இராமலிங்க அடிகளார் (6th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு
• இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். • இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். • பெற்றோர்இராமையா-சின்னம்மையார். • ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. • இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. • சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. • அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். • அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. • வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. • இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823முதல் 30.01.1874வரை. |
திருக்குறள் (6th Old Tamil Book) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். • இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். • இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. • இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. • இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார். நூல்குறிப்பு • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. • இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன. • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர். • திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது. • திருக்குறளில் 'அன்புடைமை', 'இனியவை கூறல் ஆகிய அதிகாரங்கள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை • கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு. • எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்) |
உ.வே.சாமிநாதர் (6th Old Tamil Book) |
---|
• ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
• இயற்பெயர் - வேங்கடரத்தினம் • ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. • அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன் • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா • தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம். • இவரின் தந்தை - வேங்கடசுப்பையா • காலம் - 19.02.1855 முதல் 28.04.1942 • 1942 இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது. • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது. • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். • இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. • பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர். • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது. • ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு • உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார். • நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர் • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர். • குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர். • தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. • ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா • உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார். • உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். • குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது (99) • உ.வே.சா பதிப்பித்த நூல்கள்: 1. எட்டுத்தொகை - 8 2. பத்துப்பாட்டு - 10 3. சீவகசிந்தாமணி - 1 4. சிலப்பதிகாரம் - 1 5. மணிமேகலை - 1 6. புராணங்கள் - 12 7. உலா - 9 8. கோவை - 6 9. தூது - 6 10. வெண்பா நூல்கள் - 13 11. அந்தாதி - 3 12. பரணி - 2 13. மும்மணிக்கோவை - 2 14. இரட்டைமணிமாலை - 2 15. பிற பிரபந்தங்கள் – 4 |
Maths notes podungal pls
பதிலளிநீக்குminnal vega kanitham