திருக்குறள் (ஏழாம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 1) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். • இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை. • இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு. • இவரின் காலம் கி.மு.31 என்பர். நூல் குறிப்பு : • குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள். • இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது. • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இதில், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துக் குறட்பாக்களென ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது. • இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது. • இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள். நூல் பயன்: • திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும். |
திருக்குறள் (ஏழாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம் இயல் 2) |
---|
நூல் வெளி
• திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர். • இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார். • தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும். • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது. • இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. • இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன. |
minnal vega kanitham