கம்பராமாயணம் |
---|
ஆசிரியர் குறிப்பு :
• கம்பர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார். • இவர் கம்பராமாயணம், ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். • இவர், குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார்; • திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றார். • இவர், கவிச்சக்கரவர்த்தி எனவும் கல்வியில் பெரியர் கம்பர் எனவும் போற்றப்படுகிறார். • இவரின் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர். நூற்குறிப்பு : • வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம். • கம்பர், இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார். • இது பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம் யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களை உடையது. |
திருக்குறள் |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர். • நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு. • இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர். நூற்குறிப்பு : • திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது. • ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது, திருக்குறள். • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது; • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. • இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை. • திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர். • இன்றும் பலர் திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றனர். • இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள். • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்: 1. தருமர் 2. மணக்குடவர் 3. தாமத்தர் 4. நச்சர் 5. பரிதி 6. பரிமேலழகர் 7. திருமலையர் 8. மல்லர் 9. பரிப்பெருமாள் 10. காளிங்கர் |
Super Anna🙏
பதிலளிநீக்குminnal vega kanitham