில்
குறிப்பிடப்படுகிறது - கன்னடம் 30. மூன்று என்ற எண்ணப்பெயர் மூஜி என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது
- துளு 31. "கடுவன்" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்
- ஆண்பால் 32. "மந்தி" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்-
பெண்பால் 33. 'களிறு' என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்- ஆண்பால் 34. "பிடி" என்ற சொல் எப்பாலினைக் குறிக்கும்-
பெண்பால் 35. திராவிட மொழிகளில் எந்த மொழியில் பால் காட்டும்
விகுதிகள் இடம்பெறுவதில்லை-மலையாளம் 36. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட
நூற்றாண்டு - பொ.ஆ. 9ம் நூற்றாண்டு 37. பாரதம் என்ற இலக்கியம் தெலுங்கு மொழியில் இயற்றப்பட்ட
நூற்றாண்டு - பொ ஆ. 11 ஆம் நூற்றாண்டு 38. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட
நூற்றாண்டு- பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டு 39. கவிராஜ மார்க்கம் என்னும் இலக்கண நூல் எந்த மொழியில்
இயற்றப்பட்டது - கன்னடம் 40. பொ.ஆ.15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட "லீலா
திலகம்" என்னும் இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது - மலையாளம் 41. பொ.ஆ.15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட "ஆந்திர
பாஷா பூஷணம்" என்ற இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது - தெலுங்கு 42. "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலின் ஆசிரியர்
- மு.வரதராசனார் 43. "இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ்
இலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர்- செ.வை.சண்முகம் 44. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்று
உள்ளது - மொரிஷியஸ் , இலங்கை 45. செய்தாள் என்ற சொல்லின் வேர்ச்சொல் என்ன- செய் 46. "மரம்" என்ற தமிழ்சொல் கூர்க், மொழியில்
என்று அழைக்கப்படுகிறது - மர 47. "நீ' என்ற தமிழ்சொல்லானது "நின்"
என எம்மொழியில் கூறப்படுகிறது- கூர்க் 48. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே"
என்ற கவிதையைப் பாடியவர் - ஈரோடு தமிழன்பன் 49. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன் 50. "காலமும்'' என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
தருக - முற்றும்மை 51. "ஒரு பூவின் மலர்ச்சியும், ஒரு குழந்தையின்
புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை'' என்று கூறியவர் - ஈரோடு தமிழன்பன் 52. ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை
தந்துள்ளார் - ஹைக்கூ,சென்ரியு , லிமரைக்கூ 53. ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை
நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 2004 54. ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல்
- தமிழன்பன் கவிதை 55. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக்
கூறும் நூல் - பிங்கல நிகண்டு 56. “யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும்
காணோம்” என்று பாடியவர்- பாரதியார் 57. உலக தாய்மொழி நாள்- பிப்ரவரி 21 58. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - சிங்கப்பூர், இலங்கை 59. இலக்கணக்குறிப்பு தருக "எத்தனை எத்தனை
" - அடுக்குத்தொடர் 60. இலக்கணக்குறிப்பு தருக "ஏந்தி"- வினையெச்சம் 61. இலக்கணக்குறிப்பு தருக "விட்டு விட்டு
" - அடுக்குத்தொடர் 62. இராமசரிதம் என்ற இலக்கிய நூல் மலையாளத்தில் இயற்றப்பட்ட
நூற்றாண்டு- பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டு 63. "தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள்அமுதின்
மேலான முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள் " என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் - தமிழ்விடு தூது 64. தமிழ்விடு தூதின் ஆசிரியர் - தெரியவில்லை 65. தமிழ்விடு தூது குறிப்பிடும் மூன்றினங்கள் - துறை,தாழிசை ,விருத்தம் 66. “சிந்தாமணி " எனும் சொல் குறிப்பது- சிதறாத மணி 67. தமிழ்விடு தூது குறிப்பிடும் முக்குணங்கள் - சத்துவம்
