Type Here to Get Search Results !

7th புதிய தமிழ் இயல் 7

1

1.     மாரியொன்ற இன்றி வந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு நிஉலையுள்என்ற பாடல் வரியின் ஆசிரியர் மூன்றுரை அரையனார்

2.     பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் மூன்றுரை அரையனார்

3.     பாரியின் மகள் அங்கவைசங்கவை

4.     மூன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- கி.பி. 4

5.     மூன்றுரை அரையனார் எச்சமயத்தை சேர்ந்தவர் - சமண

6.     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி நானூறு

7.     பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது - 400

8.     ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் பழமொழி நானூறு

9.     மரம் வளர்த்தால் பெறலாம் - மாரி

10.   'நீருலையில்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நீர் + உலையில்

11.   மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- மாரியொன்று

12.   "ஓடை எல்லாம் தாண்டிப்போயி - ஏலேலங்கிடி ஏலேலோஎன்ற பாடலின் தொகுப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்

13.   கழலுதல் என்ற சொல்லின் பொருள் உதிர்தல்

14.   பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்- சும்மாடு

15.   நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல் மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வதற்கு பெயர் - போரடித்தல்

16.   நாட்டுப்புறப்பாடலின் வேறு பெயர் வாய்மொழி இலக்கியம்

17.   நாட்டுப்புறப்பாடல்களை -- என்னும் நூலாக ஜகந்நாதன் தொகுத்துள்ளார் - மலை அருவி

18.   'தேர்ந்தெடுத்துஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- தேர்ந்து + எடுத்து

19.   'ஓடை + எல்லாம்என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- ஓடையெல்லாம்

20.   பாண்டியர்களின் தலைநகரம் -மதுரை

21.   பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் – திருநெல்வேலி

22.   'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலிஎன்று கூறியவர் திருஞானசம்பந்தர்

23.   தண்பொருநைப் புனல் நாடுஎன்று கூறியவர் - சேக்கிழார்

24.   திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டுள்ளது- பொதிகை

25.   'பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடிஎன்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் இளங்கோவடிகள்

26.   இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் மலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது- குற்றால மலை

27.   வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்என்று குற்றால மலைவளத்தைக் குற்றாலக் குறவஞ்சியில் பாடியவர்திரிகூட இராசப்பக் கவிராயர்

28.   திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு – தாமிரபரணி

29.   தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர் – தண்பொருநை

30.   தாமிரபரணியின் கிளை ஆறுகள் பச்சையாறுமணிமுத்தாறு,சிற்றாறுகாரையாறு,சேர்வலாறுகடனாநதி

31.   தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் நெல்லை

32.   கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது நெல்லை

33.   தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் துறைமுகம் அமைந்திருந்தது – கொற்கை

34.   தமிழ் இலக்கியங்களில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படும் துறைமுகம் கொற்கை

35.   'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைஎன்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- நற்றிணை

36.    ‘கொற்கையில் பெருந்துறை முத்துஎன்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு

37.   எந்த நாடுகளை சேர்ந்த யவனர்கள் முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்-கிரேக்கஉரோமாபுரி

38.   பொருநை எனப்படும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானதுதாமிரபரணி

39.   நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர்-திருஞானசம்பந்தர்

40.   திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமேஎனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் திருஞானசம்பந்தர்

41.   காவற்புரைத் தெரு என்றால் சிறைச்சாலை

42.   கூலம் என்பது எதை குறிக்கும்- தானியம்

43.   கூலக்கடைத்தெரு என்பதே மருவி வழங்கப்படுகிறது- கூழைக்கடைத்தெரு

44.   அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம் அக்கசாலை

45.   பொன் நாணயங்கள் உருவாகும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலை என்னும் பெயரில் அமைந்துள்ளது

46.   தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஆதிச்சநல்லூர்

47.   தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி

48.   தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகரம் பாளையங்கோட்டை

49.   இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டவை திருநெல்வேலி, பாளையங்கோட்டை

50.   தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம் பாளையங்கோட்டை

51.   வணிகம் நடைபெறும் பகுதியை வழங்குதல் பண்டைய மரபு - பேட்டை

52.   பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள் வரவேற்ற இடம் பாண்டியபுரம்

53.   பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர்

54.   நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித்தோன்றல் வீரராகவர்

55.   வீரராகவரின் துணைவியார் பெயர் மீனாட்சி அம்மையார்

56.   பொதிகை மலையில் வாழ்ந்தவர்- அகத்தியர்

57.   திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்கு செழுமை சேர்த்தவர்கள் மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார்,பெரியாழ்வார்குமரகுருபரர்,திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்

58.   திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் ஜி.யு.போப் , கால்டுவெல் , வீரமாமுனிவர்

59.   இளங்கோவடிகள் மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்- பொதிகை மலை

60.   அணி என்னும் சொல்லுக்கு என்று பொருள் - அழகு

61.   ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்வது - அணி

62.   "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி

63.   உவம உருபுகள் எவை - போலபுரைய, அன்ன, இன்ன, அற்றஇற்ற, மான, கடுப்ப, ஒப்பஉறழ

64.    “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவுஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எடுத்துக்காட்டு உவமை அணி

65.   "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியதுஎன்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி இல்பொருள் உவமை அணி

66.   "காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்ததுஎன்ற தொடரில் பயின்று வந்துள்ள அணி இல்பொருள் உவமை அணி

67.   உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை அணி - இல்பொருள் உவமை அணி

68.   பொருத்துக.

           1.     வறந்திருந்த - வறண்டிருந்த

           2.     புகவா- உணவாக

           3.     மடமகள் - இளமகள்

           4.     நல்கினாள் – கொடுத்தாள்

           5.     மாரி-மழை

69.   பொருத்துக.

           1.     குழி - நில அளவைப் பெயர்

           2.     சாண் - நீட்டல் அளவைப் பெயர்

           3.     மணி - முற்றிய நெல்

           4.     சீலை - புடவை

           5.     மடை - வயலுக்கு நீர் வரும் வழி

70.   பொருத்துக.

           1.     நாற்று - நடுதல்

           2.     களை - பறித்தல்

           3.     நீர் - பாய்ச்சுதல்

           4.     கதிர்- அறுத்தல்

71.   பொருத்துக.

           1.     தண்பொருநை - தாமிரபரணி

           2.     அக்கசாலை - பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்

           3.     கொற்கை - முத்துக்குளித்தல்

           4.     திரிகூடமலை - குற்றாலம்

72.   பொருத்துக

           1.     நாகரிகம் - Civilization

           2.     நாட்டுப்புறவியல் - Folklore

           3.     அறுவடை - Harvest

           4.     நீர்ப்பாசனம் - Irrigation

           5.     அயல்நாட்டினர் - Foreigner

73.   பொருத்துக.

           1.     வேளாண்மை - Agriculture

           2.     கவிஞர் - Poet

           3.     நெற்பயிர் - Paddy

           4.     பயிரிடுதல்- Cultivation

           5.     உழவியல் – Agronomy 


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham