Type Here to Get Search Results !

7th New Book நூல் வெளி (Unit 4, 5, 6)

0
நூல் வெளி (7th New Tamil பாடம் 4.1 கலங்கரை விளக்கம்)
• கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
• இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
• இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
• பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
• இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
• வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

நூல் வெளி (7th New Tamil பாடம் 4.2 கவின்மிகு கப்பல்)
• மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
• மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
• அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
• இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
• இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 4.4 ஆழ்கடலின் அடியில்)
• அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
• இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
• அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
• எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்.
• அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று.

நூல் வெளி (7th New Tamil பாடம் 5.1 இன்பத்தமிழ்க் கல்வி)
• கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
• இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
• பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 5.2 அழியாச்செல்வம்)
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
• இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
• நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
• திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
• இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

நூல் வெளி (7th New Tamil பாடம் 5.3 வாழ்விக்கும் கல்வி)
• திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
• நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
• வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது.
• இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 5.4 பள்ளி மறுதிறப்பு)
• பள்ளி மறுதிறப்பு கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
• இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்;
• “கனவு” என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
• பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

நூல் வெளி (7th New Tamil பாடம் 6.1 ஒரு வேண்டுகோள்)
• தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
• இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
• இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
• மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
• பாடப்பகுதியிலுள்ள கவிதை பெய்து பழகிய மேகம் என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

நூல் வெளி (7th New Tamil பாடம் 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்)
• காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
• மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர்
• காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
• இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்