Type Here to Get Search Results !

திருக்குறள் 9th தமிழ் புதிய/பழைய புத்தகம்

1
திருக்குறள் (9th தமிழ் பழைய புத்தகம் இயல் – 1)
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர்.
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
• இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர்.
நூற்குறிப்பு :
• திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது.
• ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது, திருக்குறள்.
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது;
அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
• இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை.
• திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர்.
• இன்றும் பலர் திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:
1. தருமர்
2. மணக்குடவர்
3. தாமத்தர்
4. நச்சர்
5. பரிதி
6. பரிமேலழகர்
7. திருமலையர்
8. மல்லர்
9. பரிப்பெருமாள்
10. காளிங்கர்

திருக்குறள் - திருவள்ளுவர்(9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3)
நூல் வெளி
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் திருக்குறள்.
• இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல்.
• இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது.
• இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
• உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
• தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.
• பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

திருக்குறள்
குறளும் ஏழு என்னும் எண்ணுப்பெயரும்
• திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
• திருக்குறள் எழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது.
• அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை எழு மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு.

Tags

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham