Type Here to Get Search Results !

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி || அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

0
நாலடியார் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2)
நாலடியார் - சமணமுனிவர்
நூல்குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
• இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
அறக்கருத்துகளைக் கூறுவது.
'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
• இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள்.
• இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
• சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது.
• இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள்.
• இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

நாலடியார் (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2)
நூல்வெளி
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
நாலடி நானூறு, வேளாண் வேதம் என அழைக்கப்ட்டது.
திருக்குறளை போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் பகுப்புகளை கொண்டது.
• இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதைநாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.

நான்மணிக்கடிகை (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3)
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
ஆசிரியர் குறிப்பு:
• நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார்.
விளம்பி என்பது ஊர்ப்பெயர்;
நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு :
• நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

பழமொழி நானூறு (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4)
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.
முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும்.
• இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.
நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது.
• இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
• இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது.
• இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

பழமொழி நானூறு (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 7)
நூல்வெளி
• பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
• இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
• பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
• பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இது நானூறு பாடல்களைக் கொண்டது.
• ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.

முதுமொழிக்காஞ்சி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2)
ஆசிரியர் குறிப்பு:
• பெயர்: மதுரை கூடலூர் கிழார்
• பிறந்த ஊர்: கூடலூர்
• சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.
• காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு :
• முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான
• இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
• இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
• இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன.
• ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன.
• இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
நூல் பயன்:
முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்