, இராசசம் , தாமசம் 68. அமைதி, மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம் - சத்துவம் 69. சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் - தாமசம் 70. போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம் - இராசசம் 71. தமிழ்விடு தூது குறிப்பிடும் வண்ணங்கள் - ஐந்து 72. ஊனரசம் என்பதன் பொருள் - குறையுடைய சுவை 73. வனப்பு என்ற சொல்லிற்கு பொருள் - அழகு,தொன்மை, இயைபு 74. இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத்
தொடுக்கப்படும் மாலைக்கு பெயர்- கண்ணி 75. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும்
செய்யுள் வகை - கண்ணி 76. தமிழ்விடு தூது குறிப்பிடும் குணங்கள் - பத்து 77. சுவை எத்தனை வகைப்படும் - 6 78. அம்மை முதலிய அழகுகள் எத்தனை - 8 79. இலக்கணக்குறிப்பு தருக "செவிகள் உணவான'' - நான்காம் வேற்றுமைத்தொகை 80. இலக்கணக்குறிப்பு தருக "நா" - ஓரெழுத்து ஒருமொழி 81. தூது எவ்வகை இலக்கியம் - சிற்றிலக்கியம் 82. தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை - 10 83. "வாயில் இலக்கியம் " என அழைக்கப்படுவது
- தூது 84. தூது இலக்கியத்தின் வேறு பெயர் - சந்து இலக்கியம் 85. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது
- மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
மீது 86. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது - 268 87. தமிழ்விடு தூது நூலை முதல் முதலில் பதிப்பித்தவர்
– உ.வே.சா 88. தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு - 1930 89. "காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்'' என்ற பாடலை இயற்றியவர்
- சுத்தானந்த பாரதியார் 90. தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை – கலிவெண்பா 91. software என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
- மென்பொருள் 92. Browser என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
- உலவி 93. Crop என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க - செதுக்கி 94. Cursor என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
- ஏவி (அ) சுட்டி 95. Cyberspace என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
– இணையவெளி 96. சர்வர் (Server) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக்
காண்க - வையக விரிவு வலை வழங்கி 97. Folder என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
- உறை 98. Laptop என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க – மடிக்கணினி 99. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும்
திகழ்வது- கிரேக்கம் மொழி 100. நாவாய்
என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் நேவி என மாறியுள்ளது 101. எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி
இடம்பெற்று உள்ளது - கிரேக்கம் 102. பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் கிரேக்கம் மொழியிலும்ஒப்பாகக் 103. கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் - இலியாத் 104. பா என்ற சொல் இலியாத்தில் என்னவென்று குறிப்பிடப்பட்டு
உள்ளது- பாய்யியோனோ 105. பா என்ற சொல் கிரேக்கத்தில் அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது 106. வெண்பாவிற்கு உரிய ஓசை – செப்பலோசை 107. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகிறது 108. சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது
- சேப்பிக் ஸ்டேன்சா 109. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்
- துன்பம் சார்ந்த பாடல் 110. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா என அழைக்கப்படுகிறது 111. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது
- கி.மு.8ம் நூற்றாண்டு 112. தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும்
என்று கூறும் கிரேக்க நூல் - எறிதிரேசியன்
ஆப் த பெரிபுலஸ் 113. "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - க 114. "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - உ 115. "3" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - ங 116. "4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - ச 117. “5' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது
- ரு 118. "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - சு 119. "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
எது - எ 120. “8” என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது - அ 121. “9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது
- கூ 122. “10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது
- க0 123. சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லை-
எழுவாய் 124. மீனா கனகாம்பரத்தைச் சூடினான் என்ற தொடரில் செயப்படுபொருள்
எது - கனகாம்பரம் 125. தோன்றா எழுவாய்க்கு எடுத்துக்காட்டு தருக - படித்தாய் 126. பெயர் பயனிலைக்கு எடுத்துக்காட்டு தருக - சொன்னவள் கலா 127. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர் சொல்லுக்கு
அடையாக வருவதை - பெயரடை என்கிறோம். 128. பிறவினை
- தந்தை மகனை நன்றாக படிக்க வைத்தார், அவனை திருந்தச் செய்தான், பள்ளிக்குப் புத்தகங்கள்
வருவித்தார் 129. துணைவினைகள்
வி.பி போன்ற விகுதிகளைக் கொண்டு உள்ளது. 130. செயப்பாட்டு
வினைத்தொடரில் - கோவலன் கொலையுண்டான்,வீடு கட்டியாயிற்று, பணம் காணாமல் போனது 131. செயபடுபொருளை முதன்மைப்படுத்தும் வினை என்ன - செயப்பாட்டு வினை 132. எழுவாய்த் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - மன்னன் வந்தான் 133. குறிப்பு வினையெச்சத் தொடருக்கு எடுத்துக்காட்டு
தருக - நன்கு பேசினான் 134. பிறவினைத் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - அப்துல் நேற்று வரவழைத்தான் 135. எதிர்மறை வினைத்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக
- குமரன் மழையில் நனையவில்லை 136. செய்தித்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - என் அண்ணன் நாளை வருவான் 137. "அண்ணனோடு வருவான்" இது எவ்வகைத் தொடர்
எனக் காண்க - வேற்றுமைத்தொடர் 138. “நண்பா கேள்" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க
- விளித்தொடர் 139. "உண்ணச்சென்றான்" இது எவ்வகைத் தொடர்
எனக் காண்க - தெரிநிலை வினையெச்சத் தொடர் 140. “பாடும் குயில்" இது எவ்வகைத் தொடர் எனக்
காண்க - தெரிநிலை பெயரெச்சத் தொடர் 141. “இனிய காட்சி" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க
- குறிப்பு பெயரெச்சத் தொடர் 142. "பாம்பு பாம்பு" இது எவ்வகைத் தொடர் எனக்
காண்க - அடுக்குத் தொடர் 143. "அப்துல் நேற்று வந்தான்" இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க - தன்வினைத் தொடர் 144. செய்வினைத் தொடரை தேர்வு செய்க - கவிதா உரை படித்தாள் 145. “உரை கவிதாவால் படிக்கப்பட்டது'' இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க - செயப்பாட்டு வினைத்தொடர் 146. "குமரன் மழையில் நனைந்தான் " இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க-உடன்பாட்டு வினைத்தொடர் 147. " எவ்வளவு உயரமான மரம்!" இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க – உணர்ச்சித்தொடர் 148. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?" இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க - வினாத்தொடர் 149. "பூக்களைப் பறிக்காதீர்" இது எவ்வகைத்
தொடர் எனக் காண்க - கட்டளைத்தொடர் 150. “இது நாற்காலி" இது எவ்வகைத் தொடர் எனக் காண்க
- பெயர்பயனிலைத்தொடர் 151. பதம் எத்தனை வகைப்படும் - 2 152. பிரியக்கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல்
- பகுபதம் 153. பகுபதம் எத்தனை வகைப்படும் - 2 154. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்- 6 155. பகுபதத்தில் சொல்லின் முதலில் நிற்பது எது - பகுதி 156. பகாபதமாக அமைவது - பகுதி 157. சொல்லின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம்
ஆகியவற்றை காட்டுவது - விகுதி 158. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம்
காட்டுவது - இடைநிலை 159. பகுதியையும் பிறஉறுப்புகளையும் இணைப்பது - சந்தி 160. பகுதி, விகுதி, இடைநிலைகளை சார்ந்து வருவது - சாரியை 161. ஆண்பால் வினைமுற்று விகுதி - ஆன் 162. பெண்பால் வினைமுற்று விகுதி - ஆள் 163. பலர்பால் வினைமுற்று விகுதி - ஆர் 164. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி – து 165. பலவின்பால் வினைமய விகுதி - அ 166. தன்மை ஒருமை வினைமுற்று விகுதி - ஏன் 167. தன்மை பன்மை வினைமுற்று விகுதி - ஓம் 168. முன்னிலை ஒருமை வினைமுற்ய விருதி - ஆய் 169. முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி - ஈர் 170. பெயரெச்ச விகுதி – அ,உம் 171. வினையெச்ச விகுதி - உ. இ 172. வியங்கோள் வினைமுற்று விகுதி – க,இய 173. தொழிற்பெயர் விகுதி - தல், அல் 174. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு
நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து - எழுத்துப்பேறு 175. "விறகு நான் வண்டமிழோ உன்னருள் வாய்ந்த"
என்ற பாடல்வரியை பாடியவர் - வாலி 176. “அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!" என்ற
பாடல்வரியை இயற்றியவர் - தங்கப்பா 177. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற
நூலின் ஆசிரியர் - ராபர்ட் கால்டுவெல் 178. "மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்" என்ற
நூலின் ஆசிரியர் - மணவை முஸ்தபா 179. மாணவர்களுக்கான தமிழ்" என்ற நூலின் ஆசிரியர்
- சொக்கன் 180. Linguistics என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- மொழியியல் 181. Literature என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- இலக்கியம் 182. Philologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- மொழி ஆராய்ச்சியாளர் 183. Polyglot என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- பலமொழி வல்லுநர் 184. Phonologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- ஒலியியல் வல்லுநர் 185. Phonetics என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
- ஒலிப்பியல் 186. தமிழ்விடு
தூது தொடர்நிலைச் செய்யுள் என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது 187. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!" இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்- எதுகை, மோனை, இயைபு 188. அழியா வனப்பு, வழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட
சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு- ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் 189. செய்பவரை முதன்மைப் படுத்தும் வினை - செய்வினை 190.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக 1.
கண்ணு - மலையாளம், கன்னடம் 2.
கன்னு - தெலுங்கு,
குடகு 3. கெண் - பர்ஜி 4. மூடு - தெலுங்கு 191.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக தமிழ் மலையாளம் a.
ஒன்று - ஒண்ணு b.
இரண்டு
- ஈர் ரெண்டு c. நான்கு - நால், நாங்கு d. ஐந்து - அஞ்சு 192.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக. தமிழ் தெலுங்கு 1.
மரம்
- மானு 2.
ஒன்று - ஒகடி 3.
நூறு - நூரு 4. நீ - நீவு 193. திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக தமிழ் தெலுங்கு 1. இரண்டு
- ஈர்ரெண்டு 2. நான்கு - நாலுகு
3. ஐந்து - ஐது 194.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக தமிழ் துளு 1. மரம் - மர 2. ஒன்று - ஒஞ்சி 3. நூறு - நூது 4. நீ - ஈ 195.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக. தமிழ் துளு 1.
இரண்டு - ரட்டு 2.
நான்கு - நாலு 3. ஐந்து – ஐனு 196.
திராவிட மொழிகளில் உள்ள சொல் ஒற்றுமையைக் கொண்டு பொருத்துக. தமிழ் கன்னடம் 1.
ஒன்று - ஒந்து 2.
நூறு - நூரு 3.
நீ - நீன் 4.இரண்டு - எரடு 197.
இலக்கணக்குறிப்பு பொருத்துக. 1. முத்திக்கனி - உருவகம் 2. சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 3. தெள்ளமுது - பண்புத்தொகை 4. குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 198.
பொருத்துக 1.
இனம்- மூன்று 2.
வண்ணம்- நூறு, 3.
குணம்- பத்து 4. வனப்பு- எட்டு 199.
பொருத்துக 1.
உருபன் - Morpheme 2.
ஒலியன் - Phoneme 3.
ஒப்பிலக்கணம் - Comparative Grammar 4. பேரகராதி- Lexicon 200. பொருத்துக 1. இறந்தகால இடைநிலை
- த், ட், ற், ன் 2. நிகழ்கால இடைநிலை
- கிறு, கின்று, ஆநின்று 3. எதிர்கால இடைநிலை
- ப், வ்,க் 4. எதிர்மறை இடைநிலை - இல், அல், ஆ 5. பெயர் இடைநிலை - ஞ். வ், ச், த் |
9th New Tamil Unit - 1 One Liner
ஜனவரி 25, 2025
0
minnal vega kanitham