Type Here to Get Search Results !

9th Old Tamil Book Unit -1 [ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு]

1
கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு :
• கம்பர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.
• இவர் கம்பராமாயணம், ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
• இவர், குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார்;
• திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றார்.
• இவர், கவிச்சக்கரவர்த்தி எனவும் கல்வியில் பெரியர் கம்பர் எனவும் போற்றப்படுகிறார்.
• இவரின் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
நூற்குறிப்பு :

• வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
• கம்பர், இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார்.
• இது பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம் யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களை உடையது.

திருக்குறள்
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர், திருக்குறளில் அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர்.
• நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர் என்னும் சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
• இவரின் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என அறிஞர் கூறுவர்.
நூற்குறிப்பு :

• திரு + குறள் = திருக்குறள். திரு - செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல். குறள் - குறுகிய அடி உடையது.
• ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது, திருக்குறள்.
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது;
• அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
• இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலைப் போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை.
• திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர்.
• இன்றும் பலர் திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றனர்.
• இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
• திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:
1. தருமர்
2. மணக்குடவர்
3. தாமத்தர்
4. நச்சர்
5. பரிதி
6. பரிமேலழகர்
7. திருமலையர்
8. மல்லர்
9. பரிப்பெருமாள்
10. காளிங்கர்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham