Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

8th New Tamil Book Unit -1


நூல்வெளி
1.1 தமிழ்மொழி வாழ்த்து (பாரதியார்)
• கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்
• இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
• கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
• சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

நூல்வெளி
1.2 தமிழ்மொழி மரபு (தொல்காப்பியர்)
• தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
• தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
• இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
• பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92,93) இங்குத் தரப்பட்டுள்ளன.

நூல்வெளி
1.4 சொற்பூங்கா (இரா. இளங்குமரனார்)
• செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
• இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
• திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்