11th தமிழ் இயல் 2 ஐங்குறுநூறு |
---|
நூல் வெளி
• ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. • மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். • திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. • ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள்: குறிஞ்சித்திணை - கபிலர், முல்லைத்திணை - பேயனார், மருதத்திணை ஓரம்போகியார், நெய்தல் திணை அம்மூவனார், பாலைத்திணை - ஓதலாந்தையார். • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். • இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். • தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. • பேயனார், சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். • இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன. |
11th தமிழ் இயல் 4 நற்றிணை |
---|
நூல் வெளி
• நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்; • 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. • இது, நானூறு பாடல்களைக் கொண்டது. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. • நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. • இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். • போதனார்: சங்ககாலப் புலவர். • நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார். • நற்றிணையின் பேரெல்லை 12 அடி. • விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது. |
10th தமிழ் இயல் 4 பரிபாடல் |
---|
நூல் வெளி
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். • பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். • இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். |
minnal vega kanitham