Type Here to Get Search Results !

உ.வே.சாமிநாதர், நாலடியார், நான்மணிக்கடிகை (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1, 2, 3)

1

உ.வே.சாமிநாதர் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 1)
ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
இயற்பெயர் - வேங்கடரத்தினம்
ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
• அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
• உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம்.
இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
1942 இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.
• உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
• உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
• இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
• பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
• ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
• ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு
• உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார்.
• நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர்
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
• ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
• உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
• உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
• குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது (99)
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
1. எட்டுத்தொகை - 8
2. பத்துப்பாட்டு - 10
3. சீவகசிந்தாமணி - 1
4. சிலப்பதிகாரம் - 1
5. மணிமேகலை - 1
6. புராணங்கள் - 12
7. உலா - 9
8. கோவை - 6
9. தூது - 6
10. வெண்பா நூல்கள் - 13
11. அந்தாதி - 3
12. பரணி - 2
13. மும்மணிக்கோவை - 2
14. இரட்டைமணிமாலை - 2
15. பிற பிரபந்தங்கள் – 4

• ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்:
1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை.
2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை.
3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

நாலடியார் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2)
நாலடியார் - சமணமுனிவர்
நூல்குறிப்பு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார்.
• இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
அறக்கருத்துகளைக் கூறுவது.
'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
• இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள்.
• இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
• சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது.
• இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.
பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள்.
• இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

நான்மணிக்கடிகை (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3)
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
ஆசிரியர் குறிப்பு:
• நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார்.
விளம்பி என்பது ஊர்ப்பெயர்;
நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு :
• நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham