| புறநானூறு (9th தமிழ் பழைய புத்தகம் இயல் – 3) |
|---|
|
ஆசிரியர் குறிப்பு:
• மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். • இவர், இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்; • பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் இயற்றியவர். • இப்பாடலில் இவர், உலகியல் உண்மையைக் கூறியுள்ளார். நூற்குறிப்பு: • புறநானூறு = புறம் + நான்கு + நூறு. • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதனால் புறநானூறு எனப் பெயர் பெற்றது. • புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும். • இஃது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. • இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. • இப்பாடல்கள் வாயிலாகப் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச்சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம். • இந்நூலின் சில பாடல்களை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் |
| புறநானூறு – குடபுலவியனார் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 2) |
|---|
|
நூல் வெளி
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. • இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. • இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது. |

minnal vega kanitham