Type Here to Get Search Results !

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

0
மரூஉ (7th New Tamil Book)
• நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
• இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
தெரிந்து தெளிவோம்
• வாயில்-வாசல்
• இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
• வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

• எந்தை (என் தந்தை என்பதன் மரூஉ)
• போது (பொழுது என்பதன் மரூஉ)
• எம்பி (என் தம்பி என்பதன் மரூஉ)
• சோணாடு (சோழநாடு என்பதன் மரூஉ)
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (10th New Tamil Book)
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
எ.கா.
• தஞ்சாவூர் - தஞ்சை
• புதுக்கோட்டை - புதுகை
• திருச்சிராப்பள்ளி - திருச்சி
• உதகமண்டலம் - உதகை
• கோயம்புத்தூர் - கோவை
• நாகப்பட்டினம் - நாகை
• புதுச்சேரி - புதுவை
• கும்பகோணம் - குடந்தை
• திருநெல்வேலி - நெல்லை
• மன்னார்குடி - மன்னை
• மயிலாப்பூர் - மயிலை
• சைதாப்பேட்டை - சைதை

• நுந்தை (நும் தந்தை என்பதன் மரூஉ)

கருத்துரையிடுக

0 கருத்துகள்